விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரி மீண்டும் கைது!
பிரபல நடிகை புவனேஸ்வரியை விபச்சார வழக்கில் சென்னை போலீசார் இன்று மீண்டும் கைது செய்தனர்.
டிவி மற்றும் சினிமாவில் பிரபல நடிகையாக உள்ளவர் புவனேஸ்வரி.
சில மாதங்களுக்கு முன்பு தி.நகரில் உள்ள பங்களாவில் வாடிக்கையாளருடன் அவர் இருந்தபோது விபச்சாரத் தடுப்புப் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் வழக்கம்போல வெளியில் வந்த புனேஸ்வரி, தான் அந்த மாதிரி தொழில் செய்யவில்லை என்றும், நண்பர்களுடன் இருந்தபோது பிடித்துவிட்டதாகவும் பேட்டி கொடுத்தார்.
ஆனால், அவர் தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு தனி குழுவே அவர் தலைமையில் இதில் செயல்படுவதாகவும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை விபச்சாரத் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்திய போலீசார், புவனேஸ்வரியை மீண்டும் அவரது வாடிக்கையாளருடன் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அவரை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள விபச்சார தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். புவனேஸ்வரியைச் சுற்றி இயங்கும் விபச்சாரக் குழுவைப் பிடிக்க முயன்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நன்றி ; தட்ஸ் தமிழ்.
Bookmarks