(இயன்றவரை முயன்றுள்ளேன்; எப்படிப் பொருந்துகிறதெனக் கூறுங்கள்)
3. இன்னழகே என்னென்று இயம்புவாயே!
சிறுவனுமோர் சிறுமியுஞ்சேர்த் தமைத்த மாலை!
சிறுமாலை தொங்குமதில் மணமுமில்லை!
சுறுசுறுப்பாய்ப் பறந்துழைத்தே அமைத்தமாலை!
சொலற்கரிய பின்னலிலே செய்தமாலை!
அறுதலிலா நார்கொண்டே அமைத்தமாலை!
அதைக்குலைத்தே மறுபடியும் அமைப்பவர்க்கே
இறுதலிலா இராட்டினமே அன்பளிப்பேன்!
இன்னழகே என்னென்று இயம்புவாயே!
Bookmarks