Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: திறப்போம் நம் மனக் கதவுகளை...!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0

    திறப்போம் நம் மனக் கதவுகளை...!

    மனங்கள் மயங்கும்
    மனிதர்கள் கசங்கும்
    சந்தை வீதியில்
    சூரியன் சுட்டெரிக்கும்
    காலை வேளையில்
    கையில் விளக்குடன்
    மனிதனைத் தேடினான் ஒருவன்….!

    மாடடைக்கும் கொட்டிலில்
    மார்கழிக் குளிரிரவில்
    'மனிதன் இருக்கிறான்
    மனம் மட்டும் மாறட்டும்'
    எனப் பிறந்தான் ஒருவன்…!

    அடித்தால் அடி உதைத்தால் உதை
    வெட்டினால் வெட்டு
    என்று வன்முறை வளர்த்த தேசத்தில்

    ஒரு கன்னத்திற்கு மறுகன்னத்தையும்
    மேலாடை கேட்டால் உள்ளாடையையும்
    கொடுத்துவிடச் சொன்ன தனிமனிதன்…!

    உன் கண்ணிண் உத்திரத்தை நீக்கிவிட்டு
    பிறன் கண்ணின் துரும்பைப் பார் என்றவன்

    இதுவரை பாவம் செய்யாதவன்
    எறியட்டும் முதல் கல் என்று
    எவரையும் தீர்ப்பிடாதவன்.

    உனக்கென்ன வேண்டுமென கேட்கிறாயோ
    அதையே பிறனுக்கும் கொடுக்கச் சொன்னவன்!

    தேவாலயங்களைத் துறந்து விட்டு
    தேகாலயங்களைத் திறக்கச் சொன்னவன்…!


    மதத்தின் மதத்தை மிதித்து
    மனிதத்தை மதித்தவன் …..!

    அவன் ஒரு ஏழை

    அவன் ஒரு தொழிலாளி

    அவன் ஒரு சாதாரணன்…

    உன் எதிரிலேயே
    தெருவில் அலைந்து திரியும்
    வழிப்போக்கன்…!

    மாளிகையும் மஞ்சள் விளக்குகளும்
    மல்லிகை மெத்தையும் மஞ்சமும்
    கொஞ்சமும் தேவையில்லை யவனுக்கு…!

    நொறுங்கி விட்ட இதயங்களை
    பொறுக்கிச் சேர்க்க….!

    பிரிந்து விட்ட மனங்களை
    இணைத்துச் சேர்க்க…!

    இனமென்றும் மொழியென்றும்
    வீடென்றும் நாடெனறும்
    மதமென்றும் ...
    கருகிய மனங்களைக் கட்டிக் கோர்க்க…!

    வருகிறான் மீண்டும்....

    வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்குண்டு
    கிழிந்து நைந்த
    கந்தலாடை மனங்களால்
    படுக்கை விரிப்போம்..!

    பிறக்க இடமின்றி
    ஒவ்வொரு கதவாகத் தட்டிய படியே..
    வருகிறான்....

    திறந்து வைப்போம் நம் மனக் கதவுகளை…!

    மீண்டும் பிறக்கட்டும் மனிதம் -நம்
    மனங்களில்…..!

    இனியக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்….!
    Last edited by செல்வா; 23-12-2009 at 12:37 PM.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    கிறிஸ்துமஸுக்கு ஏற்ற கவிதை.. அருமை செல்வா

    மனித நேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும்.
    மற்றவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    காலத்திற்கு ஏற்ற கவிதை, ஒவ்வொரு வார்த்தையும் நியம்.இறைவன் அளித்த சிறந்த பரிசு வாழ்க்கை, அதை ஒற்றுமையுடனும்,சந்தோசமாகவும் வாழ பழகிக்கொள்வோமாக.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    கிறிஸ்துமஸுக்கு ஏற்ற கவிதை.. அருமை செல்வா

    மனித நேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும்.
    மற்றவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும்.
    வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா...

