சில இடங்களிலிருந்து வரும்போது தமிழில் பெயர்கொண்ட எனக்கு சிக்கல், அசௌகரியங்கள் உள்ளன நண்பரே. சிலருக்கு இது நிரந்தரமாகவே இருக்கலாம். அவர்களுக்காக ஆங்கிலத்தில் பெயரை அனுமதிக்கிறோம். உங்கள் கருத்தை நிர்வாகம் பரிசீலினை செய்யும்.
சாதக பாதகங்களை ஏற்கனவே பொது மன்றத்தில் அலசியதாகவுன் ஞாபகம்.
பெயர், டைட்டில் இதிலெல்லாம் சில இடங்களில் தமிழில் தட்டச்சு நேரடியாக செய்யமுடியாது. அதற்காக நிர்வாகம் அந்த இடங்களில் ஆங்கிலத்தை அனுமதித்தது. ஆனால் உள்ளே பதிக்கும் பதிவுகள் தமிழில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகளை நாம் ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். ஆகையால் இப்போதைக்கு இந்த விதிமுறைகளே போதுமானது என்பது என்னுடைய கருத்து.
ஏற்கெனவே பலர் நாம் பல விதிமுறைகளை விதித்துள்ளோம் என்ற சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் இப்போதைக்கு இது போதும்.
நண்பர்களே எதற்கு நீங்கள் எடுத்தவுடன் முடிவுரை சொல்கின்றீர்கள். பலமுறை விவாதித்தாலும் விவாதிக்கின்றபோது வழிமுறைமுறைகள் தோன்றும். எனக்கு இந்த இணையத்தில் ஒருவிடயம் பிடிப்பதில்லை எதற்கெடுத்தாலும் ஒருசிலர் முடிவுரைகளை கூறுகின்றனர். ஏதோ தாங்கள் சொல்லிவிட்டால் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நினைப்பு. இங்கு ஆங்கிலத்தில் எழுதுகின்றவர்களில் எத்தனைபேர் தமிழில் பயனர்பெயர்களை தமிழில் முயன்று பார்த்தவர்கள். முயற்சிக்காதவர்கள் கூட முடியாது என்று சொல்லகூடாது. நிர்வாகம் ஆரம்பத்திலேயே தமிழில் பயனர் பெயர்களை உருவாக்க வேண்டுமென்று கூறியிருந்தால் உருவாக்கியிருப்பீர்கள் அல்லவா?
பயன்படுத்திய பெயர்கள் பிடிக்காமல் எத்தனைபேர் பெயர்களை மாற்றிக்கொள்கின்றார்கள் . மனமிருந்தால் மார்க்கமுண்டு.
குணா மதியா அல்லது குணமதியா என நீங்கள் தான் சொல்ல வேண்டும் .
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17215
இங்கே விண்ணப்பம் செய்யுங்கள் குணமதி.
இதை நானும் வரவேற்கிறேன். நானும் ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறேன் அதை நினைத்தால் எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது ஆகவே தமிழில் பயனர் பெயர் மாற்றி தந்தால் சந்தோசமடைவோம் முதலில் ஆங்கிலத்தில் பதிவு செய்தமைக்காக வருந்துகிறேன் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் அறிஞர் அவர்கள் இதை கவனத்தில் கொள்வார்கள் என நினைக்கிறேன்
நீதியாய் வாழ்வோம் நம்முள் இறைவனை காண்போம்
அமரன் நீங்கள் அவர் இறுதியில் கூறியிருந்ததை கவனிக்கவில்லையா ? இதோடுவிட்டுவிடுங்கள் என்று அதனால்தான் நான் அப்படி எழுதவேண்டியுள்ளது
அமரன் அய்யா என்றழைத்து என்னை தனிமைப்படுத்த வேண்டாம். வயசுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் நட்புக்கு இதெல்லாம் பிரச்சனையே அல்ல. நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள் மகிழ்வாயிருக்கும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks