Page 2 of 22 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 262

Thread: என் வானிலே இரண்டு வெண்ணிலா!!! - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    இன்னும் வரும்...
    சீக்கிரம் வாங்க....
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  2. #14
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    நிலவினால் உண்டாகும் சில பல விஷூவல் எஃபெக்ட்கள்..
    குழந்தைகளுக்கு சோறூட்ட....
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சூரிய கிரகணம்

    http://en.wikipedia.org/wiki/File:Ge...ar_Eclipse.svg

    சூரியன் - பூமி - நிலா ஆகியவற்றின் நிலைகளையும் கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்பதையும் அழகாக விளக்கும் படம் இதுவாகும்.

    அம்ப்ரா எனப்படு இடத்தில் முழுச் சூரிய கிரகணமும், பெணம்ப்ர எனும் இடத்தில் பார்சுவ சூர்ய கிரகணம் அல்லது பகுதி சூரிய கிரஹணமும் ஏற்படும்.

    சூரிய கிரஹணப் படங்கள் மன்றத்தில் இந்தத் திரியில் உள்ளன,

    முழுச் சூரிய கிரகணம் :



    பார்சுவ சூரிய கிரகணம் (பகுதிச் சூரிய கிரகணம்)



    கங்கணச் சூரிய கிரகணம். (சூரியன் தங்க வளையல் போலத் தெரியும். இதன் தோசம் விலக மனைவிக்கு தங்க வளையல் வாங்கித்தரணும். )



    முழுச் சூரிய கிரணம் விலகும் போது வைர மோதிரம் போல் காட்சி தரும். (இதன் தோசம் விலக மனைவிக்கு வைர மோதிரம் வாங்கித் தரணுமாம். )



    பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையும், நிலா பூமியச் சுற்றி வரும் பாதையும் சாய்வாக இருத்தல், பூமி தன் அச்சில் சாய்ந்து இருத்தல், பூமியின் பாதையும் நிலவின் பாதையும் நீள் வட்டமாய் இருத்தல் போன்ற காரணங்களால், சூரிய கிரகணம், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் ஏற்படுகிறது. ஒரே இடத்தில் இரண்டு முழுச்சூரிய கிரகணங்கள் தெரிய 100 ஆண்டுகள் வரை ஆகலாம்.

    சூரிய கிரகணங்கள் எப்பொழுது எங்கே தெரியும் போன்ற விவரங்களை நாசா பட்டியலிட்டு வைத்துள்ளது.

    http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2001.html
    http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2011.html
    http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2021.html
    http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2031.html
    http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2041.html


    http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2001.html
    http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2021.html
    http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2041.html
    http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2061.html
    http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2081.html

    அப்புறம் இது பேரேடு....3000 ஆவது வருஷம் வரை

    http://eclipses.gsfc.nasa.gov/SEcat5/catalog.html
    சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய தகுதி வாய்ந்த ஒரு இடத்தில் மன்ற மீட்டிங் போட்டு, பயணம், தங்குதல் மற்றும் உபகரண வசதி செஞ்சா நல்லா இருக்குமில்ல..

    சூரிய கிரகணத்தின் போது பலர் வீட்டுக்குள் அடைந்து கிடக்க, சூரியனின் கரோனாப் பகுதியை ஆராய இதுவே தகுந்த சமயமாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

    அப்புறம் சூரிய கிரகணத்தின் போது ரேடியேஷன் அதிகமா இருக்கும் என்று சிலர் சொல்வார்கள். அது தவறு.. அப்பொழுது ரேடியேஷன் குறைவாகத்தான் இருக்கும்.

    சூரிய கிரகணத்தின் போது முழுக்கிரகணம் விலகும் பொழுது வெளிச்ச வேற்பாடு மிக அதிகமாக இருப்பதால் கண்கள் பாழாகும் என்பதுதான் உண்மை.

    நிலாவினால் மட்டுமல்ல, புதன் சுக்கிரன் போன்றவற்றாலும் சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் சூரியனில் சிறிய பொட்டாகத் தெரிவதை விஞ்ஞானிகள் தவிர வேறு யாரும் ஆர்வம் செலுத்திப் பார்ப்பது இல்லை.






    2012 ஆம் வருசம் ஜூன் ஆறாம் தேதி அடுத்த வெள்ளிச் சூரிய கிரகணமும், 2016 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதி அடுத்த புதன் சூரிய கிரகணமும் ஏற்படும்.


    இதையும் கொஞ்சம் பாருங்க

    http://www.nasaimages.org/luna/servl...-Unusual-Spot-

    சூரிய கிரகணத்தின் போது நட்சத்திரங்கள் கூட தெரியும்.

    இன்பாவின் வேண்டுகோளுக்கினங்க பெங்களூர் மேகங்களை விரட்டி வைத்திருக்கிறேன். இன்று இரவு இன்பா வியாழக் கிரகத்தை 10:00 மணி அளவில் கிழக்கு வானில் கண்டு ரசித்து, முடிந்தால் ஜூம் செய்து படம் எடுத்து போடுவார் என எதிர்பார்க்கிறேன்..

    நட்சத்திரங்களைக் கவனிக்க மின்சார விளக்குகள் அதிகம் இல்லாத அமைதியான மலைஉச்சிகள்தான் வசதி... கிருஷ்ணகிரி பகுதியில் ஒரு மலையை வாங்கி அங்க ஒரு ரிசார்ட் கட்டி வைங்க சிவாஜி... !!!!

    (அங்கதானே கரண்ட் இருப்பதே இல்லை என புலம்பறார் சிவாஜி )
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #16
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    நேற்று இருக்குறதிலேயே பெரிய நட்சத்திரம் போல தெரிந்த ஒரு நட்சத்திரத்தை ஜூம் செய்தேன்... அது கிழக்குப் பக்கமாகத் தான் இருந்தது...

    என்னுடைய லென்ஸ் 60 X ஆனால் டிஜிட்டல் ஜூம் 2000 X என்ன ஜூம் செய்தாலும் சரிவர தெரியவில்லை...

    பேசாமல் டெலஸ்கோப் வாங்கிவிடுவோமா என்று பார்க்கிறேன்.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சாதாரண காமிராவில் ஒளி தேவை.. எஸ்.எல்.ஆர் முறைப்படி அமைந்து ஃபோகஸை மாற்ற முடியும் எனில் முயன்று பார்க்கலாம்.

    தொலநோக்கிகளின் மூலம் நேரடியாக கண்ணால் பார்த்தால் மட்டுமே எளிதாக காணமுடியும். படமெடுக்க அதை ஒரு திரையில் விழ வைத்து படமெடுக்க வேண்டும்.

    நீங்கள் கிழக்குப் பக்கம் பார்த்திருந்தால் அது வியாழன் தான். அதைப் பார்த்துட்டு வந்துதான் அந்தப் பதிவையே போட்டேன்.

    ஸ்டெல்லேரியம் மென்பொருள் சுட்டியைத் முதல் பதிவில் தந்திருக்கிறேன். அதில் பெங்களூரை உங்கள் இருப்பிடமாக தெரிவு செய்து பார்த்தால் அந்த நேரத்து வானத்தில் என்ன என்ன நட்சத்திரங்கள் கிரகங்கள் எங்கே இருக்கின்றன எனத் தெரியும். அதைக் கொண்டு மொட்டை மாடியில் மல்லாக்க படுத்துக் கொண்டு வானத்தை அளக்கலாம்.

    அப்புறம் நான் டெல்லியில இருந்தப்ப வால் நட்சத்திரம் பார்த்தேன்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    கீழே உள்ள படம் காலை ஆறுமணிக்கு இன்றைய சூழ்நிலையில் பூமி, சூரியன், வியாழன் ஆகியவற்றின் நிலையை இராசி மண்டலத்தில் காட்டுவதாகும்.

    இராசி மண்டலம் கிழக்கிலிருந்து மேற்கு செல்கிறது. பிறகு நம் கண்ணுக்கு தெரியாத பூமியின் மறுபக்கம் இருக்கிறது.



    பூமி சூரியனைச் சுற்றும் போது ஆவணி மாதம் சூரியன் சிம்ம ராசியில் தெரியும்.
    வியாழன் இப்பொழுது மகரத்தில் உள்ளது. எனவேதான் இரவு வியாழன் கிழக்கு வானில் தெரிய ஆரம்பிக்கிறது.

    இந்த அடிப்படையை உங்கள் மனக்கண்களால் பார்க்க முடிந்தால் மட்டுமே நான் எழுதும் வானத்தை பார் என்பது புரியும். புரியறவங்க கையைத் தூக்குங்க...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இன்று இரவு வானம்... காட்சி நேரம் இரவு பத்துமணி... இடம் பெங்களூர்..

