மனதை நெகிழவைக்கும் கதை. இதுபோன்ற கணவர்கள் இருந்துவிட்டால் பெண் இனம் என்றென்றும் துயரபடாது.
மனதை நெகிழவைக்கும் கதை. இதுபோன்ற கணவர்கள் இருந்துவிட்டால் பெண் இனம் என்றென்றும் துயரபடாது.
நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.
சிறப்பான சிறுகதை.
ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் அறிவுமலர், சேவியர் ராஜா மற்றும் குணமதி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நல்லுணர்வு
புரிந்துணர்வு
மனித நேயம்
தர்ம நியாயம்..
மனதுக்கு மருந்தான இந்த இதமானவை
நம் சிவாவின் படைப்புகளில் விரவி மணக்கும்..
இங்கும் மணந்தது..
விழி நுகர மனம் நிறைந்தது!
பிறந்த குழந்தை காணும்போதெல்லாம்
மனிதம் மேல் புதுநம்பிக்கை பூக்கும்!
இதுபோல் படைப்புகள் வாசிக்கும்போதும் கூட...
பாராட்டுகள் சிவா!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
சமூகம் இப்படி பட்ட மருமகன்களை கண்டுபிடித்து பெண் கொடுக்க முன் வரவேண்டும் .
நல்ல கதை .
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்பு நண்பர் இளசுவின் மந்திர வரிகளை என் கதைக்குப் பின்னூட்டமாய்க் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
மிக்க நன்றி இளசு.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
என்னவோ க்ளிக்கினால் எதையோ தேடினால் கணவன் அமைவதெல்லாம் அப்டின்னு அருமையான இந்த கதை கிடைத்தது சிவா...
கணவன் மனைவிக்குள் இத்தனை அந்நியோன்யம் அவர்களின் வாழ்க்கையில் எந்த புயலையும் வீசாமல் அப்படியே வீசினாலும் காப்பாற்றிவிடுகிறது இருவருக்கும் உள்ள புரிதல்....
அட வீட்டுக்கு வீடு வாசப்படி தானப்பா... மாமியார் மாமனார் கொடுமை இல்லாத வீடு இருக்கா என்ன? அப்டின்னு படிக்கிறவங்க நினைக்கமுடியாதபடி கதைவரிகள் அப்படியே நிதர்சனம் சொல்கிறது.. ஒரு வீட்ல மாமியார் கொடுமைன்னா இன்னொரு வீட்ல மருமகள் கொடுமை.. இன்னொரு வீட்ல கணவன் கொடுமை....
இங்க நீங்க எடுத்துக்கிட்ட கரு.... அதை அழகாய் கதையாய் படைத்த விதம்... அதில் எப்பவும் சொல்லும் ஒரு அற்புதமான மெசெஜ்.... சிவாவோட டச் எல்லா கதைகளிலும் நான் பார்த்து படித்து வியந்தது போல் தான் இதிலும் வியக்கிறேன்...
கல்யாணச்சந்தையில் மாப்பிள்ளைகள் விலைபோவதைப்பற்றி நிறைய கதையில் படிச்சிருக்கேன். ஆனா இங்க விக்னேஷ் தன்னோட நல்ல குணத்தால் மைதிலிக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததைக்கூட பொருட்படுத்தாமல் மனைவியை சமாதானப்படுத்த பேய் என்று மனைவியை செல்லமாக திட்டி அதுவும் அவளுக்கு வலிக்குமோ என்று தன்னையே பேய் என்றுச்சொல்லி.... உங்கள் முத்திரை இதில் மிக அழகாய் பதித்திருக்கிறீர்கள் சிவா....
நல்லவங்க இப்படி நாலுபேர் இருப்பதால் தான் நாட்டில் இன்னும் மழை பொழிகிறது போல... அதாம்பா விக்னேஷ் போன்ற நல்ல மாப்பிள்ளை. படிப்பவரே பயந்துவிடும் அளவுக்கு விக்னேஷ் அம்மா கத்துவது இருக்கிறது. கதாசிரியரின் சிறப்பு இது தான்....
சொல்லவந்ததை மழுப்பாமல் இழுக்காமல் படிப்போரை சோர்வடைய வைக்காமல் சட்டுனு நச்சுனு அதே போல் இப்படி ஒரு கணவன் எல்லோருக்கும் அமைந்தால் நாடே முன்னேறிவிடுமே என்ற சந்தோஷ உணர்வு ஏற்படுவதை தடுக்க இயலவில்லை... அத்தனை அருமையாக எழுதி இருக்கீங்க சிவா....
என்றோ நடந்த விஷயத்தை வீட்டுக்கு வந்தவர் பூடகமாக ஆரம்பிக்கும்போதே படிக்கும் வாசகர்களும் டென்ஷனாவதை தடுக்க இயலவில்லை..... ஐயோ என்னாச்சோ என்று.... பேயோ இல்லை என்னவோ ஒன்று நடந்து இருக்கிறது ஆனால் அதையும் வெச்சு பணம் பண்ணும் விக்னேஷ் பெற்றோருக்கு கடைசியாக சரியான சாட்டையடி விக்னேஷ் கொடுப்பது போல முடித்தது கைத்தட்டவைத்தது சிவா....
பேய் பிடிச்சவ நம்ம வீட்டில் இருக்கக்கூடாது. இருக்கணும்னா மேற்கொண்டு 2 லட்சம் தரணும். தர இயலன்னா கிளம்பணும். இதோ மாப்பிள்ளையும் கூட கிளம்பியாச்சு பேய்க்கூட வாழ்க்கைப்பட்டு புளியங்கொம்போ முருங்கைமரமோ... ஆனால் போகுமுன் கொடுத்தார் பாருங்க ஸ்ட்ராங்க் டோஸ் அம்மா அப்பாக்கு... பணப்பேய் பேராசைப்பிடித்து அலைபவர்கள் என்று.. அது நச்.....
புதிதாய் திருமணம் செய்தவர்கள் என்பதை மிக நுணுக்கமாய் இழை இழையாய் ஓடும் அன்பும் பாசமும் காதலும் செல்லக்கூடலும் மிக அருமையாய் கையாண்டிருக்கீங்க கதையில்....
அன்பு வாழ்த்துகள் சிவா.... அருமையான கதைப்பகிர்வு....
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
ரொம்ப ரொம்ப நன்றிங்க மஞ்சு. வரதட்சணை....என்னைப்பொருத்தவரை இந்த வார்த்தை கெட்ட வார்த்தை. எங்கள் வீட்டில் யாருமே வாங்காதது....கொடுக்காதது....இருப்பினும் இல்லறம் நல்லறமே. பணம் தீர்மானிக்கும் வாழ்க்கை....பிணமாய் வாழ்வதற்கு ஒப்பானது...மனம் தீர்மாணிக்கும் வாழ்க்கை....மணமாய் வாசம் வீசுவது. எங்கள் குடும்பத்தில் வீசுகிறது. அவற்றை அநேகர் குடும்பங்களிலும் காண்கின்ற ஆவலே இக்கதைக்கான காரணம்.
நீண்டநாட்களுக்கு முன் எழுதிய கதைக்கு இப்போது கிடைத்திருக்கும் அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks