விடாதது...!
குடும்பம்
மனைவி மக்கள்
அது, இது...
போதும், போதும்!
போதும்...
இந்தப் பந்தமும் பாசமும்!
இனி,
துறவுதான்!
வெளியேறியவன் -
உரக்கச் சொன்னான்...
அடியே,
மோர் சொம்பு வெளியே கிடக்கிறது!
விடாதது...!
குடும்பம்
மனைவி மக்கள்
அது, இது...
போதும், போதும்!
போதும்...
இந்தப் பந்தமும் பாசமும்!
இனி,
துறவுதான்!
வெளியேறியவன் -
உரக்கச் சொன்னான்...
அடியே,
மோர் சொம்பு வெளியே கிடக்கிறது!
யதார்த்தமாக உள்ளது..வாழ்த்துகள்...நீங்களும் உங்களின் கவிகளை தொகுப்பாக ஒரு திரியில் போடுங்கள்..சிறந்த தலைப்பின் கீழ்...நன்றிகள்..
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.
இப்படித்தான் சிலர் வரட்டு பிடிவாதம் பிடிப்பார்கள், ஆனால் எதோ ஒன்று தடை போடும்.
நல்லது குணமதி.
சரண்யா சொன்னமாதிரி உங்கள் கவிதைகள் எல்லாவற்றையும் ஒரு தொகுப்பாக போடலாமே.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
இருவர்க்கும் நன்றி.
****உங்கள் கவிதைகள் எல்லாவற்றையும் ஒரு தொகுப்பாகப் போடலாமே. ****
போடலாம். எப்படிப் போடுவது என்று விளக்கி யாராவது உதவுக.
இறுதி வரியில் இறுக்கம் தளர்த்தி முறுவலிக்க வைத்தீர்கள் குணமதி..
பாராட்டுகள்.
( சாகப்போகுமுன் தண்டவாளம் சுடுதென, கழுத்தணைக்குத் துணி வைக்கும்
பாக்யராஜ் ( ஒரு கை ஓசை?) படக்காட்சி நினைவுக்கு வந்தது..)
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நகைச்சுவை யான கடைசி வரி... இவைதான் யதார்த்தம்..
வாழ்த்துக்கள்...
நன்றி நண்பரே.
துறவறத்தை நாடி ஓடுபவன், தன் வீட்டுப் பொருளின் மீதுள்ள பற்றை இன்னும் இழக்காமலிருக்கிறான் என்பதை நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கும் விதம் நன்று.
சிறு துரும்பால் குத்தி எறியப்படும்
பல நாள் பல்லிடுக்கில்
துருத்திக் கொண்டிருந்த
உண(ர்)வுத் துணுக்கு
வாழ்த்துக்கள்..... நல்ல கவிதை
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks