Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 49 to 60 of 64

Thread: சௌந்தர்யலஹரி - புதுமைத் தொடர்கதை அத்தியாயம் ஆறு (கலை எழுதியது )

                  
   
   
  1. #49
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by த.ஜார்ஜ் View Post
    கலை,மஞ்சு
    நல்லாவே யோசிக்கிறீங்கப்பா.
    கதை ரயிலை விட்டு எப்பொ இறங்கும்னு காத்திட்டிருக்கேன்.
    பிள்ளைங்க துரத்தினாங்களா.. இல்ல.. பிள்ளைகளுக்காக வெளியேறினாங்களா..
    முடிச்ச சீக்கிரம் அவுத்து விடுங்க.. டென்ஷனாகுதில்ல
    இன்னும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பொறுக்கனுமே நீங்க
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  2. #50
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    இன்னும் சிறிது நேரத்தில் அடுத்த பகுதி இடுகிறேன்..?
    காத்துட்டு இருக்கோமுல்ல கலை.. சீக்கிரம் போடுப்பா....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நல்லது மஞ்சு!


    இனி கலைவேந்தன் எழுதுகிறேன்!


    ரயில் நின்றது.

    ஏதோ ஒரு ஸ்டேஷன்.

    காலை 7 மணி அளவில் ஆகிவிட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் சோம்பல் முறித்து எழுந்து சுறுசுறுப்பாகி விட்டிருந்தனர்!

    சற்றே பெரிய ஸ்டேஷன் என்பதால் அங்கே ஆரவாரம் குறைவில்லாமல் இருந்தது!

    ராமனாதனின் பேரக்குழந்தைகள் கண்விழித்து மேல் பர்த்திலிருந்து எட்டிப்பார்த்தன!

    '' பாட்டி. எனக்கு ஹார்லிக்ஸ் ''

    '' பாட்டி எனக்கும் ''

    12 வயது பெண் குழந்தை ராதிகா.

    10 வயது பையன் சோமன்.

    மகன் வயிற்றுப்பேரன்கள்!

    கொள்ளுத் தாத்தாவின் அஸ்தி கரைக்க கூடவந்தே ஆகவேண்டுமெனும் பிடிவாதத்துடன் தாத்தா பாட்டியுடன் புறப்பட்டு வந்தவர்கள்.

    '' இதோ தர்றேன் போய் முதல்ல பல் தேய்ச்சுட்டு வாங்கடா! ''

    ராமனாதன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா பெரியவரைக் கேட்டார்.

    '' ஐயா, இந்த வயதான காலத்துல ரெண்டுபேரும் தனியா புறப்பட்டு இத்தனை தூரம் பயணம் செய்யும் நோக்கம் என்னங்கையா? ''

    '' ம்ம்ம்....என்னது ? '' ஏதோ நினைவில் உலவிக்கொண்டிருந்தவருக்கு ராமனாதனின் கேள்வி சட்டென்று மூளையில் ஏறவில்லை!

    ராமனாதனின் கேள்வியையும் அதற்கு விஷ்வா விழிப்பதையும் பார்த்துக்கொண்டிருந்த சௌபர்ணிகா கூறினாள்.

    '' தம்பி நாங்க ரெண்டு பேரும் காசியாத்திரை போறோம்! அங்க கொஞ்ச நாள் தங்கிட்டு வரலாமுன்னு போறோம். முடிந்தா அங்கயே சிவலோகம் போயிடனும்..,,,'' சௌபர்ணிகாவின் கண்கள் நனைந்தன!

    '' அப்படி சொல்லாதிங்கம்மா! எல்லாம் அவனருள் தான்! ''

    ராமனாதனுக்கும் வருத்தம் மேலிட்டது இந்த ஆதர்சத்தம்பதியைப் பார்த்து!

    சௌபர்ணிகாவின் கண்கள் கலங்கியதைப் பார்த்த விஷ்வாவின் கைகள் தன்னிச்சையாய் மேலெழும்பி அவளது கண்களைத் துடைத்தன!

    இருவரது பாசத்தையும் பார்த்து ராமனாதனும் கமலாவும் கொஞ்சம் பொறாமையே பட்டனர்!

    கமலா தனது பேரன்களுக்கு ஹார்லிக்ஸ் கலக்கத் தொடங்கினாள்.

    பேண்ட்ரி காரிலிருந்து ஃப்ளாஸ்கில் அதிகாலையில் வாங்கிவந்திருந்த வென்னீரில் ஹார்லிக்ஸ் கலந்து பிள்ளைகளுக்கும் ராமனாதனுக்கும் கொடுத்தாள்!

    விஷ்வா பெரியவரிடமும் சௌபர்ணிகாவிடமும் கேட்டாள்.

    அவர்கள் அமைதியாய் மறுத்தனர்!

    இருவரது கண்களும் ஏதோ பழைய நினைவுகள் நிழலாடின!


    * * * * * * *

    ''சௌபர்னிகா நீ இப்படி எலும்பும் தோலுமா இருக்கியே நீ சாப்பிடறதே இல்லையா? .....ஆங்.... அதெல்லாம் இல்லையே..........தட்டு நிறைய நீ கொட்டிக்கிறதை நான் பாத்திருக்கேனே......''

    '' வேண்டாம் விஷ்வா என் கிட்ட அடி வாங்காதே! எத்தனை வாட்டி அடி வாங்கினாலும் உனக்கு உடம்புல படவே படாதாடா? ''

    '' இத்தனூண்டு கை! அதால ஒரு அடி ! போடி! ''

    '' டேய் விஷ்வா வேண்டாண்டா ! என் கிட்ட வீணா அடிவாங்கி எனக்கு பாவத்தை சேத்துவைக்காதே! ''

    '' ஏய் குட்டை வாலு ! என் கூட பல்லாங்குழி ஆட வர்றியா? ''

    '' போடா எனக்கு ஹோம் வர்க் பண்ணனும்! ''

    '' தோத்துடுவோம்னு பயந்தானே! ஹாஹா! ''

    '' நான் ஒண்ணும் பயப்படலை டா! நிஜமாவே ஹோம்வர்க் இருக்குடா! ரங்கா சார் அடிச்சே கொன்னுடுவார் டா! ''

    '' சரிடீ சொல்லு நானும் உனக்கு ஹோம்வர்க் ல ஹெல்ப் பண்றேன்! சீக்கிரம் முடிச்சுட்டு நாம பல்லாங்குழி ஆடலாம்! ''

    '' வேண்டாண்டா விஷ்வா! உனக்கு சிரமம் டா! ''

    '' சௌபா! உனக்கு ஹெல்ப் பண்றதுல எனக்கு என்னடீ சிரமம்! நீ மட்டும் என்கிட்ட அன்பா பேசுடீ! உனக்கு எந்த குறையும் இல்லாம வெச்சு காப்பாத்தறேண்டி செல்லம்! ''

    '' அச்சு பிச்சுன்னு உளறாதே விஷ்வா! சரி வா சீக்கிரம் வீட்டுப்பாடம் முடிச்சுட்டு பல்லாங்குழி ஆடலாம் வாடா! ''

    * * * *
    '' டாய் விஷ்வா! என் புதுப்பாவாடை சட்டை எப்படிடா இருக்கு? ''

    '' சௌபா உனக்கு இந்த கருநீல சட்டையும் அரக்கு கல்ர் பாவாடையும் ரொம்ப அழகா இருக்குடி! உன் ரெட்டை சடையும் உனக்கு இன்னும் அழகு சேக்குதுடி! என் கண்ணே பட்டுடும். அத்தை கிட்ட சொல்லி சுத்திப் போட சொல்லுடி ''

    '' போடா கிண்டல் பண்ணாதே! நான் கறுப்பு தானே! நான் எப்படி அழகா இருப்பேன்? ''

    '' சௌபா ஏண்டி உன்னையே அடிக்கடி கறுப்புன்னு சொல்லி தாழ்த்திக்கிறே? உன்னைமாதிரி அழகு யாருக்கும் வராதுடி! ''

    '' விஷ்வா நீ நிஜமா சொல்றியாடா? நிஜமா நான் அழகா இருக்கேனா? ''

    '' இரு கிட்ட வந்து தொட்டு பாத்து ஒட்டுதான்னு பாத்து சொல்றேன்! ''

    '' என்ன ஒட்டுதான்னு .....? ''

    '' உன் கருப்புதான்! ''

    '' விஷ்வா........ஆ.....போடா இனி என் கிட்ட பேசாதே ம்ம்ம்ம்ம்ம்...''

    '' ஐயோ சௌபா கிண்டல் பண்ணேண்டி! என் செல்லம் அழாதே! ''

    '' டாய் என்னை கட்டிப் பிடிக்காதே! ''

    '' ஏண்டி? நீ எனக்கு தானே சொந்தம் .? கட்டிப்பிடிச்சா என்ன? ''

    '' டாய் அதெல்லாம் தப்புடா! அம்மா கிட்ட சொல்லிருவேன்! ''

    '' சொல்லிக்கோ! எனக்கு பயம் இல்லை! எப்பன்னாலும் நீ எனக்குத்தான் எனக்குத்தான்! எனக்குத்தான்! ''

    '' .................................... ''

    '' சௌ உனக்கு 11 வயசு ஆறது பட்டு! இன்னும் 10 வருஷத்துல எனக்கு 25 வயசாயிடும் ! நல்ல உத்தியோகம் தேடி உன்னை கட்டிண்டு ராசாத்தி போல வெச்சு காப்பாத்துவேன் செல்லம்! ''

    '' விஷ்வா என்னடா சொல்றே? எனக்கு ஒண்ணும் புரியலை டா! ஆனா நீ சொல்றது கேக்க நல்லாயிருக்குடா...! என்னை பிடிக்குதாடா உனக்கு? ''

    '' உன் மேல உயிரையே வெச்சிருக்கேண்டி செல்லம்! என்னை வெறுத்துடாதே சௌபா! என்னால உயிரோட இருக்க முடியாது! ''

    '' டாய் அப்படி சொல்லாதே! எனக்கு அழுகை வருது! ''

    '' ஐயோ நீ அழக்கூடாது சௌபா! நான் இருக்குற வரை நீ அழக்கூடாது! ''

    * * * *

    சற்று உரக்கவே சொல்லியதால் கடைசி வரி எல்லாருக்குமே கேட்டது!

    '' என்ன விஷ்வா ஐயா! யாரைச் சொல்றீங்க? '' - ராமனாதன்!

    நினைவுக்கு வந்த விஷ்வா குறுகுறுவென்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சௌபர்ணிகாவை அன்புடன் பார்த்தார்!

    '' அவர் பழைய நினைவுகள்ல மூழ்கிட்டாரு தம்பி! எங்க கடந்த கால சின்னவயசு நினைவுகள் இப்ப எங்களுக்கு ஆறுதல் தருதுப்பா! ''

    '' நீங்க யாரு? பாத்தா கணவன் மனைவின்னு சொல்ல முடியல்லை! போடா வாடான்னு நீங்க அவரை கூப்பிடறதைப் பாத்தா நல்ல நண்பர்கள்னு தோணுது. நீங்க அன்னியோன்யமா இருக்கறதைப் பார்க்கும்போது.....''

    '' விஷ்வா நீ சொல்லுடா நாம யாருன்னு.. ! ''

    விஷ்வா ஒரு முறை சௌபாவை தீர்க்கமாக பார்த்துவிட்டு ராமனாதனிடம் என்னவோ சொல்ல ஆரம்பித்து கனைத்தார்!

    '' நான் விஷ்வேஷ்வரன்! ரிட்டையர்டு ஐ ஏ எஸ் ஆபீசர்! இவ சௌபர்ணிகா ரிட்டையர்டு ஆசிரியை! ''


    தொடரும்.....

    மீதியை நீ சொல்லு மஞ்சு!

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ராமநாதனுக்குத் எழுந்த சந்தேகம் கதையின் தொடக்கத்தில் எனக்கும் எழுந்தது. அடுத்தடுத்த பாகங்கள் தந்த* பால் 'மணம்' சந்தேகத்தை வலுவாக்கியது. இப்போது யார் இவர்கள் என அறியும் ஆவல் அதிகமாகி விட்டது. இந்த இடத்தில் தொடரும் போட்ட உங்களுடன் நான் டூ..

    இளமை, முதுமை நிகழ்வுகளை தொடர்பு பிசகாமல் அமைப்பதிலும் இருவரும் அசத்துகின்றீர்கள்.

    பாராட்டுகள்.

  5. #53
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    விஷ்வா செபர்ணிகாவின் பாசப் பிணைப்பு அருமை. அவர்கள் யாரென்று சஸ்பென்ஸில் விட்டிருக்கிறீர்கள். தொடர்ந்து படிக்க ஆவலாயுள்ளது

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  6. #54
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    உங்கள் அனைவரின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர்களே...!

    பார்ப்போம்..இனி மஞ்சு எப்படி தொடர்கிறார் என்று....!

    -பயத்துடன்

  7. #55
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    ராமநாதனுக்குத் எழுந்த சந்தேகம் கதையின் தொடக்கத்தில் எனக்கும் எழுந்தது. அடுத்தடுத்த பாகங்கள் தந்த* பால் 'மணம்' சந்தேகத்தை வலுவாக்கியது. இப்போது யார் இவர்கள் என அறியும் ஆவல் அதிகமாகி விட்டது. இந்த இடத்தில் தொடரும் போட்ட உங்களுடன் நான் டூ..

    இளமை, முதுமை நிகழ்வுகளை தொடர்பு பிசகாமல் அமைப்பதிலும் இருவரும் அசத்துகின்றீர்கள்.

    பாராட்டுகள்.
    அமரன் இன்னொரு விஷயம் தெரியுமாப்பா? நான் இந்த கதையின் முதல் பகுதி எழுதும்போதே யாராவது இது பற்றி கேட்பார்களா என்று காத்திருந்தேன்... நீங்க இப்ப கேட்டுட்டீங்க... ஊக்கம் கொடுக்கும் உங்கள் பின்னூட்டம் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம் நன்றி அமரன்... இனி வரும் எல்லா தொடரிலும் இப்படி தொடரும் போட்டால் த்ரீ ஃபோர் அப்டின்னு போடுவீங்களா? மிக்க நன்றி அமரன்...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  8. #56
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by மதுரை மைந்தன் View Post
    விஷ்வா செபர்ணிகாவின் பாசப் பிணைப்பு அருமை. அவர்கள் யாரென்று சஸ்பென்ஸில் விட்டிருக்கிறீர்கள். தொடர்ந்து படிக்க ஆவலாயுள்ளது
    இப்படி நீங்க கேட்கனும்னு தான் ஐயா இப்படி சஸ்பென்ஸில் விட்டது...
    நன்றி ஐயா தொடர்ந்து வந்து ஊக்கம் தந்தமைக்கு....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  9. #57
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    உங்கள் அனைவரின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர்களே...!

    பார்ப்போம்..இனி மஞ்சு எப்படி தொடர்கிறார் என்று....!

    -பயத்துடன்
    நீ நல்லா அசத்தி அசத்தி எழுதிரு... என்னை டென்ஷன் பண்ணி விட்ரு.. அப்புறம் இப்படி பயத்துடன் அப்டின்னு போட்டுரு...

    அடுத்து எப்படி தொடருவேன் என்ற டென்ஷனோடு...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  10. #58
    புதியவர்
    Join Date
    10 Aug 2009
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    மஞ்சுவுக்கும் கலை வேந்தருக்கும் என் வாழ்த்துக்கள். இது ஒரு நல்ல தொடக்கம் நல்ல முயற்சி.....

  11. #59
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    அத்தியாயம் ஐந்து


    நன்று கலை !


    மஞ்சு எழுதறேன்....!


    விஷ்வேஸ்வரன் தம்மை ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி என்றும் சௌபர்ணிகாவை ஓய்வுபெற்ற ஆசிரியை என்றும் சொன்னதும் ராமனாதன் குடும்பத்தினருக்கு அவர்கள் இருவரின் மேல் திடீரென மதிப்பும் மரியாதையும் எழுந்தது!

    '' ஐயா உங்க முகத்தைப் பார்த்தும் உங்க கம்பீரத்தைப் பார்த்தும் நீங்க கண்டிப்பா பெரிய பதவியில இருந்தவங்கன்னு தெரிஞ்சுது! அம்மாவின் முகத்தின் தேஜஸ் அவங்க கண்டிப்பா சிறந்த ஆசிரியை யா இருந்திருப்பாங்கன்னு தெரியுது! சொல்லுங்கையா உங்க கதையை! ட்ரெயின் தில்லிக்கு போய் சேர இன்னும் ரெண்டு நாள் இருக்கே! ''

    உடனே சௌபர்ணிகா குறுக்கிட்டு '' தம்பி ராமனாதா! அவரை தொந்தரவு செய்யாதேப்பா! நான் சொல்றேன் கதையை! அவரைத் தங்கம்போல இனி பாத்துக்கணும்பா நானு! பாவம் என் தங்கம் எனக்காக என்னெல்லாம் பாடு பட்டார் தெரியுமா? '' என்றாள்.

    இதைச் சொல்லும் போதே சௌபர்ணிகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது!

    விஷ்வாவுக்கு மிகவும் வருத்தம் வந்தது!

    '' விடு சௌபர்ணிகா ! இனி நீ அழக்கூடாது! நீ அழுததெல்லாம் போதும்! இனி இருக்கும் கொஞ்சம் வருஷங்களாவது நாம சந்தோஷமா கழிப்போம் டா! கலங்கக்கூடாது இனி நீ! ''

    அவரகளது பாசம் ராமனாதனை கண்கலங்க வைத்தது!

    '' என்னோட உயிர்நண்பன் தான் இந்த விஷ்வா......''

    கதை சொல்ல முனைந்த சௌபர்ணிகாவின் கண்கள் கனவுலகத்துக்கே சென்றுவிட்டது!

    சௌபர்ணிகா கதையை சொல்லச் சொல்ல ராமனாதனும் அவரது மனைவியும் அவர்களுடன் பயணம் செய்து கடந்த காலத்துக்கே சென்றுவிட்டனர்!

    *********

    '' அம்மா என்னை கருப்பி கருப்பின்னு ஏன்மா சொல்றான் இவன்? இவன் மட்டும் இத்தனை செக்கச் செவேல்னு அழகா பிறந்திருக்கானே ? ''

    மூக்குறியத் தொடங்கினாள் சௌபர்ணிகா!

    '' அழாதே கண்மணி '' தங்கம் ஆதரவுடன் அருகே வந்து மகளின் தலையைக் கோதினாள்.

    '' நீ அப்பா மாதிரி நிறம்.... விஷ்வா அவன் அம்மாவைப் போல நிறம்.....! ''

    '' நான் அழகா இல்லையேம்மா....'' விசும்பிக்கொண்டே கூறினாள். '' கருப்பா இருக்கேன்.. தலை முடி பாரு எலிவால் மாதிரி.....பல்லைப் பாரு துருத்திட்டு இருக்கு..... யார் என்னை கேலி பண்ணினாலும் பொறுத்துப்பேன்..நான் ! இவன் என்னோட நண்பன் இல்லையா ? என்னை கேலி பண்ணலாமா? ''

    '' கண்மணி அவன் உன்னை கேலி பண்ணினாலும் உன் மேலே அவனுக்கு பாசம் அதிகம்மா....!''

    '' அம்மா என்னை யாருமே கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்களா? பக்கத்துவீட்டு மாமி இன்னொரு அக்காகிட்ட என்னைக்காட்டி சொல்லிக்கிட்டு இருந்தாம்மா! ''

    '' இந்த வயசுல உனக்கு ஏண்டி இந்த கேள்வி ? அதது நடக்க வேண்டிய வயசு வரும்போது நடக்கும்.. இப்ப மனசு விசனப்படாம ... கிளம்பு புத்தகங்கள் எடுத்துக்கிட்டு.... விஷ்வாவும் பின்னாடியே வரேன்னு சொன்னான் பாரு... அவன் கையை பிடிச்சிட்டு ஆற்றை கடக்கணும் சரியா... பத்திரம்...''

    கண்ணாடியில் தன் மகளைப் *பார்த்தாள்.தங்கம் . பத்து வயது பெண்ணுக்குரிய லட்சணங்கள் என்ன இருக்கு அவகிட்ட ? கொஞ்சம் பூசினமாதிரி இருந்தா நல்லா இருப்பாளோ? கொஞ்சம் கன்னம் பூசினா மாதிரி இருந்தா ...? அப்ப பல்லும் உள்ளே போயிடும்... தலை முடி இனிமே நல்லா பராமரிக்கனும் கண்மணிக்கு!

    *சௌபர்ணிகா பையை எடுத்துக்கொண்டு தன் எலிவால் பின்னலை மறுபடியும் ஒரு முறை சரி செய்து கொண்டு தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு பின்னல் முதுகில் விழ செருப்பை மாட்டிக்கொண்டு புத்தகப்பையுடன் கை வீசி நடக்க ஆரம்பித்தாள் !

    ஆற்றங்கரை நெருங்க நெருங்க சௌபர்ணிகாவுக்கு கை நடுங்க ஆரம்பித்தது.. என்ன இந்த விஷ்வா பயலை காணோமே... சுற்றுமுற்றும் திரும்பி பார்த்தாள்.

    '' சௌபா இங்க இருக்கேண்டி'' என்று கையாட்டினான் விஷ்வா!

    விஷ்வா தூரத்தில் கையாட்டி கொண்டே வருவதை பார்த்தாள்... உடனே அவளது முகம் மலர்ந்தது...

    மகிழ்ச்சி மனதுக்குள் இருந்தாலும் இவள் ஒன்றும் பேசாமல் அமைதியாய் நின்றாள்.

    மூச்சிரைக்க ஓடி வந்து அவள் கையைப் பிடித்தான்..'' ஏண்டி என் மேலே கோபமா?''

    முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    '' சௌபா.. இங்க பாரு ஏண்டி கோவம்? ''

    '' நீ என்னை ஏண்டா கருப்பின்னு சொன்னே? ''

    *'' நீ கருப்பா இருந்தாலும் எனக்கு அழகு தாண்டி ''

    '' ஏய் அசிங்கமா பேசாத...'' முகத்துக்கெதிரில் கை விரலை சுட்டிக் காட்டி எச்சரித்தாள்

    அவன் அவள் கைவிரலைப் பிடித்து சொன்னான்... '' சௌபர்ணிகா நீ கருப்பா இருந்தா தான் நல்லது ''

    '' ஏண்டா ''

    '' அப்ப தானே உன்னை யாருமே கல்யாணம் பண்ணிக்கமாட்டா ''

    '' அடப்பாவி இரு எங்க அம்மா கிட்ட சொல்றேன்..''

    '' நீ ஒண்ணும் கவலைப்படாதே சௌபர்ணிகா நான் உன்னை கட்டிக்கிறேன் ''

    '' ச்சீ போடா ! '' என்று ஓடப் போனவள் தயங்கி நின்றாள்.

    '' நான் தான் நல்லாவே இல்லையே... என்னை போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றியே...''.

    '' எனக்கு நீ அழகு தான் சௌபர்ணிகா....''

    '' இப்டி எல்லாம் பேசாதடா அம்மா கிட்ட சொல்லிருவேன் '' அழ முற்பட்டாள்.

    அவன் மெல்ல அவளது தலையைக்கோதி அழகாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்!

    அவள் மூக்கை உறிஞ்சிக்கொண்டு அவன் கையை பிடித்துக்கொண்டாள்.

    இருவரும் மெதுவாக ஆற்றை கடக்க முற்பட்டனர்...

    அது ஒரு குறுகிய ஆறு!

    இரண்டு தென்னைமரங்களே பாலம்!

    இந்த ஆற்றைத் தவிர்க்க வேண்டுமென்றால் அதிகப்படியாக 5 கிமீ சுற்ற வேண்டும்!

    விஷ்வா சௌபர்ணிகாவின் நடுக்கத்தை அவன் விரல்களை பற்றி இருந்த அவள் விரல்களில் உணர்ந்தான்.

    உடனே தன் புத்தகப்பை அவள் புத்தகப்பை இரண்டையும் முதுகில் மாட்டிக்கொண்டு இரண்டு கைகளாலும் அவள் முதுகை அணைத்து தாய் போல பொத்தி பத்திரமாக ஆற்றைக் கடந்து போய் கையை விட மனமில்லாமல் நின்றான்.

    '' ஏன் இவளிடம் எனக்கு இத்தனை ஈர்ப்பு? தாய் தந்தை இல்லாத எனக்கு அன்பை தரும் தங்கத்தின் மகள் என்பதாலா..?. இவளுடன் சேர்ந்திருந்தால் ஏன் எனக்கு இத்தனை சந்தோஷம்? நான்கு வயது மூத்தவன் விஷ்வா. இவளிடம் என்ன கண்டான் இவள் வயப்பட..? விடலைக்காதலா.....?!

    அவனுக்குத் தெரியவில்லை!

    தனது தலைப்பிரசவத்தில் இந்த விஷ்வாவைப்பெற்றெடுத்துவிட்டு ஜன்னி கண்டு இறந்துபோனாள் இவன் தாய் மரகதம்!

    மரகதத்தின் பிரிவு கொஞ்ச நாளில் விஷ்வாவின் தந்தை நாராயணனையும் இந்த உலகத்தைவிட்டே அனுப்பிவிட்டது!

    விஷ்வா அம்மா அப்பா அன்பே தெரியாமல் வளர்ந்தவன்.....தாய் தந்தை இல்லாத இவன் தாயின் சகோதரர் சிவச்சந்திரன் எடுத்து வளர்க்கிறார்... விஷ்வாவின் சொத்தையும் காக்கிறார்.... நல்ல மனிதர்.. பிள்ளையின் மேல் அதிக பாசம்.....

    திருமணம் முடிந்து அந்த ஊருக்கு வந்த நாள் முதல் தங்கம் விஷ்வாவை எடுத்துக்கொண்டு தன் வீட்டில் கொண்டு வந்து அன்னம் ஊட்டியவள்..... அன்பான கணவன், ஆண்டவன் இன்னும் கண் திறக்கவில்லை வயிற்றில் ஒரு உயிர்ப் பூ பூக்கவில்லை.... என்ற விசனம் அவளுக்கு.

    விஷ்வாவைக் காணும்போதும் அவன் மழலைமொழியில் கொஞ்சும் போதும் தன்னை மறப்பாள் சிறிது நேரம்.... எந்நேரமும் தன் வீட்டிலேயே இருப்பதால் தனக்கு மனதில் ஒரு நிம்மதி படர்வதை உணர்ந்தாள்...விஷ்வா மூன்று வயதாகும்போது தனக்கு ஒரு நாள் தலை சுற்றுவதை உணர்ந்தாள்... சந்தேகத்துடன் கணவன் கோபாலனுடன் சென்று மருத்துவச்சியைப் பார்த்தபோது கை பிடித்துப்பார்த்து வயிற்றில் பூ பூத்ததை பொக்கை வாய் விரிக்க சொன்னாள்.... கோபாலனுக்கு அங்கேயே தங்கத்தை கட்டிப்பிடித்து தன் சந்தோசத்தைக் காட்டிக்கொள்ள் ஆசை....

    வழியில் வரும்போதே இருவரும் சிவச்சந்திரன் வீட்டிற்கு சென்று இந்த சந்தோஷத் தகவலை சொன்னார்கள்.

    '' விஷ்வா என் வீட்டில் அடிவைத்த நேரம் என்னையும் தாயாக்கியது '' என்று சொல்லி சொல்லி மாய்ந்து போனாள் தங்கம்!

    '' அத்தே '' என்று ஆசையாக வந்து தங்கத்தைக் கட்டிக்கொண்டான் விஷ்வா.
    *
    கோபாலன் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சினார்....

    மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானத்தைப் பார்த்தார் கோபாலன்.

    சீக்கிரம் வீட்டுக்கு போக எண்ணி தங்கத்தைக் கூட்டிக்கொண்டு வீட்டை எட்டினார்.

    கதவை திறந்து உள்ளே போனப்பின் ஒரே இருட்டு.... அடடா கரண்ட் இல்லை.....

    மெல்ல மாடிப்பக்கம் போய் காய்ந்திருந்த துணிகளை எடுக்கப் போனார் கோபாலன்.

    தங்கம் இருட்டில் அமர்ந்திருந்தாள் மனதில் மகிழ்ச்சி!

    திடிரென்று அம்மா என்ற சத்தமும் என்னவோ மோதி விழுந்த சப்தம் கேட்டு பதறி எழுந்தாள்...

    வெளியே வந்து பார்த்தப்போது அதிர்ச்சியில் தலை சுற்றி விழுந்தாள் மேலிருந்து கால் வழுக்கி கீழே விழுந்து மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு அவசரமாய் உயிர் விட்டிருந்தார் கோபாலன்.

    தங்கம் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளுமுன் சௌபர்ணிகா பிறந்தாள்.

    அதன் பின் குழந்தை பிறந்து தொட்டிலில் இட்டப்போது விஷ்வா அடுத்திருந்து தொட்டிலை ஆசையுடன் பார்த்து அத்தே என்னோட பாப்பா இது என்றதும்...

    அதன் பின் எப்போதும் சௌபர்ணிகாவுடன் விளையாடுவதும் அவளுடன் கை கோர்த்துக்கொண்டு ஓடுவதும் வருவதும்........

    இவள் என்னுடையவள் என்ற எண்ணம் அப்போதே அவன் மனதில் ஏற்பட்டுவிட்டது!



    தொடரும்....


    இனி கலை நீ எழுது!
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  12. #60
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    பெரும்பாலும் அந்த காலத்தில் கோபாலன் சாவிற்கு சௌபர்ணிகாவின் பிறப்பு தான் காரணம் என்று சொல்லி அவளை தூற்றுவார்கள். அத்துடன் கருப்பு நிறம் குட்டை முடி தெத்தி பல் பாவம் இந்த பெண். கதை விறு விறுப்பாக செல்கிறது. தொடருங்கள் நண்பர் கலைவேந்தன்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •