நன்றி, ஆதி.
நன்றி, ஆதி.
வஞ்சித்துறை - 1
(தேமாங்காய் + தேமா)
இல்லாரின் அல்லல்
நல்லாரின் சீற்றம்
பல்லோரின் ஏழ்ச்சி
அல்லாரை வீழ்த்தும்!
பொய்யின் வலிமை!
மழைபெய்தால் காளான் மறுநாள் முளைக்கும்
விழையும் பயிர்விளைய வேண்டின் - உழைப்புடனே
வல்லார்க்கும் நாள்பலவாம்; உண்மையிதே! பொய்மையோ
வெல்லும் உலகை விரைந்து.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
குறள் வெண்செந்துறை
நாம் தொடக்கப்பள்ளியில் படித்த ஆத்திசூடி கொன்றை வேந்தன் நினைவிருக்கிறதா?
ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்திஏத்தித் தொழுவோம் யாமே!
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே!
மேற்கண்டவை குறள் வெண்செந்துறைப் பாக்கள் ஆகும்.
குணமதியின் குறள் வெண்செந்துறைப் பாக்கள் இரண்டு:
என்றும் நல்லவை எண்ணி நடந்தால்
நன்றே நடக்கும் நாமும் உயர்வோம்!
இனத்திற் கிழைத்தாய் இரண்டகம் ஈழச்
சினத்தின் ஆற்றல் செயலில் விளங்கும்!
Last edited by குணமதி; 17-09-2010 at 04:54 PM.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks