உணர்வுகள்
அன்பே நலமா எனை மறந்து எங்கே போனாய் எத்தனை நாளாய் உனக்காக காத்து இருந்தேன் தெரியுமா ..
அப்பா அம்மா என்ன சொன்னார்கள் சம்மதிக்கவில்லை என்றால் பெங்களுர் போய் விடுவோம் என் தோழி இருக்கிறாள் அங்கே ...........இன்னும் காலம் தாழ்த்தினால் விபரிதம் நடந்து விடும் .டாக்டர்யை பார்த்தேன் ........உறுதி செய்து விட்டார்
அப்பா அம்மாவை நினைத்தால் பயமாக இருக்கிறது. 3 பெண்களை வைத்து கொண்டு இப்படி செய்துவிட்டாயே என்று செத்தே போய் விடுவார்கள் முடிவு ஒன்று சீக்கிரம் எடுக்க வேண்டும் எப்போதும் சந்திக்கும் இடத்துக்கு வருகிறேன் ஆபீஸ் முடித்து
இன்று உங்கள் வீட்டு வாசல் கதவு திறந்து இருந்தது அது தான் இதை எழுதி அனுப்புகிறேன் .................
இப்படியே போனது அந்த சிறுவன் கொண்டு வந்து தந்த காதல் கடிதம்
கடைசி வரியில் தான் புரிந்தது நான் புதிதாய் வந்த இந்த அறையில் எனக்கு முன்பு ஒரு மோசக்காரன் இருந்திருக்கிறான் என்று.
பெண்ணே யாராய் இருந்தாலும் பாவம் நீ .
Bookmarks