Results 1 to 7 of 7

Thread: உணர்வுகள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    உணர்வுகள்

    உணர்வுகள்


    அன்பே நலமா எனை மறந்து எங்கே போனாய் எத்தனை நாளாய் உனக்காக காத்து இருந்தேன் தெரியுமா ..

    அப்பா அம்மா என்ன சொன்னார்கள் சம்மதிக்கவில்லை என்றால் பெங்களுர் போய் விடுவோம் என் தோழி இருக்கிறாள் அங்கே ...........இன்னும் காலம் தாழ்த்தினால் விபரிதம் நடந்து விடும் .டாக்டர்யை பார்த்தேன் ........உறுதி செய்து விட்டார்

    அப்பா அம்மாவை நினைத்தால் பயமாக இருக்கிறது. 3 பெண்களை வைத்து கொண்டு இப்படி செய்துவிட்டாயே என்று செத்தே போய் விடுவார்கள் முடிவு ஒன்று சீக்கிரம் எடுக்க வேண்டும் எப்போதும் சந்திக்கும் இடத்துக்கு வருகிறேன் ஆபீஸ் முடித்து

    இன்று உங்கள் வீட்டு வாசல் கதவு திறந்து இருந்தது அது தான் இதை எழுதி அனுப்புகிறேன் .................

    இப்படியே போனது அந்த சிறுவன் கொண்டு வந்து தந்த காதல் கடிதம்

    கடைசி வரியில் தான் புரிந்தது நான் புதிதாய் வந்த இந்த அறையில் எனக்கு முன்பு ஒரு மோசக்காரன் இருந்திருக்கிறான் என்று.

    பெண்ணே யாராய் இருந்தாலும் பாவம் நீ .
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சொற்ப வரிகளில் நல்ல சஸ்பென்ஸை வைத்து எழுதியுள்ளீர்கள். அருமை. வாழ்த்துகள் ரவி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    எழுத்து புதுசாக இருக்கிறது ரவீ பாராட்டுகள், நீங்கள் சொல்லி இருக்கும் கதையில் ஆரம்பத்தில் இருந்து யார் யாருக்கு எழுதிகிறார் என்று தெரியாமல்? எதுக்கு எழுதுகிறார்? என்று தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சுகளை அவிழ்த விதம் ரசித்தேன். கடைசியில் கொஞ்சம் பாவமான முடிவு தான்.....பாராட்டுகள் இன்னும் இன்னும் எழுதுங்கள்.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    அண்ணா..
    ரௌம்ப நல்லா இருக்கு....
    கொஞ்சம் குழப்பம் ஆகா ஆரம்பித்து நிறைவு பண்ண விதம் நன்றாக இருக்கு..
    வாழ்த்துக்கள்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  5. #5
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    அருமை...! வாழ்த்துக்கள்...!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    குறுங்கதைக்குள் உணர்வுகளை அடைத்து வைத்துள்ளீர்கள். இதில் கூட சாடல் இழையோடுகிறது. மனதை நிறைத்த பெண்ணை.. வயிற்றை நிரப்பிய ஆணை.. நினைத்து மனம் வெம்பி கண்கள் நெருப்புத் துண்டங்களை பொருத்திக்கொள்கின்றன. திருப்பமான பாணியில் உங்கள் சுவடுகளுடன் கதை நன்றாக உள்ளது. பாராட்டுகள்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    ரத்தின சுருக்கமாக ஒரு அழகான கதையை சஸ்பென்ஸ் வைத்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •