சொல்ல இனிக்கும் தமிழ்மொழியை இப்புவியில்
வெல்ல ஒருமொழி சொல்.
சொல்ல இனிக்கும் தமிழ்மொழியை இப்புவியில்
வெல்ல ஒருமொழி சொல்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
ஒருமொழிச் சொல்லில் உளறிக் குளறின்
வருமந்தக் காதல் அறி.
காதல் அறிந்திலேன் காமம் அறிந்திலேன்
பேதைநான் தோன்றியது வீண்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
வீண்பேச்சு வெட்டிவாதம் செய்தே புலம்புவார்
காணேன் செயல்வீரர் என்று.
என்று வருவான் எமன்கொல்? அதன்முன்னே
நின்றுநிற்கும் நல்லறம் செய்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நல்லறம் செய்திடுக நல்லதுவே ஆயினும்
இல்லறத்தை நன்றாய் இயக்கு
இயக்குவா னிச்சையில் இச்சகம் என்றும்
இயக்குனன் ஈசன் அறி.
அறிவிலார் கண்ணும் உளதாம் அறிந்தார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
சொற்சுவை யாங்கே சுயமாய் நிறைந்ததாய்
பொற்குவையாய் சொக்கும் கவி.
கவித்திறம் தேர்ந்த கருத்தாக்கம் தாயின்
மொழித்திறம் தோய்ந்தகவித் தேன்.
தேன்மொழியே! வான்மழையே! கூன்பிறையே! நீயிலையேல்
நானிலையே நற்றுணையே வா!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
வாவென்று வந்தோரை வாழ்த்தினோம் வந்தனமாய்
தாவென்றார் தந்தோம்நாம் தாழ்ந்து
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன்; 14-08-2012 at 05:08 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks