தவறில்லாதவர் முதலில்
கல்லெறியலாம்....
சொல்கேட்டவர்
கல்லெடுக்கவில்லை
ஏசு உட்பட.
தவறில்லாதவர் முதலில்
கல்லெறியலாம்....
சொல்கேட்டவர்
கல்லெடுக்கவில்லை
ஏசு உட்பட.
அன்புடன் சுஜா.
ஏசவில்லையே
ஏசு...
பாராட்டுகள்.
போட்டீர்களே, ஒரு போடு!
பொதுவாய் யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவட்டவர் அல்லர்..
ஆனாலும் இங்கே இயேசு அப்பாற்பட்டவர் என்று என் மனம் சொல்கிறது!
சொன்னவர் அப்படிச் சொன்னதே அவரின் தூய்மையால்தான் அல்லவா?
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
சிந்திக்க வய்த்த வரிகள்
மேலெழுப்பி முத்துவேலுக்கு நன்றி..
--------
இளசண்ணா சொன்ன மாதிரி, விமர்சனத்துக்கு அப்பார்ப்பட்டவர் என்று யாரும் இல்லை..
ஆனால் சுஜா நீங்க என்ன சொல்ல வரீங்க னு எனக்கு புரியல..
ஏசு அந்த பெண் மீது கல்லெறிஞ்சிருக்கனும் என்று சொல்ல வரீங்களா..
இன்னொருத்தர் மீது கல்லெறிந்துதான் நாம் நம்மை தூயவர் என்று நிறுபிக்கத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வரீங்களா..
கல்லெறியாதவரை நாமும் பாவி என்று சொல்ல வரீங்களா..
சுஜா உங்க கவிதையை திருப்பி வாசிங்க புரியும்..
அன்புடன் ஆதி
கர்த்தர் சொல்லிய கூற்றுப்படி நல்லவன் மட்டுமே கல்லெடுக்க வாய்ப்பிருக்கிறது. அப்படிஎன்றால் கர்த்தர் கல்லெடுத்திருக்க வேண்டும். இல்லையே . அப்படிஎன்றால் என்ன அர்த்தம் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள். இவ்வுலகில் எவரும் முழுவதுமாக நல்வர்களாக இருந்திருக்க முடியாது என்பதே என் கோணம்.
அன்புடன் சுஜா.
//கர்த்தர் சொல்லிய கூற்றுப்படி நல்லவன் மட்டுமே கல்லெடுக்க வாய்ப்பிருக்கிறது. அப்படிஎன்றால் கர்த்தர் கல்லெடுத்திருக்க வேண்டும். இல்லையே . அப்படிஎன்றால் என்ன அர்த்தம் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள். இவ்வுலகில் எவரும் முழுவதுமாக நல்வர்களாக இருந்திருக்க முடியாது என்பதே என் கோணம்.//
அதைத்தான் நான் என் முந்தைய பதிவில் கேட்டேன்..
கர்த்தன் கல்லெடுத்திருக்க வேண்டும் என்பது தானே உங்க வாதம், கல்லெடுக்காத வரை அவனும் பாவியே சரிதானே..
ஒரு வேளை கர்த்தன் கல்லெடுத்திருந்தால் கவிதை எப்படி இருந்திருக்கும்..
பாவத்தை ரத்தத்தால் கழுவ வந்தவன்
பாவத்தை கல்லால் கழுவினான்..
சரியா
சுஜா அடிச்சாலும் தப்பு அடிக்கலைனாலும் தப்பு..
இன்னொருத்தனை கெட்டவனாக்கி நாம் நல்லனாகனுமா ?
அன்புடன் ஆதி
// சுஜா அடிச்சாலும் தப்பு அடிக்கலைனாலும் தப்பு..
இன்னொருத்தனை கெட்டவனாக்கி நாம் நல்லனாகனுமா ? //
ஒரு கவிதை எழுதுனது குத்தமா. நான் அவர குற்றம் சொல்லி என்னை நல்லவனாகவோ கெட்டவனாகவோ காட்டிக்கொள்ள வில்லை. அவர் சொன்ன குற்று படி ஒரு சின்னபுள்ளைதனமா எழுதிய கவிதை;அவ்வளவுதான்.
அன்புடன் சுஜா.
சுஜா, கோவப்படாதீங்க.. விவாதிக்கிறேன் அவ்வளவுதான் என் விவாதம் கூட சின்னப்புள்ளதனமா இருக்கலாம்..
கண்மணி அக்கா கிட்ட நம்பிகோபாலனின் ஒரு கவிதை திரில இப்படித்தான் சின்னப்புள்ளதனமா விவாதம் பண்ணிருக்கேன்.. பேச பேச நாம் நிறைய கற்றுக்குறோம்.. ஒரு கவிதையை குறித்த அதிகபட்சமான விவாதம் தான் அந்த கவிதையின் மேலும் புரிந்து கொள்ள வைக்கும், வெறுமனே நல்லா இருக்கு என்று சொல்லி போகிற பின்னூட்டங்களை பார்க்கையில் நான் உண்மையிலயே நல்லாதான் எழுதறனா னு யோசிப்பேன்..
சோ, விவாதம் என்பது கவிதையை செதுவே ஒழிய அதிமேதாவிதனத்தை காட்டவோ, குற்றம் சொல்லவோ அல்ல.. புரிதலுக்கு நன்றி..
Last edited by ஆதி; 21-04-2010 at 07:51 PM.
அன்புடன் ஆதி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks