உண்மைதான் அறிஞரே. நிச்சயம் நம் மக்கள் இதை பின்பற்றுவார்கள் என்றே நம்புகிறேன்.
உண்மைதான் அறிஞரே. நிச்சயம் நம் மக்கள் இதை பின்பற்றுவார்கள் என்றே நம்புகிறேன்.
அவசியமான பதிவு சரியான நேரத்தில் வந்த அறிவிப்பும் கூட. சுயமாக எழுதவும் அதை படித்து மற்றவர்கள் கருத்திட்டு அதனால் தம் எழுத்தை மெருகேற்றவும் தான் இந்த மன்றத்தின் நோக்கமும் பயனும் கூட.
நல்ல விஷயங்களை பிற இடத்திலிருந்து எடுத்து தருவதில் தவறில்லை. அதே நேரத்தில் உரிய படைப்பாளிக்கு நன்றி தெரிவிப்பதும் மிகவும் அவசியம்.
நான் அலுவலக நேரத்தில் சில சமயம் மன்றத்தில் இருந்தால் நண்பர்களே கேட்பார்கள் என்ன செய்கிறாய் என்று. நான் சொல்வேன் மன்றம் இணையத்தின் index. இங்கு அனைத்தும் கிடைக்கும் இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம், நகைச்சுவை, செய்திகள், மென்பொருட்களை பற்றி தகவல்கள், அரிய புகைப்படங்கள், மென்பொருட்கள், புதிய மின்னனு இயந்திரங்களை பற்றி தகவல் பரிமாற்றம் என்று.
இதனை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டுமென்று கோரிக்கைவிட்டவர்களின் பட்டியலில் என் பெயரும் இருக்கும்.
நன்றி.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
தக்க நேரத்தில் சரியான அறிவிப்பு அனைவரும் செவி மடுத்து கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்வோம்
நாமே சுயமாய் இரண்டு வரி எழுதி.... அதற்கு நண்பர்களிடமிருந்து கிடைக்கும் பின்னூட்டங்களை (பாராட்டியோ அல்லது திட்டியோ..) படிக்கும்போது எழும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை...! மன்ற விதிகளை அனைவரும் மதித்து நடந்தால் மன்றமும் நாமும் செழிப்புறுவோம் என்பதில் ஐயமில்லை...! (ஆமா... ரொம்ப நாளா மனறத்திற்கு வராததால் என்ன நடந்தது என்பது தெரியவில்லை...!)
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
வாங்க ஜெயாஸ்தா, எங்கே உங்களது ஆழமான பின்னூட்டங்களையும் கவிதைகளையும் காணவில்லையே என்று காத்திருந்தோம்..!!
அது இருக்கட்டும் - வந்திட்டீங்க இல்லே, இனிக் கலக்கிடலாம்..!!![]()
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நீண்ட நாட்களுக்கு பிறகு மன்றம் வந்ததும்
இது போன்ற ஒரு செய்தி வருத்தம் அளிக்கின்றது.
மன்றத்தில் வீண் குப்பைகள் சேர்வதை தடுப்போம்.
தரமான பதிகளை தர முயற்சி செய்வோம்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
வணக்கம். தங்களின் மனம் திறந்த மடல் புதியவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உரியதே!
சரியான சமயத்தில் நிறைவான பதிவு.
சுயகட்டுப்பாடு இருந்தால் அறிஞரின் இந்த வேண்டுகோள் தேவையற்றதாகியிருக்கும்.. சிலர் வேறு இடங்களிலிருந்து சுட்டுக்கொண்டு வந்து தங்களுடைய பதிவுபோல் பெயர்வாங்க நினைக்கும் சின்னத்தனத்தை என்னவென்று சொல்வது.
உங்களுடைய நிபந்தனையை ஏற்றுக்கொள்கின்றேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks