Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: மெல்லிசையழிந்த காலம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0

    மெல்லிசையழிந்த காலம்

    மெல்லிசையழிந்த காலம்


    உனக்கும் எனக்குமென்றிருந்த
    ஒரேயொரு வீட்டின் அறைகளில்
    அன்பைப் பூசி அழகுபடுத்தினோம்
    பளிங்கென மிளிர்ந்த குவளைகளில்
    பாசம் தேக்கி மெல்லப் பருகினோம்
    மெல்லிசையைப் பாடல்களைத்
    திக்கெட்டும் அனுப்பி
    கூடிப் பேசிக் களித்திருந்தோம்
    இருவரும் உறங்கிடும் மௌனத்துக்குள்
    புது மொழியொன்றினைக் கற்றறிந்தோம்
    சிரித்தோம் ஆனந்தித்தோம்
    வாழ்ந்தோம்

    கருணையின் கற்கள் தேடிக்
    கட்டிய வீட்டுக்குள்
    குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய
    ஏன் அவ்வேளை அனுமதித்தோம்
    பளிங்குக் குவளைகளில்
    நிறைந்திருந்த பாசம் கொட்டி
    சாக் கொணரும் விஷத்தினை
    அவை வந்து நிரப்பிட ஏன் இடங்கொடுத்தோம்
    இருவருக்கிடையிலும் பெருந்திரை பொருத்தி
    உன் பற்றி என்னிலும்
    என் பற்றி உன்னிலுமாக
    நம் செவி வழி ஊதப்பட்ட வசவுகளை நெருக்கி
    ஏன் அருகிலமர்த்திக் கொண்டோம்
    பழகிய நேச மொழிகளை மறந்த மனங்களிரண்டும்
    ஆழுறக்கம் தழுவட்டுமென
    ஏன் அப்படியே விட்டுவைத்தோம்
    அழுதோம் துயருற்றோம் - இன்றோ
    இறவாது தினம் இறக்கிறோம்

    - எம்.ரிஷான் ஷெரீப்,
    இலங்கை

    நன்றி

    # உயிர் எழுத்து இலக்கிய இதழ் - அக்டோபர், 2009
    # உயிர்மை
    # திண்ணை

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நல்ல புரிந்துணர்வுடன் வாழப்பட்ட இன்ப வாழ்க்கை, அந்த அன்புக்கிண்ணங்களில் விஷம் ஊற்றப்பட்டவுடன் திசைமாறிப்போய்விட்டதை ஆற்றாமையுடன் அரற்றும் வரிகள்.

    புரிதலில்லாததால் ஏற்படும் சிறிய இடைவெளிகள் எத்தனை துன்பத்தைக் கொண்டுவந்துவிடுகின்றன...

    வாழ்த்துகள்+ பாராட்டுக்கள் ரிஷான்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    வெகு தினங்களுக்குப் பின் படிக்கும் கவிதை இது. அழகான வரிகள். தாலாட்டும் சொற்றொடர்கள். மிக அருமை நண்பரே.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இணைந்து இயைந்து வாழும் இரு இதயங்களுக்கு மட்டுமன்று.
    இரு இனங்களுக்கும் இக்கவிதை பொருந்தும்...

    இல்லங்கள் மட்டுமன்றி
    தேசங்கள் சிதறுவதும்
    இசை(வது) அழிவதாலேயே!


    கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான்..

    நீண்டநாளுக்குப்பின் நம் சுனைத்தைக் காண்பதில் மகிழ்ச்சி..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    நல்ல கவிதை, கருத்தும்தான். தற்போதைய சூழ்நிலையில் இது இலங்கைக்கும் பொருந்தும். நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    இரு மனங்கள் மட்டுமல்லாது இனங்கள் என்று
    இனங்கண்ட ஆனந்தத்தில் கீழே வந்தால்
    இளசு அண்ணாவின் உரைகள் அதே தொனியில்

    அண்ணனேச் சொல்லியபின் தம்பி நான் சொல்வதென்ன...

    வாழ்த்துக்கள் ரிஷான்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் சிவா.ஜி,

    //நல்ல புரிந்துணர்வுடன் வாழப்பட்ட இன்ப வாழ்க்கை, அந்த அன்புக்கிண்ணங்களில் விஷம் ஊற்றப்பட்டவுடன் திசைமாறிப்போய்விட்டதை ஆற்றாமையுடன் அரற்றும் வரிகள்.

    புரிதலில்லாததால் ஏற்படும் சிறிய இடைவெளிகள் எத்தனை துன்பத்தைக் கொண்டுவந்துவிடுகின்றன...//

    நிச்சயமாக நண்பரே.
    எல்லா இடங்களிலும் அதிகமான பிரிவுகளுக்குக் காரணம் தவறான புரிதல்கள்தான்.

    //வாழ்த்துகள்+ பாராட்டுக்கள் ரிஷான். //

    அன்பான பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் சுனைத் ஹசனீ,

    //வெகு தினங்களுக்குப் பின் படிக்கும் கவிதை இது. அழகான வரிகள். தாலாட்டும் சொற்றொடர்கள். மிக அருமை நண்பரே. //

    நீண்ட நாட்களின் பின்னர் உங்களைக் காண்கிறேன். நலமா?
    கவிதை குறித்தான கருத்துக்கு நன்றி நண்பரே !

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் இளசு,

    //இணைந்து இயைந்து வாழும் இரு இதயங்களுக்கு மட்டுமன்று.
    இரு இனங்களுக்கும் இக்கவிதை பொருந்தும்...

    இல்லங்கள் மட்டுமன்றி
    தேசங்கள் சிதறுவதும்
    இசை(வது) அழிவதாலேயே!//

    நிச்சயமாக நண்பரே !
    உங்களது ' இசை(வது) அழிவதாலேயே' இச் சொல்லாடலை வெகுவாக ரசித்தேன்.

    //கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான்..//

    கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் ஜனகன்,

    //நல்ல கவிதை, கருத்தும்தான். தற்போதைய சூழ்நிலையில் இது இலங்கைக்கும் பொருந்தும். நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு. //


    கருத்துக்கு நன்றி நண்பரே !

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் செல்வா,

    //இரு மனங்கள் மட்டுமல்லாது இனங்கள் என்று
    இனங்கண்ட ஆனந்தத்தில் கீழே வந்தால்
    இளசு அண்ணாவின் உரைகள் அதே தொனியில்

    அண்ணனேச் சொல்லியபின் தம்பி நான் சொல்வதென்ன...

    வாழ்த்துக்கள் ரிஷான். //

    கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அன்பு மணலில் அணைகட்டி
    குச்சி ஒன்றை ஒளித்து வைத்து
    கீச்சு மாச்சுத் தம்பளம்
    விளையாடிய கணங்களையும்
    விளையாட்டின் முடிவுகளையும்
    கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கும் கவிதை...

    புதைத்து வைச்ச கைகளில் சிக்கிய குச்சி
    சிலருக்குச் சிராய்... சிலருக்குப் புதையல்..

    இடையில் புகுந்தவர்கள்
    இடை வெளி மிகுந்த வரிகள்.
    விருப்பப்படி நிரப்பலாம.

    நிறைகளை மட்டும் நினைவில் கொள்.

    அந்தவகையில் இந்தக் கவிதை பலபடி மேல்.

    பாராட்டுகள் ரிஷான்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •