முன்னொரு மோதிரமும் வளையமுண்டு
முதலிலுடற் கெண்ணெயிடும் வணிகனில்லை!
பின்னிழுத்து மாட்டுவதும் உண்டுதானே!
பிசுபிசுப்பு தடவியதால் மினுக்குந்தானே!
முன்முதலாய் ஒலிஎழுப்பல் உண்டுதானே
மொறுக்குகறுக் கெனஎழுப்பும் ஒலியும் தானே!
கன்முள்ளும் கடுஞ்சூடும் தாக்கிடாதே
கருத்தாகக் கால்காக்கும் கண்டிருப்பாய்!
சின்னஅடி அழகினளே சிவந்தவுன்றன்
சீரழகு வாய்திறந்து செப்புவாயே!
Bookmarks