Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 64

Thread: சௌந்தர்யலஹரி - புதுமைத் தொடர்கதை அத்தியாயம் ஆறு (கலை எழுதியது )

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0

    சௌந்தர்யலஹரி - புதுமைத் தொடர்கதை அத்தியாயம் ஆறு (கலை எழுதியது )

    நண்பர்களே!

    இந்த சௌந்தர்யலஹரி எனும் தொடர்கதையில் என்ன புதுமையெனில் இக்கதை என் ஒருத்தியால மட்டும் எழுதப்படப்போவதில்லை!

    நான் ஒருஅத்தியாயமும் அதைத்தொடர்ந்து என் மதிப்பிற்குரிய அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்கள் அடுத்த அத்தியாயமுமாய் மாறி மாறி எழுதப்படப்போகிறது!

    உங்கள அனைவரின் ஆதரவுடன் நான் முதல் அத்தியாயத்தைத் தொடங்குகிறேன்!



    சௌந்தர்யலஹரி அத்தியாயம் - ஒன்று


    யில் நகரத் தொடங்கும்போது வயதான ஒரு பெரியவரும் ஒரு பாட்டியும் முடியாமல் வந்து ஏறினர். ஏறி வந்து இருக்கை தேடி அமர்ந்தனர். கையில் சிறிய துணிப்பை தவிர வேறு ஒன்றும் இல்லை. மூச்சு இரைத்தது இருவருக்குமே!

    இருவரும் தமது கைகளை இறுக்கப் பற்றி இருந்தனர். எதிர் சீட்டில் அமர்ந்த குடும்பம் இந்த வயதான தம்பதிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தது. குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று அந்த குடும்ப பெரியவர் கேட்டார் வயதானவரிடம்.

    அவர் அடுத்து இருந்த பாட்டியிடம்

    ''நீ குடிக்கிறியா சௌபர்ணிகா? ''என்று கேட்கிறார்.

    ''வேண்டாம் விஷ்வா! எனக்கு மயக்கமா இருக்குடா ''

    ''சரி என் தோள் மேலே சாய்ஞ்சுக்கோ பசிக்குதா? ''

    '' இல்லடா ''

    '' சரி சாய்ஞ்சுக்கோ ''

    உடனே எதிர்சீட்டிலிருந்த பெரியவர் ராமனாதன்

    ''என்ன ஐயா அவங்களுக்கு படுக்கணும்னா சொல்லுங்க நீங்க இந்த பக்கம் வந்துருங்க அவங்க தாராளமா படுக்கட்டும்.'' என்று அக்கறையோடு சொன்னார்!

    '' இல்ல இவளோட தலைக்கு அணையா என்னிக்கும் என் தோள் தான் வேணும் ''

    அவர்களை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் அந்த பெட்டியில் இருந்த அனைவருமே!

    பாட்டி மெல்ல தலை சாய்த்து கொள்கிறார் பெரியவரின் தோளில்!

    பெரியவர் பின் தன் தலையை சாய்த்துக்கொண்டு கண் மூடுகிறார்.

    ரயிலின் ஆட்டம் இருவரையும் சற்றே கண்ணயர வைக்கிறது!

    ஸ்டேஷன் ஏதோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு பெரியவர் கண் விழிக்கிறார்.

    '' சௌபர்ணிகா உனக்கு பசிக்குமே எதாவது சாப்பிட வாங்கி வரவா ?''

    '' வேண்டாம் விஷ்வா நீ போகாதடா என்னோடவே இரு எனக்கு பசிக்கல! ''

    '' ஆனா எனக்கு பசிக்கிறதேடி ''

    இருவரது குரலிலும் அன்பைத்தவிர வேறெதுவுமே காணப்படவில்லை!

    '' வெள்ளரி பிஞ்சு வாங்கிக்கோங்க சார் '' ஒரு சிறிய பெண் பரட்டை தலையோடு பரிதாபமாகப் பார்த்தாள்.

    அவர் ஏறிட்டுப் *பார்த்தார்.

    உடனே காசு கொடுத்து ஒரு கட்டு வெள்ளரிப்பிஞ்சுகள் வாங்கி வைத்துக்கொண்டார் !

    '' தண்ணியாவது வாங்கிட்டு வரேண்டா '' பெரியவரின் குரல் கெஞ்சியது!

    '' வேண்டாம் விஷ்வா விட்டுப் போகாதடா ''

    எதிரில் இருந்த குடும்பம் சிநேகமாய் சிரித்து '' எங்களோட ஷேர் பண்ணிக்கோங்க *நீங்க என் அப்பா அம்மா மாதிரி இருக்கீங்க. உங்க ரெண்டு பேர் மனசுல என்னவோ கவலை. எங்க அப்பாவோட அஸ்தியை கரைக்க தான் காசிக்கு போயிட்டு இருக்கேன். ராமனாதனின் குரலில் வாத்சல்யம் தெரிந்தது!

    பெரியவர் அமைதியாக சொன்னார்

    '' இல்லப்பா ஒன்னும் சாப்பிடற நிலைமையில நாங்க ரெண்டு பேருமே இல்ல!
    ஆனா காசிக்கு போனா தங்க ஒரு நல்ல வீடு மட்டும் முடிஞ்சா பார்த்துக்கொடுங்க '' என்று சொன்னார்.

    '' கண்டிப்பாக ஐயா '' ராமனாதன் வாஞ்சையாய் கூறினார்!

    இருவரும் வெள்ளரி பிஞ்சை சாப்பிட்டனர்!

    இரவானது.

    எல்லாரும் படுக்க தயாராயினர்.
    '' பாட்டிக்கு வேணும்னா கீழ்பர்த் தர்றோம் நீங்களும் கீழ் பர்த் எடுத்துக்கோங்க''

    சொன்னார் ராமனாதனின் மனைவி!

    குழந்தைகள் இருவரும் பேரக்குழந்தைகள் என்று சொன்னார் ராமனாதன்!

    '' எங்களுக்கு ஒரு பர்த் போறும்பா அவள் மடியில் நான் கொஞ்சநேரம் தலை சாச்சுப்பேன் அப்புறம் என் மடியில அவ கொஞ்ச நேரம் தல சாச்சுப்பா நான் தனியா படுத்தா இவளோட இதயத் துடிப்பை கேட்க முடியாதுப்பா ''

    அவர்கள் அதிசயமாக பார்த்தார்கள்

    இருவர் அமரும் சீட்டில் மாறி பெரியவரும் பாட்டியும் அமர எல்லாரும் உறங்க ஆரம்பித்தனர் பெரியவரும் கண்ணசந்து பாட்டியின் மடியில் தலை வைத்து உறங்க முயற்சி செய்தார்.

    உறக்கம் வரவில்லை.

    கண்ணில் நீர் வழிந்து பாட்டியின் தொடை நனைந்தது!

    '' என்னடா விஷ்வா அழறியா?

    பாட்டியின் கையைப்பிடித்துக்கொண்டு சிறு பிள்ளையாய் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

    '' முடியலடா என்னால ....என்னால நம் பிள்ளைகளை மறக்க முடியலடா ''

    '' நீ அழக்கூடாதுடா ''

    பாட்டி பெரியவரின் கண்களை தன் முந்தானையில் துடைத்தார்

    '' விஷ்வா அழாதேடா உன் தைரியம் தானே என்னை உன்னுடன் வரச் செய்தது இந்தத் தள்ளாத வயதிலும்! நீ இப்படி குழந்தையா அழுதா நான் என்னடா பண்ணுவேன்? நீ தூங்க நான் பாடவா ? '' என்றார்.

    பெரியவர் சொன்னார் '' பாடு ''

    '' சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே.....''
    அவர் மெல்ல கண் மூடி உறங்க ஆரம்பித்தார்.

    இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டது பாட்டிக்கு!

    மெல்ல அழுகையோடு '' உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி '' என்ற பாட்டை பாடினார் பாட்டி!

    '' இறைவா இந்த குழந்தையை நான் உயிருள்ளவரை பத்திரமா பார்த்துக்க எனக்கு சக்தி கொடுப்பா ! நான் இறந்து இந்த குழந்தை அனாதையாகக் கூடாது இறைவா! மனம் நிறைந்து இவன் வாழனும்! சந்தோஷம் என்னால கொடுக்க முடியுமோ இல்லையோ ஆனால் நிம்மதி தரணும் இவனுக்கு! இவன் உயிர் என் மடியில் போகும்போதே நானும் இவன் கையைப் பிடித்து இவனோட போகனும் இறைவா '' என்று பாட்டி அழுதார்!

    அப்படியே விடிந்தது.

    இனி கலைவேந்தன் தொடர்வார்...!
    Last edited by மஞ்சுபாஷிணி; 28-08-2009 at 06:09 PM. Reason: தலைப்பு மாற்றம்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    புதுமையாக ஆரம்பம்...
    கலை அண்ணாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்....

    வயதானாலும் இருவரின் பேச்சிலும் அன்பு ஆளுமை செய்கிறது... தொடர வாழ்த்துக்கள்
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    நல்ல முயற்சி.இதற்கு முன்பு சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் சேர்ந்து மாறி மாறி அத்தியாங்கள் எழுதி ஒரு நாவலை தந்துள்ளனர்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    நல்ல முயற்ச்சி, மிகவும் அருமையாக கதையை ஆரம்பித்திருக்கிறீர்கள் இருவருடைய திறமையை ஒரே திரியில் சுவைக்கப்போகிறோம்... எதிர்பார்க்க வைக்கிறது ஆரம்பமே...வாழ்த்துக்கள் தொடருங்கள்..

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    அருமையான தொடக்கம் மஞ்சு....!

    இதமாக அன்பையும் காதலையும் எடுத்துக்காட்டும் முதல் அத்தியாயமே நெஞ்சைத் தொடுவதாக இருக்கு.

    இனி நானும் அதற்கு ஏற்ப அடுத்த அத்தியாயம் தருகிறேன் மஞ்சு.!

    பாராட்டுகள் மஞ்சு...!

  6. #6
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by samuthraselvam View Post
    புதுமையாக ஆரம்பம்...
    கலை அண்ணாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்....

    வயதானாலும் இருவரின் பேச்சிலும் அன்பு ஆளுமை செய்கிறது... தொடர வாழ்த்துக்கள்
    ஆமாம் அன்பை தவிர வேறு ஒன்றுமே காணமுடியாத தொடராக இது இருக்கவேண்டும் என்பதே என் ஆசையும்...நன்றி நண்பரே...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  7. #7
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by நேசம் View Post
    நல்ல முயற்சி.இதற்கு முன்பு சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் சேர்ந்து மாறி மாறி அத்தியாங்கள் எழுதி ஒரு நாவலை தந்துள்ளனர்
    ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  8. #8
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by கா.ரமேஷ் View Post
    நல்ல முயற்ச்சி, மிகவும் அருமையாக கதையை ஆரம்பித்திருக்கிறீர்கள் இருவருடைய திறமையை ஒரே திரியில் சுவைக்கப்போகிறோம்... எதிர்பார்க்க வைக்கிறது ஆரம்பமே...வாழ்த்துக்கள் தொடருங்கள்..
    அதனால தான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பயமா இருக்கு... கூடவே இருந்து வழிநடத்துங்க... வித்யாசமான சிந்தனையுடனான உங்க கவிதை ரொம்ப நல்லா இருந்திச்சு... வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முத்தான முயற்சிக்கு முதலில் சிறப்புப் பாராட்டுகளும் அடையப்போகும் வெற்றிக்கு முன்வாழ்த்துகளும்.

    சௌந்தர்யலகரி..

    சௌந்தர்யம் = அழகு..

    லகரி = போதை, மகிழ்ச்சி = இரண்டுமே வெறியூட்டுபவை. )பிரமாண்டமான திரை என்றும் சொல்லலாம் லகரியை..)

    நிஜமான அழகான அன்பை அடிநாதமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட கதையின் முதல் அத்தியாயமே கதையின் பால் கவர்ந்திழுத்து போதை ஏற்றுகிறது. மனத்திரையைப் பிரமாண்டமாக்கி விருந்துக்குத் தயாராக்கிறது. நிகழ்காலத்தில் கதையைச் சொல்லுவது நேரடி வர்ணனையாகி கதைக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கிறது. அப்படியே தொடர்ந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    ரயில்சினேகங்கள் சில வாழ்க்கையில் கடைசிவரை கூடவே வந்து விடும். அப்படியான பாத்திரப்படைப்பாக ராமனாதன் குடும்பத்தை மட்டுமல்லாது இந்தக் கதையையும் நீங்கள் இருவரும் கொண்டு செல்வீர்கள் என்ற எதிர்பார்ப்பு மிகுகிறது.

    மஞ்சுக்காவின் தமிழ் புலமை கருத்தைப் பறிக்கிறது. தொடருங்கள்..

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    கதை நன்றாக துவங்கி இருக்கிறது. வித்தியாசமான முயற்சியில் நணபர் கலைவேந்தன் அவரது தொடரும் கதையை படிக்க ஆவலாயுள்ளேன்

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மஞ்சுசுபாஷிணி, கலைவேந்தர்.
    முயற்சி முழு வெற்றியடைய வாழ்த்துகள்..

    முதுமைக்குத் தனிச்சோபை உண்டு.
    கண்ணியமும் மரியாதையும் கலந்து வரும் அழகு அது.

    அந்நியோன்யம் பகிரும் சொற்கள், செயல்கள்..
    தனிமை, பொது இடம்,
    இளசுகள், பெரியவர்கள்....

    மெல்லிய இழைகள் இருக்கின்றன - எனக்கான மனக்களத்தில்..
    இழைகள் அதிர்ந்தன வாசிப்பில்..
    எந்த சுவரத்தில்? குழப்பம்...

    தொடர்ச்சியில் இருக்கலாம் தெளிவு!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    கதை அன்பு சுமந்து வந்திருப்பது அனைவரையும் கவர்கிறது. ”இருவரது குரலிலும் அன்பைத்தவிர வேறெதுவுமே காணப்படவில்லை. மனதைக்கவரும் வார்த்தைகள்.புது முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்
    நான் மலர்கள் என்று நினைத்து முட்களில் நடந்தவன்.
    முட்களில் நடந்ததால் மனம் கிழிந்து போனவன்

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •