என் காதல் தொடுகின்ற
எல்லை கோடுதான்
காதலி நீ தான்
முடிவிலியின் முற்றத்தில்
இருந்து முனகுகின்ற
வரையப்படாத வளைகோடு.
என் காதல் தொடுகின்ற
எல்லை கோடுதான்
காதலி நீ தான்
முடிவிலியின் முற்றத்தில்
இருந்து முனகுகின்ற
வரையப்படாத வளைகோடு.
கொஞ்சம் வளைகிறேன்
மீறித்தான் பாரேன்
உன் எல்லையை!!
உண்மையில் காதல் என்பது ஒரு கோடுதான். ஒருக் கோட்டில் இருபயணம் என்பதே
சரி. இங்கே நீங்கள் சொல்லியிருப்பது சொல்லப்படாத, அல்லது சொன்னபிறகு
உண்டான தாக்கத்தில் விளைகிற, காதல்.
முடிவேயில்லாத முடிவைக் கொண்ட முடிவிலியில் அவளின் வளைகோடு, முடிவைக்
கொண்ட உங்களின் எல்லைக் கோட்டோடு இணைவது முரண்பட்ட காதலா? அல்லது
எதிர்மறை பிணைப்புக் காதலா?
"தொடுகின்ற" எனும் சொல்லை அடுத்த வரிக்குள் திணித்திருந்தால் சட்டென்று மக்கள் மனதில் கவிதை ஒட்டிக் கொள்ளும்!
வாழ்த்துக்கள் திவ்வியராஜ்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இணை கோடுகளாம் நம் மெய்கள்
ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு
நம் உயிர்களை வளைத்த காதலென்ற
எல்லையற்ற வரையப் படாத வளைகோட்டை
அர்த்தமுள்ள காம எல்லைகளுக்குள்
நிச்சயமாய் வரையட்டும்!
சிந்திக்க வைக்கும் குறுங்கவிக்கு வாழ்த்துக்கள் திவ்வியராஜ், ஆதவாவின் பின்னூட்டமும் குறுங்கவியோடு அருமை
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
நன்றி நாகரா, ஆதவா
அருமை நண்பரே.... வார்த்தை எதிர்பார்த்து காதலன் இரண்டு மனத்துடன் காதலி நடத்தும் மௌன போராட்டம்....
இதன் முடிவுதான் என்ன முற்றுபெறாத தொடர்கதையா.....
நல்ல கவிதை நண்பரே........
துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks