Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: ஒரு நிமிடக் கதை- 'தீர்ப்பு'

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0

    ஒரு நிமிடக் கதை- 'தீர்ப்பு'

    அவசரமாகக் கிளம்பிக் கொண்டு இருந்த நீதிபதி கணேசனை, மகனுடைய அலறல் 'டென்ஷன்'படுத்தியது. தன் அக்காவின் கையிலிருந்த பொம்மை தான் வேண்டும் எனறு அடம் பிடித்து அழுது கொண்டு இருந்தான் அவன்.

    "தம்பிக்கு அந்தப் பொம்மையைக் கொடுத்துத் தொலைச்சா தான் என்ன?"
    என்று தம் பெண்ணின் முதுகில் ஓங்கி ஓர் அறை வைத்தார் அவர்.

    "அந்தப் பொம்மை ஒடைஞ்சிருக்குப்பா! ஆணி, தம்பி கையைக் கிழிச்சுடும்னு தான் கொடுக்கலே. அதைப் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க. பரவாயில்ல...கோர்ட்டிலேயும் இது மாதிரி என்ன ஏதுன்னு விசாரிக்காம, யாராவது நல்லவருக்குத் தண்டனை கொடுத்திடாதீங்க!" என்று விசும்பினாள் அவள்.

    தம் பெண் முன் குற்றவாளியாகத் தலைகுனிந்து நின்றார் நீதிபதி கணேசன்!


    நன்றி:- ஆனந்த விகடன்.
    Last edited by கலையரசி; 25-12-2009 at 02:42 PM.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஒரு நீதிபதி பொம்மையை கொடுக்கவில்லை என்பதால் போட்டு அடிப்பாரா? நம்ம முடியாத கதை.

    இது ஆனந்தவிகடனில் வந்ததா?

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    இப்படியும் நடக்கக்கூடும்!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    ஒரு நீதிபதி பொம்மையை கொடுக்கவில்லை என்பதால் போட்டு அடிப்பாரா? நம்ம முடியாத கதை.

    இது ஆனந்தவிகடனில் வந்ததா?
    பின்னூட்டம் எழுதிய ஆரென் அவர்களுக்கு நன்றி.
    இது நான் எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்தது. அதனால் கதை பகுதியில் இதைப் பதிந்ததாக ஞாபகம். ஆனால் வேறு யாரோ எழுதியது இது என்று நினைத்துப் 'படித்ததில் பிடித்தது' பகுதிக்கு மாற்றியிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
    நீதிபதியாக இருந்தாலும் வேறு யாராக யிருந்தாலும் காலை நேரத்தில் கிளம்பும் அவசரத்தில் குழந்தைகள் அடம் செய்து அழும் போது எதையும் விசாரிக்காமல் ஓர் அடி கொடுப்பதுண்டு.
    அவரும் ஒரு மனிதர் தானே. எனவே பெரும்பாலான வீடுகளில் இது நடக்கக் கூடியதே.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by குணமதி View Post
    இப்படியும் நடக்கக்கூடும்!
    பின்னூட்டம் எழுதிய குணமதி அவர்களுக்கு நன்றி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பக்கம் பக்கமாய் எழுதி இருப்பதைக் காட்டிலும், இது போன்ற சில வரிக்கதைகள் மனதில் நன்றாகவே தைக்கின்றன; மனதையும் தைக்கின்றன.
    நீதிபதி என்றாலும் கூட எல்லா நேரங்களிலும் நீதியை கடைபிடிப்பதில்லை என்பது முற்றிலும் உண்மை. எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு என்ற குறளாக அம்மகளின் குரல் ஒலிக்கிறது. பாராட்டுகிறேன் நண்பரே.

  7. #7
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    காலை நேர டென்ஷனில் இது ரொம்பவே சகஜம்.. சோ ஸ்வீட் குட்டிப்பெண் அழகா அப்பாவுக்கு அறிவுரை சொன்னது. இப்ப ஆபிசுக்கு கிளம்பிட்டு இருக்கும்போது மகனின் ஸ்கூல் பேக்ல எல்லாம் இருக்கான்னு செக் பண்ணும்போது ரப்பர் மிஸ்ஸிங். புக் ஒன்னு எடுத்துவைக்கலை. பென்சில் ஷார்ப் செய்யலை... அவசர நேரத்தில் மகன் கஞ்சி குடிச்சிட்டு இருக்கும்போது எங்க ரப்பர் தேடுன்னு அவனையும் டென்ஷன் செய்து அவன் கஞ்சியை கீழ கொட்டி அம்மாவுக்கு கோபம் வந்து குழந்தையை அடித்து அழவெச்சு எல்லாரும் டென்ஷன் ஆகி.....

    கதை குட்டி ஆனால் அர்த்தம் பொதிந்தது. வாழ்த்துக்கள்...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஒவ்வொரு முறையும் தீர்ப்பை எழுதும்போது நிச்சயம் மகளின் இந்த வார்த்தை அந்த நீதிபதியின் மனதில் நிச்சயம் வந்து போகும். நிரபராதிகளுக்குத் தங்கள் பக்கத்து நியாயத்தை விளக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

    நல்ல கதை. வாழ்த்துகள் கலையரசி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    பக்கம் பக்கமாய் எழுதி இருப்பதைக் காட்டிலும், இது போன்ற சில வரிக்கதைகள் மனதில் நன்றாகவே தைக்கின்றன; மனதையும் தைக்கின்றன.
    நீதிபதி என்றாலும் கூட எல்லா நேரங்களிலும் நீதியை கடைபிடிப்பதில்லை என்பது முற்றிலும் உண்மை. எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு என்ற குறளாக அம்மகளின் குரல் ஒலிக்கிறது. பாராட்டுகிறேன் நண்பரே.
    பாரதி அவர்களின் பாராட்டுக்கு நன்றி
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by மஞ்சுபாஷிணி View Post
    காலை நேர டென்ஷனில் இது ரொம்பவே சகஜம்.. சோ ஸ்வீட் குட்டிப்பெண் அழகா அப்பாவுக்கு அறிவுரை சொன்னது. இப்ப ஆபிசுக்கு கிளம்பிட்டு இருக்கும்போது மகனின் ஸ்கூல் பேக்ல எல்லாம் இருக்கான்னு செக் பண்ணும்போது ரப்பர் மிஸ்ஸிங். புக் ஒன்னு எடுத்துவைக்கலை. பென்சில் ஷார்ப் செய்யலை... அவசர நேரத்தில் மகன் கஞ்சி குடிச்சிட்டு இருக்கும்போது எங்க ரப்பர் தேடுன்னு அவனையும் டென்ஷன் செய்து அவன் கஞ்சியை கீழ கொட்டி அம்மாவுக்கு கோபம் வந்து குழந்தையை அடித்து அழவெச்சு எல்லாரும் டென்ஷன் ஆகி.....

    கதை குட்டி ஆனால் அர்த்தம் பொதிந்தது. வாழ்த்துக்கள்...
    வாழ்த்துக்கு நன்றி மஞ்சுபாஷினி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஒவ்வொரு முறையும் தீர்ப்பை எழுதும்போது நிச்சயம் மகளின் இந்த வார்த்தை அந்த நீதிபதியின் மனதில் நிச்சயம் வந்து போகும். நிரபராதிகளுக்குத் தங்கள் பக்கத்து நியாயத்தை விளக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

    நல்ல கதை. வாழ்த்துகள் கலையரசி.
    முன்பெல்லாம் குழந்தைகளுக்குள் சண்டை என்றால் என்ன பிரச்சினை என்றெல்லாம் விசாரிக்காமல், 'ஏன் தம்பியை அழ உடுறே?' என்று மட்டும் கேட்டு மூத்த குழந்தைக்குத் தான் அடிகொடுப்பார்கள். பெரிய குழந்தை அடியை வாங்கிக் கொண்டு அழும். பெற்றோரை எதிர்த்துப் பேசாது. ஆனால் இப்போதோ தவறு செய்யாத குழந்தையைத் தண்டித்தால் பெற்றோரின் தவறைச் சுட்டிக்காட்டி அறிவுரை சொல்லும் அளவிற்குக் குழந்தைகளுக்கு வயதுக்கு மீறிய அறிவு இருக்கிறது.
    வாழ்த்துக்கு சிவா.ஜி அவர்களுக்கு நன்றி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    மனிதர்கள் சிறியவர்களாக இருந்து பெரியவர்கள் ஆனாலும் காலம் முழுக்க குழந்தைகளிடம் கத்துக்க இன்னும் நிறைய விடயங்கள் இருக்கு..!!

    அதில் ஒரு விடயத்தை கொண்டு ஒரு நிமிட கதையை தந்த கதாசிரியரின் திறமைக்கு பாராட்டுக்கள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •