நன்றிகள் இளசு அவர்களே...
உங்களிடம் ஒரு கேள்வி...
நீங்கள் மருத்துவரா..ஒவ்வாமை பற்றி படித்ததில் அப்படி தோன்றுகிறது..எந்த துறையில் மருத்துவர்....
இந்த வீசிங் என்பது மழைக்காலங்களில் அதிகமாக வரக்காரணம்....இதற்கு சீசனுக்கும் சம்மதம் இருக்கா....
நன்றிகள் இளசு அவர்களே...
உங்களிடம் ஒரு கேள்வி...
நீங்கள் மருத்துவரா..ஒவ்வாமை பற்றி படித்ததில் அப்படி தோன்றுகிறது..எந்த துறையில் மருத்துவர்....
இந்த வீசிங் என்பது மழைக்காலங்களில் அதிகமாக வரக்காரணம்....இதற்கு சீசனுக்கும் சம்மதம் இருக்கா....
Last edited by சரண்யா; 17-11-2009 at 02:28 AM.
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.
ஆஸ்த்துமா வேறு, டி.பி வேறு என தாமரை விளக்கம் அளித்துள்ளரே.
என்ன நண்பரே, கடைசியில் பழமொழிக்கு அர்த்தம் தெரியவில்லை என சொல்லிவிட்டீர்கள். ஆதாவது ஆஸ்த்துமா வந்து விட்டால் சுவாசம் தடை ஏற்படும் போது ஏற்படும் வேதனை இருக்கிறதே அது மிக கொடுமை அதைத்தான் "நித்தியம்(தினமும்) கண்டம்" என சொல்கிறேன். இன்ஹேலர் பயன்படுத்தியப்பின் கிடைக்கும் சுகத்தைத்தான் "புரண ஆயுள்" என குறிப்பிட்டு உள்ளேன்.இன்னும் ஒரு பழமொழி இந்த வியாதி வந்து விட்டால் "சாகவும் விடாது வேகவும் விடாது"
தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
கற்றனைத்தூறும் அறிவு
எனக்கு இப்போது வயது 39 ஆகிறது.நான் எனது 5 வயதில் இருந்து இன்ஹேலர் பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன்.எஎன்னுடைய 15 வயது வரை எந்த இன்ஹேலர் பயன்படுத்தினேன் என எனக்கு தெரியாது. 16 வயது முதல் இன்று வரையில் வென்ட்ரோலின்(VENTROLIN) என்னும் இன்ஹேலர் தான் பயன்படுத்திகிறேன். எனக்கு ஏதுவும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தெரியவில்லை. இரத்தில் இளமை இருக்கும் வரையில் ஏதும் தெரியாது என்பார்களே அது போல் இருக்குமோ என்னவோ?
தாமரை அவர்களின் பதிலை கண்ட பின்பு ஏதோ மனது உறுத்துகிறது. இருப்பினும் எனக்கு மனதிடம் மிகவும் அதிகம். இந்த வியாதி இருந்தாலும் நான் எனது 23 வயதில் மிஸ்டர் மெஜூரா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் பிடித்தேன். இதற்காக ஜிம்மில் 5 வருடங்கள் உடற்பயிற்சி செய்தேன். இப்போதும் என் உடல் கட்டு குழையாமல் தான் உள்ளது. என்னை முதலில் பார்ப்பவர்கள் இந்த பிரச்சனை இருக்கும் என எள்ளவும் நம்ப மாட்டார்கள்.
தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
கற்றனைத்தூறும் அறிவு
நன்றிகள் அண்ணா அவர்களே.....தங்கள் விளக்கத்திற்கு...பழமொழி ரொம்ப தெரியாதுங்க..
நான் கேட்டது தாமரை அவர்களின் பதிலுக்கு முன்னாடி இருந்ததால் மாற்றவில்லை....
தாங்கள் வேறு ஓமொயோபதி மருத்துவத்தில் முயற்சி செய்துள்ளீரா...
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.
இந்த விசீங் என்பதே பேருந்தில் செல்லும்போது சிலர் வாந்தி எடுப்பதற்கு காரணமாகுமா..ஒவ்வாமை என்பதா...
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.
அது வேற.. இது வேற
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நன்றிகள் தாமரை ஐயா அவர்களே..
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.
இருபது வருடங்களாக தொலைகாட்சி பெட்டி, கம்ப்யுட்டர் சரிசெய்யும் பணியில் இருக்கிறேன்.
என்ன வருமானம் கிடைத்ததோ தெரியாது ,கிடைத்த நிரந்தர சொத்து விசிங்.
ஆங்கில மருத்துவம் தற்காலிக தீர்வு. ஹோமியோபதி ஒரு தொடர்கதை, சித்தா உணவுக்கட்டுப்பாடு, மூச்சு பயிற்சி என் எல்லா முறைகளையும் கடந்த பத்து வருடங்களாக செய்து வருகிறேன். கட்டுக்குள் இருக்கும் அரக்கன் ஒரு நாள் கிளம்பும் பொது பேயாட்டம் ஆடுவான் அது போலத்தான் என் கதையும். கடந்த இரண்டு நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டேன்.
அவசரத்தேவைக்கு அஸ்தலின் இன்ஹேலர் ஹோமியோ பொறுமைவேண்டும், நல்ல மருத்துவரும் வேண்டும் மூச்சுப்பயிற்சி நல்ல முறை அதை தினமும் செய்து கொண்டு இருந்தவரை பிரச்சனை இல்லை.
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
ஆம் மூச்சுப்பயிற்சி நல்லது என்கிறார்கள்...நானும் கேள்வி பட்டேன்...
நன்றிகள் ந.இரவிந்திரன் அவர்களே...பகிர்ந்து கொண்டமைக்கு...
தீர்வு இருப்பதாக தெரியவில்லை...
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.
மன்னிக்கவும் குணவதி அவர்களே, நீச்சல் அடிப்பதை அஞ்சல் வழியில் எப்படி கற்க முடியாதோ அதை போலத்தான் யோகாவும்,மூச்சுப்பயிற்சிம்
சிறந்த பயிற்சி ஆசிரியர் இல்லாமல் பயிலும் யோகா விஷத்தை விட கொடியது. நான் பல மெய்ப்பொருள் தேடி அலைந்ததை போல நல்ல பயிற்சியாளர்களை தேடித்திரிந்தேன்.
எனக்கு இருந்த பிரச்சனை மன உளைச்சல், மெல்லிய தூசித்துகள்கள், முதல் மழையில் கிளம்பும் மண்வாசம், முன்பனி. ஒரு காலங்களில் மழை பெய்தால் குடும்பம் மொத்தமும் ஒரே கும்மாளம் போடுவோம். இன்று நிலைமையே வேறு.என் பிரச்சனையை என் உறவுக்கார பெண்மணி ஒருவர் முகத்தை பார்த்தே சொன்னார். அன்று முதல் இன்று வரை அவர்தான் என் வழிகாட்டி.
பிரானிக் ஹீலிங் என்ற முறை அவர் பின் பற்றியது. அவரிடம் இருந்து நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் "ஆட்டோ சஜசன்" என்னும் மூச்சுப்பயிற்சி முறை கற்றேன். எனவே மனக்குழப்பத்தில் இருந்து மெதுவாக வெளியே வந்து தோல்விகளை வேறு கோணத்தில் பார்க்கும் கலையை அவரிடம் இருந்து கற்றேன்.
பின்னர் இந்த பயிற்சிகளில் ஏற்ப்பட்ட ஈடுபாட்டில் மதுரை காமராஜர் பலகலை கழகத்தில் பட்ட மேற்ப்படிப்புக்கு வந்த புத்த துறவி ஒருவருடன் தொடர்பு ஏற்ப்பட்டு பின்னர் அவரும் பலகலை கழகமும் நடத்திய பயிற்சிகளில் உடல் அளவில் உபாதைகள் குறையத் தொடங்கின. ஆனாலும் என் நுரை ஈரல் மட்டும் என் கட்டுப்பாட்டில் இல்லை.
அப்போது கண்டது ஈசா மையம் , முழுமையான மூச்சுப்பயிற்சியினை அங்கே பெற்றேன் எனக்கு அமைந்த ஆசிரியர்கள் அனைவரும் பொறுமையாக அவர் அவர் உடல் நிலைப்பார்த்து கற்றுத்தந்தனர். இதில் நிறுவனர் சத்குருவும் ஒருவர். கண்களால் எங்களை அளந்து விடுவார். சிரித்துக்கொண்டே சொல்லவார் முழுமையான ஈடுபாடு இல்லாதவர்கள் இன்னும் ஓரிரு ஜென்மத்துக்கு பின் வந்து நம்முடன் சேர்வார்கள் என்று. இத்தகைய ஈடுபாடு கொண்ட குரு அமைய வேண்டும். என்னை பொறுத்தவரை சத்குருவும், என் உறவுக்கார பெண்மணியும் ஒன்று தான்.அவர்கள் அள்ளிக்கொடுத்தார்கள். நாங்கள் என்னவோ கிள்ளிகொண்டுவந்தோம். இதில் எடுத்துவந்த என் மேலேதான் பிழை இருக்கும்.
எனவே யோகா மூச்சுப்பயிற்சி இரண்டையும் நல்ல குருவின் துணையுடன் கற்றுக்கொளுங்கள்
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks