வீர்சிங் ஒரு சின்ன பெட்டிக்கடை வச்சிருந்தார். பல்லி மிட்டாய் பாட்டில் மேல்தட்டில் இருந்துச்சு. கடைக்கு வந்த சிறுவன் ஒருத்தன் "நாலணாவிற்கு பல்லிமிட்டாய் வேணும்"னான். வீர்சிங் ஏணியபோட்டு ஏறி பத்திரமா பாட்டிலை கீழ கொண்டுவந்து அவனுக்கு மிட்டாய் கொடுத்துட்டு மறுபடியும் ஏறி மேல வைச்சிட்டாரு.
கொஞ்ச நேரத்துல இன்னொரு பையன் வந்தான். "நாலணாவுக்கு பல்லி மிட்டாய் வேணும்"-னான் மறுபடியும் ஏணியில ஏறி இறக்கி தந்துட்டு மறுபடியும் ஏறி மேல வைச்சிட்டாரு.
இன்னும் கொஞ்ச நேரம் போச்சு.. இன்னொரு பையன் வந்தான்.. நாலணாவுக்கு பல்லி மிட்டாய்- ன்னு கேட்டான். வீர்சிங் கோபத்தோட மேல ஏறி பாட்டிலை கொண்டுவந்து அவன்கிட்ட நாலணாவுக்கு பல்லி மிட்டாய் கொடுத்துட்டு கீழயே வைச்சிட்டாரு பாட்டிலை..
இன்னொரு பையன் வந்தான்.
"உனக்கும் நாலணாவுக்கு பல்லி மிட்டாயா" ன்னு கேட்டார்.
அவன் "இல்லை"ன்னு சொன்னான். உடனே ஏணியை போட்டு மேல ஏறி பாட்டிலை வைச்சுட்டு கீழ இறங்கிவந்து..
" இப்போ சொல்லு உனக்கு என்ன வேணும்"னு கேட்டார். அதுக்கு அவன் " எனக்கு பத்து பைசாவுக்கு பல்லி மிட்டாய் வேணும்-ன்னு சொன்னான்.. !!..
Bookmarks