ஆம். ஊடகங்கள்.மிகச் சக்திவாய்ந்தவை.மக்கள் மனதை ஊடுருவும் சாதனம் என்பதனால்தான் ஊடகம்.அதைப் பயன்படுத்த தெரிந்தவரின் கைகளில் அது அற்புதமான ஒரு பொருளாகிப் போகிறது...
...என்று நாம் நம்ப முயற்சித்தாலும் அதன் நிஜ முகம் வேறுமாதிரியாகவே இருக்கிறது.என்றாலும் திருச்செல்வம் போன்ற முனைப்பான இளைஞர்கள் தங்கள் எல்லை உணர்ந்து,அதற்குட்பட்டு,ஆனால் கருத்தை ஆணித்தரமாக பதியும் பொழுது படைப்பாளி ஊடகத்தை தன் கைகளில் ஏந்திக் கொள்கிறான்.
பல வருடங்களாக இழுத்துக்கொண்டு இருந்த தொடரை பாராட்ட...29ம் தேதி பாகம் ஒன்று மட்டுமே போதும் ஒரு இனப் படுகொலையை பதிந்ததற்காக.
[media]http://video.yahoo.com/watch/6304235/16357488[/media]
அந்த பாகத்தை மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால்... ஆம். ஒரு இனம் அழிந்ததை,ஒரு வீர மரணத்தை மிக ஆதங்கத்துடனும்,இயலாமையுடனும் போராளிகுணத்துடனும் காட்சிப்படுத்தி மக்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையில் புரிய வைத்ததன் மூலம் தன் திறமையும் இனப் பற்றையும் பதிந்திருக்கிறார் திருச்செல்வம். நன்றி.
என்ன சொல்வது உங்களை தோழர் திருச்செல்வம்.மிக்க நன்றி என்ற ஒன்றைத்தவிர. சன் டிவி ஒரு சக்தி வாய்ந்த ஊடகம்,அதில் 9 மணி ஸ்லாட் என்பது அதைவிட சக்திவாய்ந்த பொழுது.கிட்டத்தட்ட அத்தனை தமிழ்க் குடும்பமும் தொலைக்காட்சி முன்னர் அமர்ந்திருக்கும் பொழுது... அவர்களுக்கு அந்த காட்சிகளின் மூலம் கடத்தப்படும் அறிவானது மிகக் கூறான ஆயுதம். ஒரு இடத்தில் கூட பெயரைச் சொல்லாமல்,ஆனால் மிக அற்புதமாக சொல்ல வந்த கருத்தையும்,ஆதங்கத்தையும்,கோவத்தையும் ,கண்ணீரையும் காட்சிப்படுத்தி ஒரு வரலாற்றுப் பிழையை தொலைக்காட்சி ஊடகத்தில் பதிந்தமைக்காக..
அதுவும் மிகக் கூறான வசனங்களால்.
மனம் திறந்து பாராட்டுகிறோம். நன்றி திருச்செல்வம். ..
Bookmarks