இன்னும் எஞ்சி இருக்கும்
சில நிமிடங்களை
எண்ணிக் கொண்டு
கடிகாரத்தை பார்த்து
மனம் ஒரு வித பதட்டத்தோடு
புத்தாண்டை
நோக்கி என் மனம்

புத்தாண்டை நோக்கி
எல்லோர் மனமும்
குதூகலத்தில்...

வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ள
ஆயத்தமாகிக் கொண்டு
பரிசுகள் பரிமாற்றமும்
நடந்துக் கொள்ளும்
நேரம் இது...

இந்த வருடமாவது
நல்ல வருடமாக
அமையாத என்று
எண்ணாத உள்ளங்கள்
உண்டோ??

சென்ற வருட துக்கங்கள்
எல்லாம் நெஞ்சை துளைக்க..
போதும்...
இனி வரவே வேண்டாம்
இந்த நிலை.. என
ஏங்கி கொள்ளும்
மனதாய் போனது...

உங்கள் துக்கங்கள்
சந்தோஷமாக மாறும்..
ஏசுபிரானின் வாக்கு..
சென்ற வருட துக்கங்கள்
மறந்து எல்லோருக்கும்
நல்ல வருடமாக அமைய
பிராத்திப்போம் இறைவனை....

ஒவ்வொருவரின்
ஏக்கங்களும், கனவுகளும்
சந்தோஷமே காணாத
உள்ளங்கள்
எல்லாம் சந்தோஷத்தில்
நிறையும் வருடமாக
அமைதல் வேண்டும்...

எங்கள் இலங்கைத் தமிழ்
மக்களுக்கு
இந்த வருடமாவது
சந்தோஷத்தை
நிம்மதியை,
ஒரு விடுதலையை
தந்து விடு இறைவா....