Results 1 to 8 of 8

Thread: நான் பிணம் தான்........

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0

    நான் பிணம் தான்........

    தோழியே!
    கூடி மகிழ்ந்து இருந்த
    காலம் மறக்கவில்லை....
    மறுக்கவும் இல்லை.....

    தேடி அலைந்த காலம்
    எல்லாம் இன்னும்
    என் கண்முன்னே....
    அன்றும்...இன்றும்...
    என்னைத் தேடி அலைய
    வைத்துவிட்டாயே......

    சிறுபெண் தான் என்றாலும்
    கண்ணீர் விட்டேன்
    உனக்காக....
    என் கண்ணீர் எல்லாம்
    என் கண்ணை மட்டுமே
    கரைத்தன...
    ஏனோ! உன் நெஞ்சை அல்ல....

    நெருக்கம் விட்டுப் போனதால்
    என் மனத்தில் இறுக்கம்
    தொற்றிக் கொண்டது.....
    கண்டும் காணாமல் இருப்பதை
    நானும் பழகிக் கொண்டேன்
    உன்னிடம் இருந்து......

    தாளாத துயரம்
    நெஞ்சில் என்றாலும்
    என் சிரிப்புக்கு பஞ்சம்
    இல்லை....

    சிரிப்பை கொண்டு தான் இதுவரை
    என் துக்கத்தை
    கழுவிக் கொண்டு இருக்கிறேன்...
    ஏனோ அது என்னை விட்டு
    போக மறுக்கிறது....
    கண்ணீரால் கழுவ சொல்லி
    கேட்கிறது......

    கண்ணீருக்கா பஞ்சம்....
    எப்போதும் என்னோடு
    மாறாமல்..மறையாமல்
    பிரியாமல் இருப்பது
    என் கண்ணீரும், துயரமும் தான்......
    இதுவும் இல்லை எனில்
    நான் பிணம் தான்........
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    உயிர்ப்பூவில் நறுமணம் சுரப்பதை போல, உயிருள்ளவர்களில் அன்பு என்ற ஒன்று சுரக்கும்வரை சுற்றி இருப்பவர் யாவரும் சுற்றத்தாரே! கலங்காதே தோழி!
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நமக்கு பிடித்தவர்க்கெல்லாம்
    நம்மை பிடிக்க வேண்டுமென
    கட்டாயமில்லை..
    கட்டாயமென்றால் அது ப்ரியம் இல்லை..


    இந்த உலகில்
    யாவர்க்கும் கொடுக்க
    அன்பை தவிர மற்றொன்று
    நம்மிடம் இல்லை..

    வழங்க படுகிற எவையும்
    வந்தடைகிறது
    மாற்றாகவோ !!
    மறுப்பாகவோ !!

    மற்றாக வந்தாலும் அன்புதான்
    மறுப்பாக வந்தாலும் அன்புதான்..

    கொடுத்துக் கொண்டே இருங்கள்
    கொள்வோர் இருந்தாலும் இல்லாவிடினும்..

    நிலவுக்கு இருண்ட பக்கங்கள் உண்டு
    நினைவுக்கும் அன்புக்கும் அது தகாது..

    அன்பின் நிழலில்
    அமர நினைப்பது சரிதான்
    அன்பின் நிழலாய் இருந்து
    அமர வருவோரை
    ஆயாசப்படுத்தல் சிறந்ததன்றோ!!

    வாழ்த்துக்கள் சகோதரி..
    அன்புடன் ஆதி



  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வசூல்ராஜா திரைப்படத்தில் ஒரு காட்சி. உணர்ச்சி மேலீட்டால் கோமா நிலையில் இருப்பவர் கண்களிலிருந்து கண்ணீர் கோடாக வழியும். ரசிகனும் உணர்ச்சியில் முழுகுவான். இந்தக் கவிதையும் அப்படித்தான். ஆதியின் கவி அதுக்குச் சாட்சி.

    கண்ணீர் சுரப்பதால்தான் கண்கள் சுத்தமாகிறது.

    அந்தக் கண்ணீரே இதயத்தில் சுரந்த அன்பாக இருந்தால் உலகமே சுத்தமாகும்.

    உலகை நீங்கள் மாற்றத் தொடங்கி விட்டீர்கள்.

    பாராட்டுகள் கவிதா123.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    காதல் இருதயம் இருக்கும் வரை
    சாதல் என்பது சாத்தியம் இல்லை.

    எளிய வரிகளில்
    அரிய காதலை உணர்த்துகம்
    அழகுக் கவிதைக்கு வாழ்த்துக்கள் கவிதா
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    நமக்குப் பிடித்தவர்க்கெல்லாம்
    நம்மைப் பிடிக்க வேண்டுமெனக்
    கட்டாயமில்லை..
    கட்டாயமென்றால் அது ப்ரியம் இல்லை..


    இந்த உலகில்
    யாவர்க்கும் கொடுக்க
    அன்பைத் தவிர மற்றொன்று
    நம்மிடம் இல்லை..

    வழங்கப் படுகிற எவையும்
    வந்தடைகிறது
    மாற்றாகவோ !!
    மறுப்பாகவோ !!

    மாற்றாக வந்தாலும் அன்புதான்
    மறுப்பாக வந்தாலும் அன்புதான்..

    கொடுத்துக் கொண்டே இருங்கள்
    கொள்வோர் இருந்தாலும் இல்லாவிடினும்..

    நிலவுக்கு இருண்ட பக்கங்கள் உண்டு
    நினைவுக்கும் அன்புக்கும் அது தகாது..

    அன்பின் நிழலில்
    அமர நினைப்பது சரிதான்
    அன்பின் நிழலாய் இருந்து
    அமர வருவோரை
    ஆயாசப்படுத்தல் சிறந்ததன்றோ!!
    இப்படிப்பட்ட ஓர் அருமையான பின்னூட்டக் கவிதையை வரவழைத்த கவிதாவுக்கு நன்றிகளும் ஆதிக்கு வாழ்த்துக்களும்.

    இணைந்த இருதயங்கட் கிடையே சந்தியாய்ப்
    பிணைக்கும் ஒட்டுக்கூழ் அன்பு

    புரிகிறதா ஆதி!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    நல்ல கவிதை. நெஞ்சைக் கனக்க வைத்தக் கவிதை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இது போன்றதொரு கவிதையைக் கண்டிருக்கிறேன் உங்கள் கவிதை வாயிலாக.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அன்பு செலுத்துதலை அன்றாடம் செய்து வருதலே நாம் நாமாய் இருப்பதற்கான சான்று. ஆதி சொல்லியதைப்போல எப்படி வந்தாலும் அன்பை அமரவைத்து ஆசுவாசப்படுத்துவோம்.

    அழகான கவிதைக்காக கவிதாவுக்கும், ஆதிக்கும் அன்பான வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •