நண்பர்களே…
மன்றத்தில் பலவிதமான விவாதங்களில் நாம் இதுவரைப் பங்கெடுத்து வருகிறோம். இப்போது புதிய வடிவில்… எழுத்து வடிவில் பட்டி மன்றம் என்ற விவாதக்களம் ஒன்று அறிமுகப் படுத்துவோமா?
விதிகள்:
- பட்டி மன்ற நடுவர் ஒருவர் இருப்பார்.
- நடுவர் பட்டிமன்றத் தலைப்பைத் தேர்வு செய்து நிர்வாக அனுமதியுடன் (நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தனிமடலில் அனுப்பி) புதிதாகத் திரி ஒன்றைத் துவக்குவார்.
- கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் விருப்பத்தைத் தனிமடலில் தெரிவிக்க வேண்டும். அதோடு எந்தப் பக்கத்தில் வாதிட விரும்புகிறீர்கள் என்பதையும் தெரிவிக்கலாம்.
- எந்தப்பக்கம் நீங்கள் வாதிட வேண்டும் என்பதை நடுவர் தான் இறுதி செய்வார்.
- கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அணிகளின் உறுப்பினர் எண்ணிக்கை இருக்கும்.
- ஒற்றைப் படையாக இருக்கும் பட்சத்தில் நடுவர் விருப்பப்படி புதிதாக ஒருவரை அழைக்கவோ அல்லது ஒருவரை விலக்கவோ செய்யலாம்.
- நடுவர் முதலில் அறிமுகவுரை கொடுத்துவிட்டு எழுதவேண்டிய நபரை அழைப்பார்.
- தொடர்ந்து அழைக்கப்பட்டவர் தனது பக்க விவாதத்தை வைப்பார்.
- ஒருவரை அழைக்கும் போது அவர் தனது விவாதத்தைப் பதிய வேண்டிய அவதியும் நடுவரால் கொடுக்கப்படும்.
- அதில் எதேனும் மாற்றம் வேண்டும் என்றால் நடுவருக்குத் தனிமடலில் தெரிவிக்க வேண்டும்.
- குறிப்பிட்ட நாளுக்குள் அவர் கருத்துப் பதியவில்லை என்றால் நடுவரின் விருப்பத்திற்கேற்ப அடுத்த அணிக்கோ அல்லது அதே அணியின் அடுத்த நபருக்கோ அல்லது புதிதாக யாரையேனும் சேர்த்துக் கொள்ளவோ செய்யலாம்.
- மொத்தம் இரண்டுச் சுற்றுகள் விவாதம் வரும்.
- ஒருவருக்கு ஒரு சுற்றுக்கு ஒரு பதிவுக்கு மட்டுமே அனுமதி.
- அணி விவாதகர்கள் ஒவ்வொருவரின் பதிவுக்கு அடுத்து நடுவர் அடுத்த பதிவரை அழைப்பார்.
- நடுவரின் அழைப்பிற்குப் பிறகு தனது பதிவைத் திருத்திப் பதிதல் கூடாது. எழுத்துப் பிழைகளை பொறுப்பாளர்கள் வாயிலாக நீக்கலாம்.
- மன்ற விதிகளுக்கு கட்டுப்படாத வாதங்களை நீக்கும் உரிமை நடுவருக்கும் நிர்வாகத்திற்கும் உண்டு.
- தவறான கருத்துக்களை பதித்து திருத்த இயலாதோர் தனது அணியின் அடுத்தப் பதிவாளருக்கு தனி மடலிட்டு அவரது பதிவில் தெரிவிக்கச் சொல்லலாம்..
- தனது அணியின் பிற உறுப்பினர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் அனைத்தும் தனிமடல் மூலமாகவே இருக்கவேண்டும். திரியில் இடம்பெறக் கூடாது.
- இறுதியாக எல்லோருடைய பதிவுகளின் தொகுப்புரைக்குப் பின் நடுவர் தனது தீர்ப்பை வழங்குவார்.
- ஒரு பட்டி மன்றத்தின் இறுதியில் அடுத்த நடுவர் தேர்ந்தெடுக்கப் படுவார். அவர் அடுத்தப் பட்டிமன்றத்தைத் தொடர்வார்.
- இதற்குப் பின்னரே மற்றவர்கள் அந்தத் திரியில் பின்னூட்டமிட அனுமதிக்கப் படுவீர்கள்.
என்ன நண்பர்களே களத்தில் இறங்கத் தயாரா ?
இது தொடர்பான உங்களது ஆலோசனைகளை முன்வையுங்கள்.
Bookmarks