Originally Posted by
muthuvel
நான் பிறந்த நேரம் அழுத தை விட ,உன்னை பிரிந்த நேரம் அழுததே அதிகம் ! - (மனைவிய பிரிந்து வளைகுடா செல்லும் நண்பர்கள் )
கடவுள் கண்டு பிடித்த, இதயம் என்னும் தொலை பேசியில் , நித்தமும் கேட்கிறது என் மகனின் அழுகையும் , சிரிப்பும் .......(.மகனை பிரிந்து வாழும் நண்பர்கள் )
நானும் புமியில் பிறந்த விண்வெளி மனிதன்தான் , என் நான்கு கண்களும் உறங்கவில்லை இன்று, என் காதலிக்கும் சேர்த்து ...(காதலியை பிரிந்து வாழும் நண்பர்கள் )
என் ஒவொரு வியர்வை துளியின் விலை , ஒரு செங்கல் ( புது வீடு கட்டும் நண்பர்கள்)
இங்கு வெயிலில் காய்வது , என் பெற்றோர் நிழலில் இளைபாரதான் !
உழைப்பு என்ற பெயரில் செய்குலி ,சேதாரமாக நான் , என் தங்கையின் திருமணத்திற்கு ........
நாட்டில் நான் பெற்ற கடனுக்காக , என்னை கடனாக அடகுவைதேன் வளைகுடா நாட்டில் ...
நான் மினரல் வாட்டர் குடிப்பது , என் தம்பி அங்கு மின்னியல் பாடம் படிக்கதான் ...........
நான் வாங்கும் டாலர் , இன்றைய நிலைக்கு அதுவே என் குடும்பத்தின் பில்லர் ....
இங்கு, பார்க்கும் பெண் னெல்லாம் சகோதிரியாக தோன்றியது ,என் சகோதரி அருகில் இல்லாததால் ...
Bookmarks