தாழ்ந்தது போதும் தருக்கிஎழு எந்நாளும்
வீழ்ந்து கிடப்பது வீண்.
தாழ்ந்தது போதும் தருக்கிஎழு எந்நாளும்
வீழ்ந்து கிடப்பது வீண்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தருக்கிஎழு= தருக் / கிஎ / ழு = நிரை,நிரை,நேர் = கருவிளங்காய்
இது தவறு எனில் , விளக்கவும்; திருத்திக்கொள்கிறேன்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
சரி . நீங்கள் சொன்னதை ஏற்றுக் கொள்கிறேன். திருத்திக் கொண்டேன்.
தாழ்ந்தது போதும் தருக்கியெழு எந்நாளும்
வீழ்ந்து கிடப்பது வீண்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
வீணாகச் செல்வத்தை வீண்விரயம் செய்கின்றார்
காணாத காட்சிகளைக் கண்டு
கண்டுயிர்த்தேன் காரிகையின் கண்ணிரண்டை அல்லாது
பண்டே மடிந்தேன் அறி.
அறிந்தவன் எல்லாம் அறிந்தவன் அல்ல
முறிக்குமே தீம்பாலை உப்பு.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
உப்புக்கல் கொண்டொருவன் ஓர்சிற்பம் செய்ததனை
தப்பாய்த் தரைமீது வைத்து
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks