Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: மரபு: பா-இனம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    மரபு: பா-இனம்

    அடிப்படைப் பாவிலக்கணம் படிக்க.....

    *http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8743

    கலிமண்டிலம் என்னும் கலிவிருத்தத்தில் 7 வகைகள் வரை உள்ளன. அவற்றுள் முதல் வகைக் கலிமண்டிலம் குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் என்ற வாய்பாட்டில் அமையும் நான்கடிப் பாடலாகும். நான்கடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

    சில பாடல்களில் இரண்டாம் மூன்றாம் கூவிளச்சீர் வரும் இடங்களில் வேறுவகைச் சீர்களும் வருவதுண்டு. அப்போது, இரண்டாம் மூன்றாம் தளைகள் மாமுன் நிரை விளம் முன் நேர் என வெண்டளையாக வரும்.

    நேரசையில் தொடங்கும் பாடலில் ஒற்று நீங்கலாக 11 எழுத்தும், நிரையில் தொடங்கும் பாடலில் ஒற்று நீங்கலாக 12 எழுத்தும் இருக்கும்.
    பாட்டு எழுதும்போது எழுத்து எண்ணிக்கை பற்றிக் கவலைப்பட வேண்டிய தில்லை. மேற்கண்ட இலக்கணப்படி எழுதினால் எழுத்தெண்ணிக்கை தானாகவே சரியாக அமையும்.

    பெரியபுராணம், சம்பந்தர் தேவாரம், கம்பராமாயணம் முதலிய நூல்களில் இவ்வகைக் கலிமண்டிலப் பாக்கள் இடம் பெற்றுள்ளன.

    கதிரவனைப் பற்றிக் குணமதி எழுதிய நிரையசையில் தொடங்கும் கலிமண்டிலப் பாடலைக் கீழே காண்க :

    உலகில் நல்லொளி வீசிடும் நாள்தொறும்
    அலகில் நன்மைகள் அவ்வொளி ஆக்கிடும்
    இலங்கும் ஆற்றலுக் கேயிது மூலமாம்
    விலக்கில் செங்கதிர் விம்மிதம் ஞாலமே!
    Last edited by குணமதி; 14-09-2010 at 03:50 AM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    புரிந்தது போல் தோன்றினாலும் புரியாதது போலும் இருக்கிறது... தமிழ் இலக்கணம் பள்ளி நாட்களில் முடித்ததோடு சரி... அதனால்தான்

    நன்றி குணமதி!!

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பா.ராஜேஷ் View Post
    புரிந்தது போல் தோன்றினாலும் புரியாதது போலும் இருக்கிறது... தமிழ் இலக்கணம் பள்ளி நாட்களில் முடித்ததோடு சரி... அதனால்தான்

    நன்றி குணமதி!!
    நன்றி நண்பரே!

    நீங்கள் சொல்வது சரி.

    கொஞ்சம் யாப்பு அடிப்படை தெரிந்தால் போதும். மரபு பாடல் எழுதுவது என்னைப் பொறுத்தவரை எளிதென்றே சொல்வேன்.

    மீண்டும் நன்றி.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    அறிகின்றோம்!

    இலங்கை அரசுக்கு இந்திய அரசு துணைபோவது பற்றி ஒரு
    இயற்றரவு கொச்சகக் கலிப்பா


    இலங்கொளிநீர் உலகமிதில் இனக்கொலைக்கே பெயர்போன

    இலங்கையர்செய் கொடுங்கொடுமை எதற்குமிவர் துணையுண்டே!

    மலங்குமன நாடெல்லாம் மனம்நொந்தே கேட்டிடினும்

    கலங்கார்இந் தியாகாக்கும் காரணத்தால் அறிகின்றோம்!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    எனக்கு இந்தக் கவிதை சரியாக விளங்கவில்லை.

    யாராவது புரியும்படி விளக்கினால் நன்றாக இருக்கும்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இலங்கொளிநீர் உலகமிதில் இனக்கொலைக்கே பெயர்போன

    இலங்கையர்செய் கொடுங்கொடுமை எதற்குமிவர் துணையுண்டே!

    மலங்குமன நாடெல்லாம் மனம்நொந்தே கேட்டிடினும்

    கலங்கார்இந் தியாகாக்கும் காரணத்தால் அறிகின்றோம்!

    ----------------------
    **
    இலங்கொளிநீர் - ஒளி மின்னும் நீர் (கடல்)

    மலங்கு - கண்ணீர் ததும்புதல்

    விளக்கம்: -

    ஒளி மின்னும் நீரால் சூழப்பட்ட இந்த உலகில், இனப்படு கொலைக்கு பெயர் போன இலங்கை யானது செய்கிற கொடிய கொடுமை அனைத்துக்கும் இவர்களின் துனையுள்ளது. அந்த கொடுமையைப் பார்த்து மனங்கலங்கும் நாட்டெல்லாம் மனம் வருந்தி, கொடுஞ்செயல்களை நிறுத்த சொல்லி கூறினாலும். இலங்கையர் கலங்காரம், அதற்கு காரணத்தையும் நாம் அறிவோம், இலங்கைக்கு எந்த பிரச்சனையும் வராமல் இந்தியா காக்கும்..

    பாராட்டுக்கள் குணமதி..
    அன்புடன் ஆதி



  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    எனக்கு இந்தக் கவிதை சரியாக விளங்கவில்லை.

    யாராவது புரியும்படி விளக்கினால் நன்றாக இருக்கும்
    புரிந்திருக்கும்.

    நன்றி.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஆதி.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    படிப்பு ஒரு இடத்தில். பயிற்சி இன்னொரு இடத்திலா.

    இரண்டையும் ஒரே இடத்தில் வைத்திருப்போம்.

    -பொறுப்பாளர்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    படிப்பு ஒரு இடத்தில். பயிற்சி இன்னொரு இடத்திலா.

    இரண்டையும் ஒரே இடத்தில் வைத்திருப்போம்.

    -பொறுப்பாளர்
    நன்றி.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    வஞ்சி மண்டிலம் அல்லது வஞ்சி விருத்தம்

    வஞ்சி மண்டிலம் -1

    ( மா - மா - தேமாங்காய் )


    என்னே இழிவு!


    முன்னே, நீங்கள் யாரென்றார்;

    சொன்னேன் பெயரை; உம்பேரின்

    பின்னே வரைபே ரென்னென்றார்!

    என்னே இழிவே! தூ!சாதி!
    Last edited by குணமதி; 13-11-2009 at 01:05 AM.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    மூன்று சீருற்றிருக்கும்..
    முதலிரண்டு ஈரசையும்
    மூன்றாம் சீர் மூவசையும்
    கொண்டிருக்கும்..

    முதலிரண்டு சீரின் ஈற்றசை மா(நேர்) என்று முடியும்
    மூன்றாம் சீர் தேமாங்காய்(நேர்நேர்நேர்) பயின்று வரும்

    xநேர் xநேர் நேர்நேர்நேர்

    -------------

    பண்ணின் இலக்க ணம்கற்றோம்
    பன்னும் முறையும் கற்றோமே
    இன்னும் சொல்லி தாருங்கள்!
    நன்றி உமக்கும் பாட்டுக்கும்..
    அன்புடன் ஆதி



Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •