Page 1 of 23 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 265

Thread: **கவிக்குள் கவி***:ஒரு கவிதை விளையாட்டு..

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0

    **கவிக்குள் கவி***:ஒரு கவிதை விளையாட்டு..

    மன்றத்தில் உள்ள அனைவருக்கும் வணக்கங்கள்
    உங்கள் அன்பொடும், மன்றத்தில் உள்ளவர்களின் அனுமதியோடும் ஒரு விளையாட்டு போட இருக்கிறேன்...

    ஒரு கவிதை விளையாட்டு..

    ஒருவர் ஒரு கவிதை போட்டுவிட்டு...
    "அடுத்த தலைப்பு" என்று
    ஒரு தலைப்பை விட்டு செல்ல வேண்டும்...

    அடுத்து வருபவர்
    அந்த தலைப்புக்கு கவிதை போட்டுவிட்டு
    அவர் ஒரு "தலைப்பை" விட்டு செல்ல வேண்டும்...

    இல்லை எனில்
    உங்கள் கவிதையில் வரும் ஒரு சொல்லையோ...
    அல்லது வரியையோ தலைப்பாக கொடுக்கலாம்.......
    கடைசி வரி தான் போடணும் என்று இல்லை...
    கவிதையில் உள்ள எந்த வரியானாலும்..அல்லது வேற சொல்..தரலாம்...

    இது தான் விளையாட்டு....

    இதோ நான் ஆரம்பித்து வைக்கிறேன்...


    நித்தம் உனை நினைத்தேன்..
    நெருங்கிவரத் துடித்தேன்...
    கைக்கு எட்டாத பொருள்ளாய் நீ...
    உன்னை பார்த்து வளர்ந்தவள் நான்
    நான் உன்னிடம் வர கூடாதா??
    என் கையில்...
    நீயாவது வந்து விடு
    நிலவே....


    அடுத்த தலைப்பு.....

    நிலவே.......
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    என்னவோ சொல்ல வர்றீங்க... ஆனா என்னன்னுதான் என் மரமண்டைக்குப் புரியலை.

    கவிதையின் கடைசி வரி எடுத்து கவிதை எழுதியாச்சு,
    ஒருவர் தொடர, அதைத் தொடர்ந்தும் கவிதை எழுதியாச்சு
    கவிதை வகையறாக்கள் (பதில், எதிர்வினை, விமர்சனம்) எழுதியாச்சு
    படக்கவிதையும்...
    இப்போது இது..

    உங்க கவிதைக்கு கொஞ்சம் ஒட்டி வரும்படியான (Similiar) கவிதை ஒண்ணு கீழே...

    அவள் கண்ணுக்குள்
    வந்தது எப்படி
    (என்) கைக்கெட்டாத நிலவே!!??

    இப்படி தொடரலாம் என்று நினைக்கிறேன்.!!
    உங்க கருத்து??

    - தீபா

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    ஐயோ...என்னையே குழப்பி விட்டீங்கள்...
    நான் சரியாக புரியும் படித்தான் போட்டு இருக்கேன் என்று நினைக்கிறேன்...

    கடைசி வரி தான் போடணும் என்று இல்லை...
    கவிதைக்குள் வரும் எந்த சொல்லாக இருந்தாலும் சரி.....
    அல்லது வேற சொல்.. தரலாம்...
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    ஆமாவா??
    குழப்பிட்டேனா?

    சரி விடுங்க... அடுத்த கவிதை கொடுங்க.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இது பாட்டுக்குப் பாட்டு வகையறாவைச் சேர்ந்தது. நிலவேயில தொடருங்கன்னு கவிதா சொல்லி இருக்காங்க..

    நிலவே
    தேய்ந்து காணாமல் போய்
    வளர்ந்து முழுமையாகி
    உருவஜாலம் காட்டுகிறாயே..
    உன்னைப் பார்த்துத்தான்
    என்னவளைப் படைத்தானோ
    பிரம்மன்..

    இப்போ அடுத்தவர் உன்னை"யில தொடரலாம்.. இப்படித்தானே கவிதா.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    உன்னை என்னவென்று சொல்லி அழைப்பது
    இதயத்திற்குள் இல்லாத காதலியென்றா..?
    இனிப்பிற்க்குள் இல்லாத சர்க்கரைபோல் - என்
    கனிபிற்க்கு அடங்காத நேசமென்றா...?
    இல்லையென்று நீ சொன்னபோதும்
    இருக்குமென்ற இயலாத கானலென்றா...?

    என்னவளை படைத்த பிரம்மனே
    ஏதாவது பதில் இருந்தால் சொல்லிவிட்டு போ...

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    சொல்லிவிட்டு போ..
    உன்னை எண்ணி வாழும்
    எனக்கு இல்லை..
    உன்னை நினைத்து துடிக்கும்

    இதயத்திற்கு....
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இதயத்திற்கு
    வேலை மாற்றம்...
    சுத்திகரிக்கும் வேலையிலிருந்து,
    சுத்தி வரும் வேலைக்கு...
    எனக்குக் காதல் வந்ததே...

    இதயத்திற்கு
    வேலை மாற்றம்...
    இரத்தம் பாய்ச்சும் வேலையிலிருந்து,
    இரத்தம் காய்ச்சும் வேலைக்கு...
    உனக்கும் காதல் வந்ததே...
    Last edited by அக்னி; 24-08-2009 at 10:54 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    மாற்றம்
    எனக்குள் வந்தது..
    உன்னை பார்த்த கணத்தில்
    என் நெஞ்சம் துடித்தது
    எனக்காய் பிறந்தவன் நீயோ...
    என்னை உன் பார்வையால்
    கட்டி இழுத்தாய்....
    இன்றுவரை விடுபட இயலவில்லை
    என்னால்...
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    எனக்காய் பிறந்தவன் நீயோ...
    ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாய்
    வாழ்ந்த வாழ்க்கை...!
    வாழும் வாழ்க்கை முழுதும் நீ அருகிலிருக்க
    நான் உன் துணையாக இருப்பேன் என்ற கனவு...!
    இன்று நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கிறதே....
    கற்பனை தான் என எண்ணும் அளவிற்கு
    என் நிகழ்காலம் உன் நினைவுகளை மட்டும்
    தந்துவிட்டு சென்ற இறந்தகாலம் ஆகிவிட்டதே....?!
    என் நினைவு என்னும் நீரூற்று உள்ள வரை
    அது என்றுமே பசுமையான சோலையில்
    தென்றலாக வீசிக்கொண்டு இருக்கும்
    உன்னை சந்திக்கும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து.......!!!!!!!!!!!!!
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    தென்றலாக வீசிக்கொண்டு இருந்த
    என்னுள் புயலாய் வந்தவனே...
    மின்னலாய் மறைந்து போய் விடாதே....
    உன்னை பிரிந்தால் உயிர் வாழ இயலாது
    என்னால்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மின்னலாய் சன்னலால்
    தென்றல் காற்று.

    சாத்தப்பட்டது கதவு..

    கதவிடுக்கில்
    சிக்கிக்கொண்டது மனசு..!

    கசியும் குருதியின்
    ஜதிகளுக்கு
    உதறும் உடலின்
    நாட்டியம்..

    அக்கம் பக்கங்களின்
    சொண்டாட்டம்
    பக்க வாத்தியம்..

    அரங்கேறுகிறது
    ஜெய சாம்ராய்யம்..
    கரகோஷம் நிச்சயம்.

Page 1 of 23 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •