Page 83 of 83 FirstFirst ... 33 73 79 80 81 82 83
Results 985 to 992 of 992

Thread: குறள் யாப்போம் - ஈறு தொடங்கி!

                  
   
   
  1. #985
    புதியவர்
    Join Date
    12 Feb 2013
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    9,458
    Downloads
    0
    Uploads
    0
    கூறுகெட்ட தமிழாஉன் “விஸ்வரூப”க் கூச்சலை
    விட்டு வெளியிலே வா ..!!






    ( நமக்கும் கவிதைக்கு்ம் ரொம்ம்ம்ம்ம்ப தூரமுங்கோ. அதுவும் வெண்பா.... அப்பப்பா... அது வேம்பு பா. அதோட வம்பே நமக்கு வேண்டாம்பா -னு அது பக்கம் கூட தல வச்சி படுக்கறது இல்லீங்கோ.
    அப்படியும் மேற்படி பிதற்றல் வெண்பா வகையறாக்கு ஒத்து போகும் பட்சத்துல அதோட ஒட்டு மொத்த பெருமையும் ( அப்படின்னு ஒன்னு இருந்தா...) அது திரு. ரமணி அவரோட ”கவிதையில் யாப்பு” பயிற்சி திரிக்கு தான் சேரோணுமுங்கோ.

    அப்படி இல்லாம தளை தட்டினா, அதுக்கு இருக்கவே இருக்கு என்னோட தலை.... தட்டிடுங்கோ. )

    பின் குறிப்பு: கமலின் காற்றாடிகள் யாரும் அடிக்க வராதீங்னா... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்களாமுங்கோ .. !!
    Last edited by ஷக்தி; 21-02-2013 at 11:24 AM.

  2. #986
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    வாருங்கள் வந்திங்கே வக்கணையாய் வண்டமிழில்
    தாருங்கள் தக்க கருத்து.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  3. #987
    புதியவர்
    Join Date
    12 Feb 2013
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    9,458
    Downloads
    0
    Uploads
    0
    கருத்தொண்ணு சொல்லணும்னு உள்மனசு சொல்லுச்சு
    உளறாம "சும்மா இரு"

  4. #988
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஷக்தி View Post
    கருத்தொண்ணு சொல்லணும்னு உள்மனசு சொல்லுச்சு
    உளறாம "சும்மா இரு"
    புதுப்பா எழுதுவது போல் கொச்சை வழக்கில் மரபுப்பா எழுதுவது விரும்பத் தக்கதன்று.

    இனி அடுத்தது -

    இருள்சேர் வினைநீக்கி இன்பம் விளைப்போம்
    மருள்நீக்கி மாண்புறு வோம்.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  5. #989
    புதியவர்
    Join Date
    12 Feb 2013
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    9,458
    Downloads
    0
    Uploads
    0

    பாமர தமிழ்-ல வெண்பா வடிச்சா குத்தமுங்களா...??

    ( கொச்சைத் வழக்கு...??

    "படிப்பு வளருது பாவம் தொலையுது
    படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
    போவான் போவான் ஐயோ என்று"

    "சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது
    தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது
    எட்டு லச்சுமியும் ஏறி வளருது"

    இந்த வரிகள் யாருக்குச் சொந்தமானவைனு தெரியுதுங்களா...??
    சாக்ஷாத் மஹாகவி சுப்ரமணிய பாரதியாருடையது.


    "காலா காலருகே வாடா
    சற்றே உன்னை மிதிக்கிறேன்"
    இதுவும் பாரதி தானுங்னா.

    "மாடு மேய்க்கும் கண்ணே
    நீ போக வேண்டாம் சொன்னேன்
    காய்ச்சின பாலு தாரேன்
    கல்கண்டு சீனி தாரேன்
    கை நெறைய வெண்ண தாரேன் "
    - கர்னாடக சங்கீத கட்சேரிகள்-ல ஆருணா சாய்ராமோட குரல்-ல இந்த பாட்ட கேக்கணுமே...



    "கொல்லையில தென்ன வெச்சி
    குருத்தோல பெட்டி செஞ்சி
    சீனி போட்டு நீ திங்க
    செல்லமாய் பிறந்தவளோ"
    -ஏ ஆர் ரஹுமானின் இசையில் மண்ணின் மணம் கமழும் தாலாட்டு.


    "தண்ணி தொட்டி தேடி வந்த
    கன்னு குட்டி நான்"
    - மதுவாலும் மாதுவாலும் திசை மாறிப் போன ஒரு கலைங்ஞனின் நிலை இளையராஜாவோட இசையில்


    "தஞ்சாவூரு மண்ணு எடுத்து
    தாமிரபரணி தண்ணிய விட்டு
    சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம"

    "அம்மி அரைச்சவ கும்மி அடிச்சவ
    நாட்டுப்புறத்துல சொன்னதப்பா "

    இப்படி சொன்னா தப்பா... ??

    இதெல்லாம் கொச்சை தமிழ்னு சொல்ல வர்ரீங்களா..??


    அப்படி பார்த்தா "நாட்டுப்புற பாடல்கள்"னு சொல்ற நடவு பாட்டு, தெம்மாங்கு, ஏற்றப்பாட்டு, தாலாட்டு ஒப்பாரி எல்லாமே கொச்சை தானுங்க்ளா...??

    இல்லீங்னா இதெல்லாமே வழக்கு தமிழ் - பேச்சுத் தமிழ் - பாமரத் தமிழ்.

    இப்படி பாமர தமிழ்-ல வெண்பா வடிச்சா குத்தமுங்களா...??

    எந்த ஒரு படைப்பும் எல்லோரையும் - பாமரனையும் போய் சேரனும்னு தானேங்னா படைக்கப் படுது.

    அவ்ளோ ஏனுங்க, இந்த திரியையும் நீங்க அந்த நோக்கத்தோட தானே தொடங்கி இருப்பீங்க ?

    பாமர வழக்குல ஒரு விஷயம் சொல்ற போது அது மக்கள்கிட்ட சுலபமா போய் சேராதுங்களா...??

    மரபுக்கவிதையா வேண்டவே வேண்டாம்னு சொல்றவங்களும் படிக்க வருவாங்க தானே

    அப்படி படிக்க வர்றவங்களுக்கு, பேச்சு வழக்கில் உபயோகிற வார்த்தைகள வச்சும் வெண்பா வடிக்கலாம்னு தெரிய வரும்போது நாமும் முயற்சி பண்ண வாய்ப்பு நெறைய இருக்கு இல்லீங்களா...??

    வெண்பா எழுத "வரும் ஆனா வராது" அப்படின்னு தவிக்கிற எத்தனையோ நெங்சங்களுக்கு அந்த "வரும் ஆனா வராது" அப்படிங்கற வாக்கியத்துல சின்ன மாற்றம் பண்ணினாலே போதும் ( "எழுதவரும் ஆனா வராது") அது வெண்பாவொட இலக்கணத்துக்குள்ள வந்துடும், நடைமுறையில் பயன்படித்துற வார்த்தைகளையும் வாக்கியங்களையும் வெச்சும் எட்டாக்கனியா இருக்கற வெண்பாவ எட்டிட முடியும்னு தெரிய வர்ற போது, படிப்பவர்களும், படைப்பவர்களும் அதிகரிக்க மாட்டாங்களோ...!!


    இன்னமும் உங்களுக்கு,இதெல்லாம் கொச்சைத் தமிழ் இதுகளுக்கு உங்களொட திரியில் இடம் இல்லைனு தோன்றினால் , "இது சுத்தமான வெண்பாவினால் செய்யப்பட்டது இல்லை" அப்படின்னு சொல்லி, இந்த பதிலையும், இதற்கு காரணமான அந்தக் கவிதை?? உளறல்?? ஏதோ ஒன்னு, அந்தப் பதிவையும், நீக்கி விடப் பரித்துரைக்குறேனுங்கோ....!!!

    பின் குறிப்பு:
    சொல்லுல குத்தமில்ல பொருள்ல தான் குத்தமிருக்குனு சொல்றீங்களா..?

    அந்த பாட்டு, வழக்கு சொல்லாடலில், பாமரத்தனமாக தோன்றினாலும்., அதுல ஒரு ஆழ்ந்த கருத்து இருக்குங்னா. ( என்னோட கவிதைய பத்தி நானே சொல்லிக்க வேண்டி இருக்கு. என்ன கொடும சரவணா இது... !! )

    வாழ்க்கையை வெறுத்து, கோபுரத்து மேல இருந்து குதிக்கப் போன அருணகிரிநாதருக்கு, நம்ம தமிழ் கடவுள் முருகரு தடுத்தாட்கொண்டப்போ சொன்னதுங்ன அது.

    " சும்மா இரு " - " சொல்லற ".

    கந்தர் அநுபூதி-லயும் கந்தரலங்காரத்துலயும், அருணகிரிநாதரே,
    "அம் மாப்பொருள்" என்னன்னு புரியாம குழம்பி தவிச்ச விஷயமுங்கோ. நமக்கு அம்புட்டு சீக்கிரம் கை வந்துடுமா என்ன....

    கண்டிப்பா ஒரு தனி இழை தொடங்கி ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ண வேண்டிய சப்ஜெக்டுங்னா. .

    இப்போவே இது பரிமேலழகர் உரையை விட ரொம்ப பெரிய
    விளக்கமா போய்ட்டதால தேவைப்பட்டால் இன்னொரு பதிவில் பார்த்துக்கலாமுங்கோ.

    =ஷக்தி.

    Last edited by ஷக்தி; 24-02-2013 at 06:34 PM.

  6. Likes ஜான் liked this post
  7. #990
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மாண்புறுவோம் தெய்வப் புலவர்தம் நூல்படித்தால்
    வீணே பிறநூல் படிப்பு.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #991
    புதியவர்
    Join Date
    12 Feb 2013
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    9,458
    Downloads
    0
    Uploads
    0
    படிச்சதெல்லாம் வீணாவேப் போயிடுமா கண்டதையும்
    நீர்படிச்சா பண்டிதன் தான்.

  9. #992
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பண்டிதன்தான் நற்றமிழைப் போற்றியதாய் எண்ணாதீர்
    நொண்டியும் அந்தகனும் உண்டு.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 83 of 83 FirstFirst ... 33 73 79 80 81 82 83

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •