மனம் திறந்து உங்களோடு......
(மற்றவருடைய பதிவுகள்)
அன்பு மன்ற உறவுகளே,
இணைய உலகில், "தமிழ் மன்றம்" 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகமெங்கும் உள்ள தமிழ் ஒன்றுப்பட்டு, தனித்தமிழில் பேசி, மகிழ உருவாக்க தளம் இது. இன்றைக்கு 6500 மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டுவருகிறது.
பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்கியது இந்த மன்றம்.
உண்மையான படைப்பாளிகள்... இனம் காணப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு.. எழுத்து உலகில் சிறக்க வேண்டும் என்பதே மன்றத்தின் விருப்பம்.
இன்றைய எழுத்து உலகில், இணைய வளர்ச்சியால் உண்மையான படைப்பாளியை கண்டுபிடிப்பது அரிதாகி விட்டது. ஒரிடத்திலிருந்து எடுத்து, மற்றொரு இடத்தில் தங்கள் பதிப்பாக பதிவிடும் கயவர் கூட்டம் அதிகமாகிவிட்டது. இது மாதிரியான செயல்களை மன்றம் ஆதரிப்பதில்லை.
பதிவுகளுக்கு வரும் பாராட்டுகள் உண்மையான படைப்பாளியை சென்று சேரவேண்டும் என்பதே மன்றத்தின் விருப்பம்.
அதனால், மற்றத்தளங்களில் இருந்து பதியப்படும் பதிவுகளை "படித்ததில் பிடித்தது" என்ற பகுதியில் பதிய அறிவுறுத்துகிறோம்.
சிரிப்புப்பகுதியில் வரும் பல பதிவுகளுக்கு உண்மையான படைப்பாளியை கண்டறிவது இயலாத காரியமாகிவிட்டது. ஒரே சிரிப்பு பல இடங்களில் இருக்கிறது. அதனால் மற்ற இடங்களிலிருந்து எடுத்து கொடுத்தால், எடுத்த தளத்திற்கு நன்றி சொல்ல அறிவுறுத்துகிறோம்.
மன்றத்தின் நன்மைக்காக சில நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்கவேண்டியது அவசியமாகிறது.
மாற்றான் படைப்புகளை தம் சொந்தப் படைப்புப் போல மன்றத்தில் கொடுப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மடல் கொடுக்கப்படும். அவர்களின் பதில் வராவிட்டாலும், விரும்பத்தகாத இச்செயலை தொடர்ந்து செய்தாலும் மன்றத்திலிருந்து தடை செய்யப்படுவர். தவறாக பதித்த பதிவும் குப்பைக்கு நகர்த்தப்படும்.
சில தளங்கள் பதிவுகளை அதிகரிக்கும் நோக்கத்தில், திருட்டு பதிவுகளை அனுமதிக்கலாம். "தமிழ் மன்றத்தின்" நோக்கம் அது அல்ல..
தரமான பதிவுகளை கொடுங்கள்....
உண்மையான படைப்பாளியை பாராட்டுங்கள்...
அன்புடன்,
அறிஞர்
Bookmarks