[media]http://science.nasa.gov/media/medialibrary/2010/06/04/SpWeatherPoster1.jpg[/media]
டும் டும் டும் டும்..
ஒரு நாள் வரப்போகுது... எப்போ? என்ன? எங்க?
2013 ல் இது நடக்கப் போகுது.. எது?
1859 ஆம் ஆண்டு நடந்ததே அதுதான். அன்று என்ன ஆச்சு?
ஒரு மிகப் பெரிய சூரியப் புயல்... அன்று ஏற்பட்ட துருவ ஒளி ஹவாய் தீவுகள் வரை தெரிந்தது, மக்கள் அதன் ஒளியில் செய்தித்தாள்களையே படிக்க முடிந்ததாம்.
2013 மே மாதம் அதே போன்ற ஒரு மிகப் பெரிய சூரியப் புயல் வரலாம் என்று எண்ணப்படுகிறது.
அன்று தந்தி ஒயர்கள், மின்சாரக்கம்பிகள் ஷார்ட் சர்க்கியூட் ஆகி, பல வீடுகள் தீக்கிரையாகின.. இன்று நாம் உபயோகப்படுத்தும் மின்சாதனங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது அந்த ஒரு நாள் உலகத்தின் சில பகுதிகள் இருளில் மூழ்கலாம்.
விமானங்கள், செயற்கைக்கோள்கள், கணிணிகள் முக்கியமா டி.விக்கள், தொலைபேசிகள், செல்பேசிகள் இப்படி மின்சாரம் மற்றும் தொலைதொடர்பை நம்பி இருக்கும் அத்தனையும் அன்று பிரச்சனைகளைச் சந்திக்கலாம்.
கத்ரீனா புயல் உண்டாக்கியதைப் சேதத்தை விட 20 மடங்கு சேதத்தை இந்தப் புயல் உண்டாக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
http://science.nasa.gov/science-news...oaaprediction/
[media]http://www.youtube.com/watch?v=DU4hpsistDk[/media]
வார்த்தைகளால் இப்படி பெரிசு பெரிசா சொன்னாலும் நாசா காட்டும் கிராஃப் என்ன சொல்லுது?
இந்த கிராஃபின் படி போன 1960 களில் சூரியப் புள்ளிகள் மிக அதிகமா இருந்திருக்கு. 2000 ஆம் ஆண்டு இருந்த சூரியப் புள்ளைகளை விடக் குறைவாகவே புள்ளிகள் தோன்றலாம் என்று அவர்களின் கணிப்புகள் சொல்லுது...
1859 ல் 120 புள்ளிகள் வரை இருந்தது, 1960 ல் 180 வரை உயர்ந்திருந்தது.. ஆனால் இப்போதைய கணிப்பு எழுபதுகளில்தான்.. அப்படி இருக்க இது அந்த அளவிற்கு இருக்கும் எனச் சொல்லுவது எங்கியோ உதைக்குது...
எதையும் பெரிசா காட்டியே பயமுறுத்தி பழகிட்டாங்க.. என்ன செய்ய..
பார்க்கலாம்.. நாசா சொன்னது பலிக்குதா என் உள்மனசு சொல்றது பலிக்குதான்னு..
Bookmarks