    (இந்தியாவின் மற்ற இடங்களிலும் ஏறத்தாழ இதையே காணலாம்..



    மேற்கில் நிலவு மறைந்து கொண்டிருக்கும். நிலவு அருகில் கன்னி ராசிக்கான நட்சத்திரங்கலைக் காணலாம்..

    உட்சி வானில் பிரகாசமான வேகா நட்சத்திரத்தை கவனியுங்கள்.. காந்தப் புல மாறுபாடு ஏற்பட்டு துருவங்கள் இடம் மாறி வரும் காலத்தில் இந்த வேகாதான் நமது அடுத்த துருவநட்சத்திரம் எனக் கணிக்கிறார்கள்.


    வியாழன் கிழக்கு வானத்திலே பிரகாசமாகத் தெரியும்.

    வடக்குப் பகுதியில் எல்லா ரேகைகளும் கூடுமிடத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கிறதல்லவா அதுதான் துருவ நட்சத்திரம்.

    ஆனால் நமது பெங்களூரு மின் ஒளிச்சிதறலின் கைங்கர்யத்தில் நாம் பார்க்கும் வானம் இப்படி இருக்கும்...



    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இது வரை விண்வெளிக்குச் செல்ல இராக்கெட்டுகளை மட்டுமே நம்பி இருந்தோம் அல்லவா? இது மிகவும் செல்வாகும் ஒன்று.. அது மட்டுமல்லாமல் ஸ்டார்ட் பண்ணினா பாதியில் திரும்ப முடியாது இல்லையா?

    ஆனால் விண்வெளிக்கு உல்லாசப் பயணம் போனால் இது போன்ற கண்டிஷன்கள் ஒத்து வராதே.. அதனால் புவி அருகு விண்வெளிக்கு உல்லாசப் பயணம் சென்று வர வேறு செலவு குறைந்த வழி வேண்டும் என பலர் ஆராய்ந்து வந்தார்கள்.

    அதில் ஒரு முறை, விண்வெளி ஓடத்தை சூப்பர் சானிக் விமானத்தின் மூலம் சுமந்து கொண்டு காற்றுவெளியின் விளிம்பிற்குக் கொண்டு செல்வது.. பறந்து கொண்டிருக்கும் போதே விண்வெளி ஓடம் விடுபட்டு ஒரு அதிகப் பட்ச உந்து விசை (த்ரஸ்ட்) மூலம் விண்வெளியில் தப்புந்து விசை வேகத்தில் சீறிப்பாயும் வகை.

    http://news.yahoo.com/s/ap/20090727/...us_space_plane

    இரட்டை விமானமாகக் கட்டப்ப்பட்ட இந்த வாகனத்திற்கு வெண்குதிரை வீரன் என பெயரிட்டுள்ளனர்.



    இப்பொழுதே 2 இலட்ச அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயிக்கப் பட்ட 300 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

    முந்திக் கொள்பவர் யாரோ?

    மன்றம் ஸ்பான்சர் பண்ணினா போயிட்டு வந்து இன்னும் ஆயிரக்கணக்கில எழுதலாம்னு இருக்கேன்.. என்ன சொல்றீங்க?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஒருவாரத்திற்கு முன்பு வியாழன் மீது எதுவோ இடித்த செய்தியைக் கொடுத்திருந்தேன். ஹப்புள் விண்ணோக்கி அதை தற்பொழுது புகைப்படம் எடுத்து வெளியிட்டு உள்ளது.

    செய்தி இங்கே :

    http://www.nasa.gov/mission_pages/hu...er-hubble.html

    இது படம்.:

    [media]http://www.nasa.gov/images/content/372829main_p0923ay.jpg[/media]
    Last edited by தாமரை; 28-07-2009 at 02:58 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இந்தப் படத்தைப் பாருங்க.. இது என்னன்னு யோசிச்சுச் சொல்லுங்க. கொஞ்ச நாள் கழிச்சு என்னன்னு நான் சொல்றேன்


    [media]http://www.nasa.gov/mpg/262351main_reconnect.mpg[/media]

    [media]http://www.nasa.gov/mpg/259563main_THEMISASInights_512x288.mpg[/media]



    [media]http://www.nasa.gov/images/content/262648main_substormimg_HI.jpg[/media]
    Last edited by தாமரை; 28-07-2009 at 02:57 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #23
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    கத்தப்புல மாற்றம் அடைவதைத்தானே சொல்லவருகிறீர்கள்... ???
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சந்திர கிரகணம்:

    சந்திர கிரகணம் சூரிய கிரகணத்தைப் போல ஆர்வத்தைத் தூண்டுவதும் இல்லை, அதே போல பார்க்க ஆயத்தங்களும் தேவை இல்லை. சந்திரன் பூமிக்குப் பின்னால் வரும் பொழுது சூரிய ஒளியை பூமி மறைப்பதால் உண்டாவதாகும். சந்திரன் பௌர்ணமி அன்று சூரியனுக்கு எதிர் திசையில் வருகிறது. அதில் சில மாதங்களில் சந்திரன் சுற்றி வரும் அச்சும், பூமி சூரியனைச் சுற்றி வரும் அச்சும் ஒரே நேர்கோட்டில் அமையும் பொழுது சந்திர கிரகணம் ஏற்படும். இது எப்படி ஏற்படுகிறது என்பதை விளக்கும் படம் கீழே




    சந்திரன் இருக்கும் நிலையைப் பொறுத்து இப்படிப்பட்ட ஒளிக்காட்சிகள் வானில் தோன்றலாம்.




    சந்திர கிரகணங்கள் மூன்று வகைப்படும்.

    பெனும்ப்லா சந்திரகிரகணம்.

    சூரியன் பூமியை விட பலமடங்கு பெரியதாக இருப்பதால் முப்பரிமாண விளைவால் முதல் படம் போல அடர்நிழல் பகுதி (அம்ப்ரா) குறைஒளிப் பகுதி (பெனும்ப்ரா) போன்றவை ஏற்படுகின்றன. இந்த குறை ஒளிப்பகுதியில் சந்திரன் இருக்கும் பொழுது பெனும்ப்லா சந்திரகிரகணம் தெரிகிறது. இது ஏற்படும் பொழுது சந்திரனின் ஒளி சற்றே மங்குகிறது.. இதை வெறும் கண்ணால் பிரித்தறிவது கடினம்தான். மலைஉச்சிப் பகுதிகளில் ஒளிச்சிதறலும், காற்றின் ஈரப்பதமும் குறைந்து இருக்கும் நிலையில் இதை பிரித்தரிய இயலும்.



    பகுதி சந்திர கிரகணம்:


    இதில் சந்திரனின் ஒருபகுதி அடர்நிழல் பகுதியிலும், இன்னொரு பகுதி குறை ஒளிப்பகுதியிலும் இருப்பதால் உண்டாவதாகும். இதில் சந்திரனின் ஒருபகுதி இருண்டு மீண்டும் ஒளிபெறுவதைக் காணலாம்.



    பூரண சந்திர கிரகணம்:

    நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல இதில் சந்திரன் காணாமல் போகாது. சந்திரன் செந்நிறமாக காட்சியளிக்கும்.

    காரணம் சூரியனின் மறைமுகமான ஒளிக்கதிர்கள் சந்திரனை அடைவதே ஆகும். அதாவது பூமியின் வளிமண்டலம் சிதறடிக்கும் சிவப்பு ஒளி அலைகள் மூலம் சந்திரன் வெளிச்சம் பெறுவதால் சந்திரன் செந்நிறமாக காட்சியளிக்கும்.

    சந்திர மண்டலத்தில் இருந்து பூமியில் சூரிய கிரகணம் ஏற்படும் பொழுது அந்த நிழல் கருமையாக தெரிவதற்குக் காரணம் சந்திரனில் வளிமண்டலம் குறிப்பிடத்தக்க அளவிற்கு இல்லை என்பதே காரணமாகும்.




    பூரண சந்திர கிரகண நிலைகள்:




    இந்தச் செந்நிற நிலாவை சிவா.ஜி பார்த்தால் "இரத்த நிலா" என்று மர்மக் கதை எழுதுவார்.

    அதையே ஆதி பார்த்தால் "நிலவின் நாணம்" எனக் காதல்கவிதை எழுதுவார்.

    இதையே ஒரு கம்யூனிஷ்ட் பார்த்தால்.. நிலவில் பொதுவுடமை என எழுதலாம்.

    இதையே ஒரு பின் நவீனத்துவ கவிஞன் பார்த்தால்.. ????
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 2 of 22 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •