இயற்கைக்கு மாறுதலாய் யோசித்ததால் தான் இன்றைக்கு, ஒருத்தர் எழுதுறதை இன்னொருத்தர் படிக்கிறோம்.
அமெரிக்காவுக்கு தெரியும் what to do, what not to do.
இனிமே நிலாவக் காமிச்சு சோறு ஊட்ட முடியாதோனு நம்ம பயப்படலாம். அதுக்காக பட்டினி இருக்க முடியுமா?
தண்ணியே இல்லாத வறண்ட பூமியிலே வீட்டை கட்டிட்டு, இயற்கை மாசு படுவதால் தான் லாரி தண்ணிக்கு 1000 ரூபாய் கொடுக்கிறோம்னு சொன்னா எப்படி? அது விதி, இப்படித்தான் இருக்கும். எதிர்காலத்துல இன்னும் மோசமா இருக்கும்.
பொருளீட்ட எல்லாரும் காஸ்மோ (அ) மெட்ரோ பாலிட்டன் சிட்டியைத் தேடிப் போவதைப் போலத்தான், அறிவைத் தேடி அமெரிக்கா எங்கெங்கயோ போயிட்டிருக்கு. அதை அழிவைத் தேடினு நாம தப்பா புரிஞ்சு இட்டுக் கட்டுறோம்.
நாம காலையில் பல் விளக்குற பொருளில் இருந்து, நைட்டு தூங்குற வரைக்கும் பயன்படுத்துற ஒவ்வொன்றும் இயற்கையை அளித்து உருவாக்கப்பட்டவை.
இயற்கையை அழிக்காமத் தான் வாழுவேன் என்று அடம்பிடிக்கும் நிலையிலா நமது வாழ்க்கை இருக்கு? இயற்கையோடு ஒன்றித்தான் வாழுவேன் என்றால், நீலகிரி மாவட்டத்துல இருக்க காட்டுக்குள்ள போய் தான் நம்மெல்லாம் வாழணும்.
ஒரு சிறிய தொற்று நோய் வந்தா போதும், ஊரே காலியாய்டும். அட நீங்க வேற, பக்கத்து ஊருக்கு போயிடலாம்னு தப்புக்கணக்கு போடாதீங்க. நான் சொன்ன ஊரே காலியாயிடும்னா ஆல் ஆளும் மர்கையா.
நம்ம இயற்கைக்கு தீங்கு விளைவிக்கிறோம், இல்லேனு சொல்லவே இல்லை. இதெல்லாம் விதி. விதினா fate லேது law.
இந்த உலகம் இது வரை அழிஞ்சு போயிருக்கா? சுனாமி, எரிமலை, நிலநடுக்கம் எல்லாம் பூமி அழிஞ்சு போறதுக்கு உதாரணம் இல்லை. அதெல்லாம் பூமியோட charectaristic.
காடுகளை அழிச்சு வீட்ட கட்றதுக்கு முன்னாடியும் மழை இல்லாம பஞ்சம் வந்திருக்கு. எப்ப சுனாமி வரல? எப்ப நிலநடுக்கம் வரலை?
நானும் சின்ன வயசில இருந்து, உலகம் அழியுற கதையை பல முறை கேட்டுட்டேன்பா. 2000 ல உலகம் அழிஞ்சிடும்னு சொல்லிட்டு ஒரு படத்துல ஒரு கேரக்டர் திரியுமே, அது ஒரு ஜோக்கர் கேரக்டர்பா.
உலகம் அழியுறதைப் பத்தி ஆராய்ச்சி எல்லாம் 40 வயசுக்கு மேல பண்ணிக்கோங்க, அது வரைக்கும் வாழுங்க மக்களே.
மழை வரும் (அ) வராது னு சொல்லலாம். நிலநடுக்கம் வரும்னு முன்னக்கூட்டி சொல்ற அளவுக்கு நமக்கு எப்ப அறிவு வருதோ, அன்னிக்கு சொல்லுங்க உலகத்தில இருக்கவங்க எல்லாம் அழிவாங்க என்று. அப்பவும் உலகம் அழியாது.
Bookmarks