அடிப்படைப் பாவிலக்கணம் படிக்க.....
*http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8743
கலிமண்டிலம் என்னும் கலிவிருத்தத்தில் 7 வகைகள் வரை உள்ளன. அவற்றுள் முதல் வகைக் கலிமண்டிலம் குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் என்ற வாய்பாட்டில் அமையும் நான்கடிப் பாடலாகும். நான்கடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
சில பாடல்களில் இரண்டாம் மூன்றாம் கூவிளச்சீர் வரும் இடங்களில் வேறுவகைச் சீர்களும் வருவதுண்டு. அப்போது, இரண்டாம் மூன்றாம் தளைகள் மாமுன் நிரை விளம் முன் நேர் என வெண்டளையாக வரும்.
நேரசையில் தொடங்கும் பாடலில் ஒற்று நீங்கலாக 11 எழுத்தும், நிரையில் தொடங்கும் பாடலில் ஒற்று நீங்கலாக 12 எழுத்தும் இருக்கும்.
பாட்டு எழுதும்போது எழுத்து எண்ணிக்கை பற்றிக் கவலைப்பட வேண்டிய தில்லை. மேற்கண்ட இலக்கணப்படி எழுதினால் எழுத்தெண்ணிக்கை தானாகவே சரியாக அமையும்.
பெரியபுராணம், சம்பந்தர் தேவாரம், கம்பராமாயணம் முதலிய நூல்களில் இவ்வகைக் கலிமண்டிலப் பாக்கள் இடம் பெற்றுள்ளன.
கதிரவனைப் பற்றிக் குணமதி எழுதிய நிரையசையில் தொடங்கும் கலிமண்டிலப் பாடலைக் கீழே காண்க :
உலகில் நல்லொளி வீசிடும் நாள்தொறும்
அலகில் நன்மைகள் அவ்வொளி ஆக்கிடும்
இலங்கும் ஆற்றலுக் கேயிது மூலமாம்
விலக்கில் செங்கதிர் விம்மிதம் ஞாலமே!
Bookmarks