ஒரு நல்ல மழை நாள் முல்லா திண்ணையில் உட்கர்ந்திருந்தாராம்,அப்போது அவ்வழியே அயல்வீட்டுக்காரர் மழையில் நனையாமலிருக்க ஓடிச் சென்றுகொண்டிருந்தார்.அதைப்பார்த்த முல்லா குறும்பாக "என்ன நீங்கள் இப்படிச் செய்கிறீர்களே, கடவுள் நமக்காக மழையை பெய்ய வைக்கிறார் அதில் நனையாது இப்படி ஒழித்து ஒதுங்குவது கடவுளை அவமதித்ததாகாதா "என்றார்.அயல்வீட்டுக்கரனும் முல்லா சொல்வது நியாயம் என்றுணர்ந்து மீதித் தூரத்தை நனைந்தே சென்றாராம்.
இவ்வாறிருக்க, இன்னொரு மழை நாள் அயல்வீட்டுக்காரன் திண்ணையில் இருக்க முல்லா நனையாது ஓடிச் சென்றுகொண்டிருந்தார்.அப்பொழுது முல்லாவைப் பார்த்து அயல்வீட்டுக்காரர் "என்ன நீங்கள் இப்பொழுது மழையை அவமதிக்கிறீர்களே" என்றார்.அதற்கு முல்லா "மழை கடவுளின் கிருபையால் கிடைப்பது ஆகவே அதுவும் புனிதமானது எனவேதான் அதை மிதிக்காமலிருக்க ஓடிக்கொண்டிருக்கிறேன் "என்றாராம்.
Bookmarks