அன்பு உறவுகளே...மின்னிதழாய் நம் மன்றத்தின் நந்தவனம் மலர்ந்து வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆடி மலருக்கு அடுத்து கார்த்திகை மலருக்கு இதழ்குழுவுடன் இணைந்து பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், தங்கள் விருப்பத்தை இந்தத் திரியில் பதிவிட்டு உறுதிபடுத்துங்கள்.
உங்களது அலுவலகவேலை, குடும்பத்துக்கான நேரம் இதிலெல்லாம் இடைஞ்சலில்லாமல், கொஞ்ச நேரம் ஒதுக்கினாலே போதும்.
ஓவியர்கள் யாரேனும் இருந்தால், தயைகூர்ந்து முன் வாருங்கள். அட்டைப்படத்தை விசேடமாக கோட்டோவியமாக அமைக்க நினைத்திருக்கிறோம். அதற்கு உதவும் விதமாக நல்ல ஓவியர்களின் பங்களிப்பு அவசியமாகிறது.
நந்தவனம் மலர நாமும் நம் பங்கை அளிப்போம் வாருங்கள் உறவுகளே....!!!
Bookmarks