Page 18 of 22 FirstFirst ... 8 14 15 16 17 18 19 20 21 22 LastLast
Results 205 to 216 of 262

Thread: என் வானிலே இரண்டு வெண்ணிலா!!! - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க

                  
   
   
  1. #205
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    [media]http://science.nasa.gov/media/medialibrary/2010/06/04/SpWeatherPoster1.jpg[/media]

    டும் டும் டும் டும்..

    ஒரு நாள் வரப்போகுது... எப்போ? என்ன? எங்க?

    2013 ல் இது நடக்கப் போகுது.. எது?

    1859 ஆம் ஆண்டு நடந்ததே அதுதான். அன்று என்ன ஆச்சு?

    ஒரு மிகப் பெரிய சூரியப் புயல்... அன்று ஏற்பட்ட துருவ ஒளி ஹவாய் தீவுகள் வரை தெரிந்தது, மக்கள் அதன் ஒளியில் செய்தித்தாள்களையே படிக்க முடிந்ததாம்.

    2013 மே மாதம் அதே போன்ற ஒரு மிகப் பெரிய சூரியப் புயல் வரலாம் என்று எண்ணப்படுகிறது.

    அன்று தந்தி ஒயர்கள், மின்சாரக்கம்பிகள் ஷார்ட் சர்க்கியூட் ஆகி, பல வீடுகள் தீக்கிரையாகின.. இன்று நாம் உபயோகப்படுத்தும் மின்சாதனங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது அந்த ஒரு நாள் உலகத்தின் சில பகுதிகள் இருளில் மூழ்கலாம்.

    விமானங்கள், செயற்கைக்கோள்கள், கணிணிகள் முக்கியமா டி.விக்கள், தொலைபேசிகள், செல்பேசிகள் இப்படி மின்சாரம் மற்றும் தொலைதொடர்பை நம்பி இருக்கும் அத்தனையும் அன்று பிரச்சனைகளைச் சந்திக்கலாம்.

    கத்ரீனா புயல் உண்டாக்கியதைப் சேதத்தை விட 20 மடங்கு சேதத்தை இந்தப் புயல் உண்டாக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

    http://science.nasa.gov/science-news...oaaprediction/

    [media]http://www.youtube.com/watch?v=DU4hpsistDk[/media]


    வார்த்தைகளால் இப்படி பெரிசு பெரிசா சொன்னாலும் நாசா காட்டும் கிராஃப் என்ன சொல்லுது?





    இந்த கிராஃபின் படி போன 1960 களில் சூரியப் புள்ளிகள் மிக அதிகமா இருந்திருக்கு. 2000 ஆம் ஆண்டு இருந்த சூரியப் புள்ளைகளை விடக் குறைவாகவே புள்ளிகள் தோன்றலாம் என்று அவர்களின் கணிப்புகள் சொல்லுது...

    1859 ல் 120 புள்ளிகள் வரை இருந்தது, 1960 ல் 180 வரை உயர்ந்திருந்தது.. ஆனால் இப்போதைய கணிப்பு எழுபதுகளில்தான்.. அப்படி இருக்க இது அந்த அளவிற்கு இருக்கும் எனச் சொல்லுவது எங்கியோ உதைக்குது...

    எதையும் பெரிசா காட்டியே பயமுறுத்தி பழகிட்டாங்க.. என்ன செய்ய..

    பார்க்கலாம்.. நாசா சொன்னது பலிக்குதா என் உள்மனசு சொல்றது பலிக்குதான்னு..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #206
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    2013 வருஷம் ஒகே அந்த நாள் எந்த நாள்? அது தெரிஞ்சா எல்லா எலெக்ரிக்கல் எலெக்ரானிக்கல் உபகரணங்களை அமித்தி விட்டு தப்பிவிடலாம்

    ரொம்பவே பயமா இருக்குது.



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  3. #207
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இந்த நாசா க்க்காரங்க, அடிக்கடி இப்பிடிப் பீதிய கிளப்பி விடுறாங்களே...

    மாயன நம்பிறவங்க மட்டும் பயப்பிடாம இருங்க...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #208
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உங்க உள் மனசு சொல்றதுதாங்க நடக்கும் தாமரை....அன்னைக்கு எதுவும் நடக்காது.....சந்தோஷமா...எல்லோரும் தொலைக்காட்சிப் பாத்துக்கிட்டிருப்பாங்க....

    நாசான்னாலே புருடாதான்....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #209
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    குருவைப் பற்றிப் படிக்கறப்ப அதன் மீதுள்ள வரி வரியான மேகக் கூட்டங்களையும் அவை எத்ரெதிர் பக்கங்களில் நகர்வதையும் படிச்சிருந்தோம்..

    போன வருஷம் ஜூலை மாதம் எதுவோ ஒண்ணு இடிச்சதையும் பார்த்தோம்..

    இந்த வருஷம் பார்த்தா...

    அந்த மேகக் கூட்டங்களில் ஒரு பட்டியைக் காணோம்...


    பாருங்களேன்...





    இந்தப் புகைப்படங்களை எடுத்தவர் ஆண்டனி வெஸ்லி என்னும் ஆஸ்திரேலியர்..

    அவர் இன்னொரு விஷயமும் இந்த மாசம் வீடியோ எடுத்திருக்கார்.

    அதாவது மீண்டும் குருவை எதுவே தாக்கி இருக்கு,,,


    ஜூன் 3 ஆம் தேதி அவர் எடுத்த புகைப்படமும் வீடியோவும் கீழே...

    கறுப்பு வெள்ளையில் (வடமேற்குப் பகுதியில் உள்ள வெள்ளைப் புள்ளி)


    வண்ணத்தில் (தென்கிழக்குப் பகுதியில் உள்ள வெளிச்சப் புள்ளி)



    [media]http://www.youtube.com/watch?v=DaRwaw9d_LQ[/media]
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #210
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    யாருப்பா அது குருவோட இடுப்புப்பட்டியொன்ன ஆட்டயப்போட்டது..?

    குரு அடுத்ததா என்னத்தப் பறிகொடுத்தாரோ...

    இதனால, சிஷ்யகோடிகளுக்கு ஆபத்தொண்ணுமில்லாம இருந்தாச் சரி...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #211
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    குருப்பார்வை...இப்ப எப்புடி இருக்கும்....மிஸ்டர் காழியூர் நாராயணன்தான் சொல்ல வேண்டும்...

    நாராயணா...நாராயணா....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #212
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12


    அனைத்துலக வானியல் ஆண்டாக 2009 அறிவிக்கப்பட்டுள்ளது. இது கலீலியோ கலிலி தனது தொலைநோக்கியைப் பயன்படுத்தி முக்கிய வானியல் அவதானிப்புகளை செய்த 400 ஆண்டுகள் நிறைவில் வருகிறது. இந்த அறிவிப்பை பல நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் வெளியிட்டது.

    சர்வதேச வானியல் ஆண்டாக (International Year of Astronomy 2009) ஐ.நா. சபை அறிவித்துள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு 1609இல் கலீலியோ தனது தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்து கூறினார். "சூரியக் குடும்பத்தின் மையப்பகுதி சூரியன். அதனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது”. இதனை நம்ப மறுத்த மதவாதிகளுக்காக பொதுமக்களுக்கு முன் செய்முறை விளக்கத்தை அளித்தார். தனது கண்டுபிடிப்பை மக்கள் மத்தியில் தொலைநோக்கி வழியே பார்க்கச் செய்தார். வானை நோக்கி தொலைநோக்கியைத் திருப்பிய அந்த ஆண்டிலிருந்து நவீன அறிவியலின் பெரும் புரட்சி தொடங்கியது.

    மக்களிடம் தன் கண்டுபிடிப்பை முதலில் எடுத்துச் சென்ற விஞ்ஞானி கலீலிலியோதான். கிருத்துவ திருச்சபைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் நம்மை உறைய வைத்துவிடும். அந்த உக்கிரமான போராட்டம், "மனித வரலாற்றில் முக்கிய மைல்கல்' என்று கம்யூனிச சிந்தனையாளர் பிரடெரிக் எங்கெல்ஸால் புகழ்ந்துரைக்கப்பட்டது.

    ஐரோப்பாக் கண்டம் கிருத்துவ கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தின் பிடியில் பல நூற்றாண்டுகள் இருந்தது. மானுடத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவுப் புரட்சி செய்ய வந்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலமது. அப்படியொரு காலத்தில்தான் கலீலிலியோ கலிலி இத்தாலியில் பிறந்தார். மருத்துவப் படிப்பை பயின்று வந்தவர் விருப்பமில்லாமல் பாதியிலேயே விட்டுவிட்டு கணிதத்தைப் படித்தார். பேராசிரியராகப் பணியாற்றி பல அறிவியல் கருத்துக்களை எடுத்துரைத்தார். அறிவியல் கருத்துக்கள் தத்துவார்த்தமாக கூறப்பட்டு வந்த காலத்தில், முதன்முதலாக செய்முறையின் மூலம் அறிவியல் கருத்துக்களைச் வெளியிட்ட பெருமை கலீலிலியோவைச் சாரும்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #213
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வியப்பூட்டும் மனிதர் கலீலியோ. மத குருமார்களை சமாளிப்பதென்பது எவ்வளவு ஆபத்தானது என வரலாற்று நூல்களில் படித்திருக்கிறேன். எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து...பல அறிவியல் உண்மைகளை உலகுக்கு அளித்த கலீலியோவைக் கௌரவிக்கும் விதமாக 2009ஐ சர்வதேச வானியல் ஆண்டாக அறிவித்ததில் மகிழ்ச்சி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #214
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    உண்மை என்றுமே கசக்கும். அதே தான் அந்த காலத்திலும் நடந்திருக்கிறது.
    கலிலீயோ விடாமுயற்சியாக சாதித்து இருக்கிறார்.

    நல்ல தகவல்



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  11. #215
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    சூரியன்லே இரண்டு இடத்தில் சுனாமி ஏற்பட்டு இருக்கிறதாமே. அதனால் வெளிப்படும் கதிரியக்கம் நம் பூமியை நோக்கி வருகிறதாமே. வானத்தில் வெளிச்சம் அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    தாமரை அவர்கள் கொஞ்சம் விளக்கமாக எழுதுவார் என்றே நினைக்கிறேன்.

  12. #216
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by aren View Post
    சூரியன்லே இரண்டு இடத்தில் சுனாமி ஏற்பட்டு இருக்கிறதாமே. அதனால் வெளிப்படும் கதிரியக்கம் நம் பூமியை நோக்கி வருகிறதாமே. வானத்தில் வெளிச்சம் அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    தாமரை அவர்கள் கொஞ்சம் விளக்கமாக எழுதுவார் என்றே நினைக்கிறேன்.
    துருவ ஒளி நடனம் என்று ஏற்கனவே இதைப் பற்றிச் சொல்லி இருக்கேன்..

    http://www.tamilmantram.com/vb/showthread.php?p=475056

    இதையும் கவனிக்கவும்.

    http://www.tamilmantram.com/vb/showthread.php?p=429444

    சூரிய காந்தப் புயலின் வலிமையும் எண்ணிக்கையும் 11 வருடச் சுழற்சியில் அதிகமாகை குறையச் செய்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் சூரியக் கரும்புள்ளிகள் ஆகும்.

    சூரியனில் கரும் புள்ளிகள் தொகுப்பு தொகுப்பாக உண்டாகி மறைகின்றன. இந்தத் தொகுப்பில் சராசரியாக 10 சூரியக் கரும்புள்ளிகள் இருக்கும். இவற்றின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து உச்சத்தை எட்டி மறுபடி மெல்லக் குறையும். இந்த ஒரு சுழற்சிக்கு ஆகும் காலம் 11 ஆண்டுகள்.

    சோலார் மினிமம், சோலார் மேக்ஸிமம் இந்த உச்ச நீச்ச காலங்கள் அறியப்படும்.

    தற்போது சோலார் மினிமம் என்ற காலத்தைத் தாண்டி சூரியக் கரும் புள்ளிகள் உண்டாகத் தொடங்கி இருக்கிறது. இதன் விளைவாக இரண்டு சூரியப் புயல்கள் உண்டாகி மிகப் பெரிய மின் காந்தப் புயல் உண்டாக்கி இருக்கிறது.

    இதனால் ஏற்பட்ட துருவ ஒளி நடனம் அமெரிக்காவின் வடக்குப் பகுதி வரை இம்முறை தெரிந்திருக்கிறது.

    மேலும் சோதனையாக..

    பன்னாட்டு விண்வெளி மையத்தின் குளிரூட்டும் பகுதியில் அம்மோனியா பீய்ச்சப்படும் பகுதியில் பழுது ஏற்பட்டிருப்பதால் குளிர் பதனம் செயல்படவில்லை. அதைச் சரி செய்ய விண்வெளி நடைக்கு திட்டமிட்ட போது இந்தப் புயல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால், பழுது பார்க்கும் பணி மூன்று நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் சில மணிநேரம் செயற்கைக் கோள்கள் முடக்கப் படலாம். நீங்க எதாச்சும் ப்ரோக்ராம் பார்க்க முடியலன்னா இது காரணமாய் இருக்கலாம்.

    2013 வாக்கில் சோலார் மேக்ஸிமம் எனப்படும் அதிகபட்ச காந்தப் புயல்கள் இருக்கும் என்று சொல்லி இருக்கிறேன்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 18 of 22 FirstFirst ... 8 14 15 16 17 18 19 20 21 22 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •