ஈரோடு மாவட்டம், பண்ணாரியில் தான் பிச்சைக் காரர்களின் சங்கம் துவங்கப்பட்டு அதன் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், தாளவாடி, பவானிசாகர், சத்தியமங்கலம் பகுதிகளிலிருந்து ஏராளமான பிச்சைக்காரர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பிச்சைக்கார நிர்வாகிகள், அரசு சார்பில் தங்களுக்கு நலத்திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது தர்மம் பண்ண வேண்டும் என, பொதுமக்களை கேட்டுக் கொண்டுள் ளனர். இனிமேல் 25 பைசா, 50 பைசா வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
சுற்றுலாத்தலமான பண்ணாரி அம்மன் கோவிலுக்கு ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்தக் கோவிலில், பிச்சைக்காரர்களுக்கு பஞ்சமே இருக்காது. கடந்த சில தினங்களுக்கு முன், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத் தியதற்காக, பிச்சைக்காரர்களை கோவில் நிர்வாகம் கண்டித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பிச்சைக்காரர்கள், தங்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.
Bookmarks