    Quote Originally Posted by ஜனகன் View Post
    காலத்திற்கு ஏற்ற கவிதை, ஒவ்வொரு வார்த்தையும் நியம்.இறைவன் அளித்த சிறந்த பரிசு வாழ்க்கை, அதை ஒற்றுமையுடனும்,சந்தோசமாகவும் வாழ பழகிக்கொள்வோமாக.
    நன்றி ஜனகன்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்குண்டு
    கிழிந்து நைந்த
    கந்தலாடை மனங்களால்
    படுக்கை விரிப்போம்..!
    இந்த வரிகள் ஆழமும் அழகுமாய் மிளிர்கின்றன.

    கட்டில் கூட இல்லாமற் பிறந்தவரை,
    பகட்டில் பிறக்கவைக்கின்றது உலகம்...

    அதற்காக,
    அலங்காரங்களே தேவையில்லை என்று ஒதுக்கிவிடவும் கூடாது.
    இந்த அலங்காரங்கள் எத்தனையோ குடும்பங்களின் உயிர்காக்கும் தொழில் என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும்.

    அளவு மீறாத அலங்காரங்களோடு,
    அழகாய்க்கொண்டாடுவோம்,
    நத்தார் திருநாளை.

    அனைத்து உறவுகளுக்கும்,
    “நத்தார், புதுவருட நல்வாழ்த்துகள்”

    அர்த்தக் கவிதைக்குப் பாராட்டுக்கள் செல்வாவுக்கு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மனங்களை வன விலங்குகளாக்கியவர்களிடம் இந்த வார்த்தைகள் எடுபடுமா..? எடுபட வேண்டும் என்பதே நமது விருப்பம்.

    விழா சிறப்பே நடந்து முடிந்தது. புத்தாண்டு முடிந்ததும் அடுத்த வருடத்திற்கு தேவை என மரங்கள் கட்டப்படும், விளக்குகளை அணைத்து.

    மனமும் மரமாகி விட்டதாலோ என்னவோ, கதவை திறக்க சொல்லி இருக்கிறீர்கள்.

    அம்மரத்தின் ஈரம் காயாமல் இருக்கட்டும்.

    அவ்வப்போது செல்வாவின் விரல்களில் கவிதைகள் பூக்கட்டும்.

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அடைக்கப்பட்ட மனக்கதவுகள் திறக்கட்டும், அன்று சாதரணனாய் கொட்டிலில் ஜனித்த மனிதம்...ஒவ்வொரு வீட்டிலும் ஜனிக்கட்டும்.

    மதத்தின் மதம் மிதித்த......ஆழமான வரிகள் செல்வா. அர்த்தமுள்ள வரிகளுக்கு அண்ணனின் பாராட்டுக்கள்+வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    நல்ல கிருஸ்துமஸ் கவிதை தோழரே... வாழ்த்துக்கள்..

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எத்தனைகாலம்தான் அன்பென்ற மழையிலே..

    வந்த புதிதில் நீ எழுதிய கவிதைக்கு சாம்பவியின் பின்னூட்டம்.

    அந்த மாதிரியே இந்தக் கவிதையும் புதுப் பரிணாமம் எடுத்து.

    அழுக்கான மனங்களில்(உம்) ஆண்டவன் அவதரிக்கிறான்.
    வளர்ந்து மனங்களையும் மனிதர்களையும் சுத்திகரிக்கிறான்.

    தொட்டில் குழந்தை சொல்லும் இன்னொரு சேதி.

    ஆனால்,
    அழுக்குகள் கூட தெய்வீகமாக இருக்கட்டும்
    என்பதே அதன் அடித்தட்டு இரகசியம்.

    வாழ்த்துக்கள் பங்காளி. தொடர்ந்து பங்களி.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    இந்த வரிகள் ஆழமும் அழகுமாய் மிளிர்கின்றன.

    கட்டில் கூட இல்லாமற் பிறந்தவரை,
    பகட்டில் பிறக்கவைக்கின்றது உலகம்...

    அதற்காக,
    அலங்காரங்களே தேவையில்லை என்று ஒதுக்கிவிடவும் கூடாது.
    இந்த அலங்காரங்கள் எத்தனையோ குடும்பங்களின் உயிர்காக்கும் தொழில் என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும்.

    அளவு மீறாத அலங்காரங்களோடு,
    அழகாய்க்கொண்டாடுவோம்,
    நத்தார் திருநாளை.

    அனைத்து உறவுகளுக்கும்,
    “நத்தார், புதுவருட நல்வாழ்த்துகள்”

    அர்த்தக் கவிதைக்குப் பாராட்டுக்கள் செல்வாவுக்கு...
    நன்றி அக்னியாரே...
    உமக்கும் எனது வாழ்த்துக்கள்.

    Quote Originally Posted by பாரதி View Post
    மனங்களை வன விலங்குகளாக்கியவர்களிடம் இந்த வார்த்தைகள் எடுபடுமா..? எடுபட வேண்டும் என்பதே நமது விருப்பம்.

    விழா சிறப்பே நடந்து முடிந்தது. புத்தாண்டு முடிந்ததும் அடுத்த வருடத்திற்கு தேவை என மரங்கள் கட்டப்படும், விளக்குகளை அணைத்து.

    மனமும் மரமாகி விட்டதாலோ என்னவோ, கதவை திறக்க சொல்லி இருக்கிறீர்கள்.

    அம்மரத்தின் ஈரம் காயாமல் இருக்கட்டும்.
    பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அண்ணா...

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அடைக்கப்பட்ட மனக்கதவுகள் திறக்கட்டும், அன்று சாதரணனாய் கொட்டிலில் ஜனித்த மனிதம்...ஒவ்வொரு வீட்டிலும் ஜனிக்கட்டும்.

    மதத்தின் மதம் மிதித்த......ஆழமான வரிகள் செல்வா. அர்த்தமுள்ள வரிகளுக்கு அண்ணனின் பாராட்டுக்கள்+வாழ்த்துகள்.
    நன்றி அண்ணா....

    Quote Originally Posted by கா.ரமேஷ் View Post
    நல்ல கிருஸ்துமஸ் கவிதை தோழரே... வாழ்த்துக்கள்..
    நன்றி கா.ரமேஷ்

    Quote Originally Posted by அமரன் View Post
    எத்தனைகாலம்தான் அன்பென்ற மழையிலே..

    வந்த புதிதில் நீ எழுதிய கவிதைக்கு சாம்பவியின் பின்னூட்டம்.

    அந்த மாதிரியே இந்தக் கவிதையும் புதுப் பரிணாமம் எடுத்து.

    அழுக்கான மனங்களில்(உம்) ஆண்டவன் அவதரிக்கிறான்.
    வளர்ந்து மனங்களையும் மனிதர்களையும் சுத்திகரிக்கிறான்.

    தொட்டில் குழந்தை சொல்லும் இன்னொரு சேதி.

    ஆனால்,
    அழுக்குகள் கூட தெய்வீகமாக இருக்கட்டும்
    என்பதே அதன் அடித்தட்டு இரகசியம்.

    வாழ்த்துக்கள் பங்காளி. தொடர்ந்து பங்களி.
    நானும் அந்தக் கவிதையைத் தேடினேன்...
    மன்றத்தின் மின்னணுப் பிழையில்
    காணாமல் போனதில் அதுவும் ஒன்றென நினைக்கிறேன்..

    வாழ்த்துக்களுக்கு நன்றி...!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    ரொம்ப நல்லா இருக்கு...
    நல்லா எழுதி இருகின்றீர்கள்...
    கிறிஸ்து பிறப்புக்கு அருமையான கவிதை..
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    நன்றி கவி.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •