பிட்ச் சரியில்லை என காரணம் காட்டி ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாதிரி சம்பவங்கள் ஒண்ணும் இந்திய இலங்கை அணிகளுக்கு புதியது அல்ல.
பிட்ச் சரியில்லை என காரணம் காட்டி ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாதிரி சம்பவங்கள் ஒண்ணும் இந்திய இலங்கை அணிகளுக்கு புதியது அல்ல.
தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
கற்றனைத்தூறும் அறிவு
காசு கொடுத்து ஆட்டத்தைப் பார்க்கச் சென்றவர்களுக்கு ஏமாற்றம் தானா?
இந்திய கிரிக்கெட்டிற்கு இது ஒரு மாபெரும் வெட்கக்கேடு. உலகப்கோப்பை 2011 இங்கே நடைபெறுவது சந்தேகமே.
புதிய ஸ்டேடியம் கட்டியதிலிருந்தே பிரச்சனைதான் டெல்லி மைதானத்திற்கு. சாம்பியன்ஸ் லீக் போட்டியில்கூட டெல்லி மைதானம் கொஞ்சம் சொதப்பியது. இதனாலேயே டெல்லி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது.
கிரிக்கெட் வாரியம் இதை கவனித்து உடனடி நிவாரணம் செய்யும் என்றே எதிர்பார்க்கிறேன்.
இன்னிக்காவது மேட்ச் பார்க்கலாம் என்றால் சொதப்பிட்டாங்க. இனியாவது இந்த மாதிரி விஷயங்களில் வாரியம் அக்கறை எடுக்கும் என்று நம்புவோம்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் கருத்து, சற்று சிந்திக்கத் தக்கதாக இருந்தது. ஆடுகளம் சரியில்லை என்றால், ஆட்டத்தின் முதல் ஐந்தாறு ஓவர்களிலேயே தெரிந்திருக்கும். நல்ல ஆடுகளம் என ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆடுகளங்களிலும் சில பந்துகள் எதிர்பாரா வகையில் எகிறுவது உண்டு.
23 ஓவர்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு ஆட்டம் நடைபெற்ற பிறகு, அதுவரை தாக்குப் பிடித்த களம், அதற்கு மேல் மட்டும் என்ன செய்து விடும்..? களம் சற்று தரமாக தயாரிக்கப் படவில்லை என்றாலும், ஆட்டத்தினைக் கைவிடுமளவு மோசமான ஆடுகளமல்ல நேற்றைய டெல்லி ஆடுகளம் என்கிறார் அஜய் ஜடேஜா.
ஹும்... ஆட்டத்தின் பத்தாவது ஓவரில் தில்ஷான் கைகளில் அடி வாங்கினார். அதற்கு முன்னர் ஒரு முறையும், பின்னர் ஒரு முறையும் ஜெயசூர்யா தோள்பட்டையிலும், கையில் ஒரு முறையும் ஆக இரு முறைகள் அடி வாங்கினார்.
அதன் பின் தியாகியின் பந்துகள் சில எகிறி விழுந்ததும் உண்மைதான். ஆனால், பந்துகள் எகிறி விழும் ஆடுகளங்களில் ஆட்டங்கள் நடப்பதையும், அவை தொடர்ந்து நடந்து முடிவதையும் நாம் கண்களால் கண்டவர்கள் தானே..?
ஆனால், இந்திய அணி, இலங்கை வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த பந்துகள் அனைத்தும் அருமையாக வீசப்பட்டவை. அதற்கும் ஆடுகள அமைப்புக்கும் சற்றும் சம்பந்தமில்லை.
எப்படியும் இலங்கை தோற்றிருக்க வேண்டிய ஒரு ஆட்டம். இந்திய அணிக்கு வெற்றிப் புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டும்.
இனி ஆடுகளங்களை, எவ்வித குறையும் சொல்லாதவாறு நம்மவர்கள் தயாரித்து விடுவார்கள் என்று உறுதி சொல்லிட முடியாது. ஏனென்றால், இந்தூரில் 12 வருடங்களுக்கு முன் ஏற்கனவே இப்படியொரு பாடம் கற்றிருக்கிறது இந்தியா. அதன் பின்னும் இப்படியொரு நிகழ்வுக்கு வழி வகுத்திருக்கிறார்கள். என்ன சொல்ல..?
இந்தியர்கள் இன்று சொதப்புகிறார்களே. 16 ரன்களுக்கு மூன்று விக்கெட் அவுட்.
காம்பீர், கோஹலி, யுவராஜ் ஆகியோர் அவுட்
5 காலி
பைனல் அலர்ஜி தோனிக்கும் வந்து விட்டது போல 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை கோப்பையை கைப்பற்றியது
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks