இன்று நமதுள்ளம் பொங்கும் புதுவெள்ளம்
மன்றத்தின் பத்தாண்டு பார்.
இன்று நமதுள்ளம் பொங்கும் புதுவெள்ளம்
மன்றத்தின் பத்தாண்டு பார்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
பத்தாண்டு பார்த்திடும் பன்மலராம் மன்றத்தின்
புத்தாண்டைப் போற்றினேன் யான்
யானெனது என்னும் செருக்கறுக்க அஃதொன்றே
வானுலகு செல்லும் வழி.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது
அஃதென்பது யாதெனின் முப்பொழுதும் முயற்சியே
உயிர் மூச்சாய்க் கொளல்
வீழ்வது வெட்கமில்லை வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் !!!
திக்கெட்டும் தமிழ் மணக்க சங்கே முழங்கு !!!
சுசிபாலா அவர்களின் முயற்சிக்கு நன்றி. குறள்வெண்பா இலக்கணம் பயின்றபின் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். மன்றத்தின் பழைய திரிகளைப் பார்க்கவும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
சுசிபாலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். குறள் வெண்பாவின் பொது இலக்கணத்தில் உங்கள் கவி வரவில்லை என்றாலும் "குறட்டாழிசை" என்று இதனைக் கொள்ளலாம். ஐயா கூறுவதைப்போல் வெண்பா திரிகள் இருந்தால் அதில் சற்று பயிற்சி செய்யுங்கள். ஒருவாரம், பத்து நாட்களுக்குள் நீங்கள் குறள் வெண்பா இயற்றி விடலாம்
அதுவென்றும் இதுவென்றும் ஆயிரம்பேர் சொல்வார்
எதுவென்று ஆய்தல் கடன்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
கடன்பட்டு கஞ்சியும் இல்லா உழவர்
உடன்மரித்துப் போகின்றார் இன்று
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன்; 23-02-2012 at 02:06 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks