மன்றத்தில் உள்ள அனைவருக்கும் வணக்கங்கள்
உங்கள் அன்பொடும், மன்றத்தில் உள்ளவர்களின் அனுமதியோடும் ஒரு விளையாட்டு போட இருக்கிறேன்...
ஒரு கவிதை விளையாட்டு..
ஒருவர் ஒரு கவிதை போட்டுவிட்டு...
"அடுத்த தலைப்பு" என்று
ஒரு தலைப்பை விட்டு செல்ல வேண்டும்...
அடுத்து வருபவர்
அந்த தலைப்புக்கு கவிதை போட்டுவிட்டு
அவர் ஒரு "தலைப்பை" விட்டு செல்ல வேண்டும்...
இல்லை எனில்
உங்கள் கவிதையில் வரும் ஒரு சொல்லையோ...
அல்லது வரியையோ தலைப்பாக கொடுக்கலாம்.......
கடைசி வரி தான் போடணும் என்று இல்லை...
கவிதையில் உள்ள எந்த வரியானாலும்..அல்லது வேற சொல்..தரலாம்...
இது தான் விளையாட்டு....
இதோ நான் ஆரம்பித்து வைக்கிறேன்...
நித்தம் உனை நினைத்தேன்..
நெருங்கிவரத் துடித்தேன்...
கைக்கு எட்டாத பொருள்ளாய் நீ...
உன்னை பார்த்து வளர்ந்தவள் நான்
நான் உன்னிடம் வர கூடாதா??
என் கையில்...
நீயாவது வந்து விடு
நிலவே....
அடுத்த தலைப்பு.....
நிலவே.......
Bookmarks