ஏக்கத்துடன் ஒரு தாய்
தன்னை தாயென அழைக்க
வெறுக்கும் மகவை
சுமந்தாள் அன்று
ஒன்பது திங்கள்
ஊண் உறக்கம் மறந்தாள்
தன் நலன் காக்க தவறினாள்
தன் வயிற்றில் பூத்த உயிருக்காக
தன் உயிரையே பணையம்
வைத்தாள்
எல்லாம் மறந்த மகவை
இன்று வளர்ந்து
பெற்றுவளர்த்த தாயை
அம்மாவென கூப்பிட
கூசுகிறான் ஏசுகிறான்
அனைத்தும் கேட்டு
அமைதியாய்
கண்ணீர் வடித்து
காத்திருக்கிறாள்
அம்மாவென்று
அழைக்கும் ஒரு குரலுக்காய்
ஏக்கத்துடன் ஒரு தாய்
Bookmarks