உருக்கமான உணர்வு வெளிப்பாடு!
அருமை ஜாவித் ! நல்லா எழுதி இருக்கிறீங்க !!
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே
முட்களுக்கு குத்தும் கூர்முனை கொடுத்தது யார்...?
ஞாபகத்திற்கு நித்தமும் நினைவூட்டுவது யார்...?
காதல் வலி..ஞாபக முட்கள்...நெஞ்சில் குத்துகிறது..
கவிதை அருமை..பாராட்டுக்கள்..
காதல் தோல்வியின் வலி மிகுந்த வெளிப்பாடு. வார்த்தைகளை அழகாக உபயோகித்திருக்கிறீர்கள். வித்தியாசமான சிந்தனையாக, பனித்துளியில் சூரியன் குளிர்காய்வதை சொன்னவிதம் மிக அருமை.
வாழ்த்துக்கள் ஜாவித்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சிவா.ஜி குறிப்பிட்டதைப்போல,
வித்தியாசமான மெருகுதரும் சொற்கோர்வைகள், உவமைகள்...
காரணம் தெரியாத
காதல் ரணம்...
உயிர் பிடுங்கப்பட்ட
அந்தக் கணம்
நின்றுபோனது காதற்கடிகாரம்.
அக் கண ரணம் தரும்
ஞாபக முட்களாகின,
சுற்றிவந்த சுகமுட்கள்.
பின்னோக்கி ஒரு கணம் சென்றேனும்
நிற்காதோ
இந்தக் காதற் கடிகாரம்...
விலகாதோ
இந்த மா ரணம்...
சூரியனில் பனிக்குளியல் செய்த சுகக்காதல்,
சோகவெம்மையாய்ச் சூரியனையே சுட்டெரிக்கும் கற்பனை அபாரம்... மனபாரம்...
ஜாவிட் ரயிஸ் அவர்களுக்கு என் பாராட்டு...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கவிதைகளை மேலோட்டமாக பாராமல் கருத்துகளோடு சேர்த்து பார்த்தமைக்கும்...
"குத்திக்குத்தியே கூர்தீட்டிக்கொள்கின்றன,
ஞாபக முட்கள்..."
உருக்கமான வரிகள்
உங்கள் கருத்துகளுக்கும் மிக்க நன்றி அக்னி....
காதல் மணிக்கூண்டில்
மன மணிக்கூடு.
ஞாபக முட்கள் சுழலும் கூட்டில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
இன்னொரு மனசு....!
பாராட்டுகள் ஜாவிட்.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி அமரன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks