Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 51 of 51

Thread: இன்னும் பெயர் வைக்கவில்லை....-புதிய தொடர்கதை

                  
   
   
  1. #49
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    19
    கதிரவன் அவன் பெற்றோர் காதலி கயல்விழி மோகன், சுரேஷ் அனைவரும் டாக்டர் ரதீஸனின் வீட்டில் குழுமியிருந்தன். கதரிவனின் அப்பா சங்கீதா உணவகத்திலிருந்து அனைவருக்கும் பலகாரங்கள் தரவைத்திருந்தார். எங்கும் மகிழ்ச்சி மயம்.

    கதிரவன் ரதீஸன் முன் நெடஞ்சாணிக்கிடையாக விழுந்து எழுந்தான். ரொம்ப நன்றி சார் எனக்கு வந்த பெரிய ஆபத்திலிருந்து மட்டுமல்லாமல் என்னுடைய வியாதியையும் குணப்படுத்திட்டீங்க. நீங்க மட்டுமில்லாட்டா என்ன ஆயிருக்கும்னே நினைச்சுப் பார்க்க முடியலை. உங்களுக்கு வாழ்
    நாள் முழுசா கடமை பட்டிருக்கேன் என்றான் நெகிழ்ச்சியுடன்.

    அடேடே அதக்கு நான் மட்டும் காரணமில்லைப்பா. அங்க பாரு சுரேஷ் கோர்டுக்கே போகாம திறமையா வெளியிலேர்ந்தே வழக்காடிய வக்கீல். பிரசுத்திற்கே அனுப்பாம தந்திரமா கதை எழுதிய மோகன், அப்புறம் கயல்விழியோட காதல் உன் மேல வைச்ச நம்பிக்கை உங்க அப்பா அம்மாவோட வேண்டுதல் இப்படி பல காரணங்களும் சேர்ந்து தான் இந்த சாதனையே என்றார் தன்னடக்கத்துடன்.

    சார் நான் செஞ்சது ஒன்னுமே இல்லை. ஜஸ்ட் ஒரு திரி பிடிச்சு கொடுத்தேன், மோகன் சார் தான் அற்புதமா ஒரு கதையை எழுதினாரு. டாக்டர் தான் உங்களை குணப்படுத்த எல்லாம் முயற்சியும் செய்தாரு என்றான் சுரேஷ் அவன் பங்கிற்கு தன்னடக்கமாக.

    மோகனும் இல்லை கதிரவன் அரசியல் பிரச்சனையின்னு சொன்னதும் நான் பயந்த்து என்னவோ உண்மைதான். ஆனால் சாதாரணமா கதை எழுதிகிட்டு இருந்த என்னை ஒரு மருத்துவ கதாரியனாக மாத்தினது இவங்க இரண்டு பேரும் தான் என்றான்.

    கயல்விழியின் கைபிடித்தவாறு அமர்ந்திருந்த கதிரவன் அது சரி சார் இந்த மாதிரி அரசியல் பிரச்சனை வந்த்தும் பயந்து என்னை கைவிடாம எல்லாரும் சேர்ந்து போராடி என்னை காப்பாதிவிட்டதற்கு என்ன சொல்ல என்றான் நன்றியுணர்ச்சியுடன்.

    அதெல்லாம் சரிப்பா முக்கியமான வேலையால நான் இன்னிக்கு கோர்டுக்கு வரமுடியலை என்ன நடந்த்துன்னு யாராவது சொல்லுங்களேன். எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்கு. நிஜ கொலையாளி யார். எப்படி நீங்க குணமானீங்க. நீங்க விடுதலையானதை அவங்க அந்த அரசியல்வாதிங்க எப்படி சுலபமா ஏத்துகிட்டாங்க. எனக்கு எல்லாம் சொல்லுங்க என்றார் ரதீஸன்.

    ஹாஹா அதுக்குத்தான் ஒரு கதாசிரியரை கூட வச்சிருக்கோம்ல. அவரு சொல்வார் கதையை என்று சுரேஷ் மோகனை பார்த்து சமிக்கை செய்ய மோகன் வழக்கமான கதை சொல்லும் பாணியில் தொடங்கினான்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #50
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    20
    உங்கள் பெயர்.

    கதிரவன். கதிர்ன்னு கூப்பிடுவாங்க.

    என்ன படிச்சிருக்கீங்க.

    எம்எஸ்சி மைக்ரேயாலஜி.

    எங்க வேலை பாக்கறீங்க.

    இப்போ வேலையில்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன்.

    உங்களுக்கு எம்எல்ஏ .......... தெரியுமா?

    ஒரு தடவை பாத்திருக்கேன்.

    அவரை நீங்க போன மாசம் 20ம் தேதி அரிவாளால வெட்டினீங்களா

    இல்லை.

    என்ன இல்லையா. அப்ப போலீஸ் எதுக்கு உங்களை கைதி பண்ணியிருக்கு.

    அதை அவங்க கிட்டே தான் கேட்கனும்.

    நீங்க அவரை கொன்னதை பார்த்த சாட்சி இதோ உங்க முன்னே நிற்கிறாரு. வாங்க சரவணன் என்று ஒருவரை அழைத்தார்.

    இவரா நான் கொலை செய்யும் போது பார்த்தது ஆச்சர்யமா இருக்கே.

    சரவணன் நீங்க கதிரவன் சட்ட மன்ற உறுப்பினரை அரிவாளால் வெட்டும் போது பாத்தீங்களா.

    ஆமாம் சார்.

    என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன்.

    அவரு வேகமா ஓடி வந்து எம்எல்ஏ சட்டையை பிடிச்சிகிட்டாரு. கையிலே அரிவாள் வேற இருந்தது. .... ஒரு சாதி பேரை சொல்லி நாம ஒரு சாதிக்காரன் தானேடா உன்னால நம்ம சாதிக்கு என்ன லாபம்னு கத்தினாரு.

    அப்புறம்...

    அப்புறம் நீ என்னை பயன்படுத்திகிட்டு தப்பிக்க பாக்கறே. என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு நான் காதுல ஒன்னும் பூ சுச்தி வைச்சிக்கலைன்னு கத்தினாரு.

    அப்புறம்...

    அவரை ஓங்கி வெட்டிட்டு நான் கதிருடா. மைக்ரோபயாலஜி படிச்சிருக்கேன். ஒவ்வொரு செல்லையும் ஒவ்வொரு மிருகத்துக்கு இரையாக்கிடுவேன்னு சொல்லிட்டு
    ஓடிட்டாரு.

    எதுக்காக வெட்டினீங்க கதிர் சொல்லுங்க என்றார் சற்றே குரலை உயர்த்தி.

    சில நிமிடங்கள் மௌனமாக இருந்தான் கதிரவன். சில நிமிடங்கள் சுற்று முற்றும் பார்த்தான். தூரத்தில் கயல்விழி தெரிந்தாள். அவளருகில் சில நபர்கள். யாரும் தெரிந்த முகம் இல்லை. அப்பா அம்மா இன்னும் தூரத்தில் தென்பட்டனர். கயல்விழி உதடுகள் குவித்து ஓசையில்லாமல் கைகள் இரண்டையும் பிரித்தும் இணைத்தும் காட்டினாள். அவன் தன் கையில் இருந்த சிறிய காகித்தை எடுத்துப் பார்த்தான். மெதுவாக படித்தான். பிறகு மீண்டும் மௌனமான்.

    சொல்லுங்க கதிர் எதுக்காக கொன்னீங்க.

    ஐயா கொஞ்சம் தண்ணி வேணும் என்றான். அவனுக்கு குடிநீர் கொடுக்கப்பட்டது. பிறகு மெதுவாக சரவணனை காண்பித்து நீங்க சொன்னதை மறுபடியும் சொல்லுங்கள் என்றான்.

    சரவணன் பொய் சாட்சி தானே. சொன்னதையே மீண்டும் வெட்டி ஒட்டினான்.

    நீதிபதி அவர்களே இது ஒரு பொய் வழக்கு. சோடிக்கப்பட்ட வழக்கு என்றான் தீர்க்கமாக.

    அரசியல்வாதியின் கையாள் சட்டென்று முகம் மாறினார். மோகனை பார்த்து என்ன நடக்குது என்பது போல சைகை காட்டினார். எழுதியதை பேசாமல் வேறு ஏதாவது உளறப்போகிறானோ என்கிற பயம் அவருக்கு. மோகன் அமைதியாக உதட்டை பிதுக்கி என்ன நடக்கிறது என்று எனக்கும் தெரியிவில்லை என்று செய்கை செய்தான்.
    அவன் மீண்டும் பேசத்துவங்கினான்.

    ஐயா என் பெயர் கதிரவன்.

    அதை தான் சொல்லிட்டீங்களே.

    நீதிபதி இடைமறித்து அவரை பேச விடுங்கள் என்றார்.

    ஐயா என் பெயர் கதிரவன். நான் மைக்ரோபயாலஜி படிச்சிருக்கேன். இந்த எம் எல் ஏவை நான் ஒரு தடவை கூட பார்த்தது இல்லை.

    என்ன இப்பத்தானே பார்த்திருக்கேன்னு சொன்னீங்க – வக்கீலும் தடுமாறிப்போனார்.

    சொல்றேன் சார். எனக்கு மன நிலை சரியில்லை. நான் எந்த புத்தகம் படிச்சாலும் அந்த கதாபாத்திரமா மாறிடுவேன். அதனால சில வைத்தியமும் செஞ்சிகிட்டு வரேன். இப்போ கூட பாருங்க இந்த கோர்ட்ல நடக்க வேண்டியதை எனக்கு கதையா எழுதி கொடுத்திருக்காங்க. கதையில வர முக்கிய பாத்திரத்தோட பெயரும் கதிரவன். அவனும் மைக்ரோபயாலஜி படிச்சிருக்கான். என்னோட வீக்கனஸ் தெரிஞ்ச யாரோ தான் இந்த மாதிரி கதையை எழுதி என்னை மாட்டிவிட பார்த்திருக்கனும் என்றான் தெளிவாக.

    என்ன சொல்றீங்க. அப்ப ஆரம்பத்துல நீங்க பேசின அஞ்சு நிமிஷம் சுயநினைவில் இல்லையா.

    ஆமாம் ஐயா.

    இப்ப எப்படி சுயநினைவுக்கு வந்தீங்க.

    ஐயா, இவரு சாட்சியம் சொல்லும்போது நாம ரெண்டு பேரும் ஒரு சாதிக்காரங்க அப்படின்னு சொன்னாரு. செத்துப்போன எம்எல்ஏ ... சாதி. நான் வேற ... சாதி. – இது எனக்கு அடிச்ச முதல் அலாரம்.

    என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு....ன்னு அவரு சொல்லும் போது எனக்கு இரண்டாவது மணி அடிச்சுது. அப்ப தான் அந்த இடைவெளி கிடைச்சுது. கையில் இருந்த பக்கங்களை படிச்சேன். கோட்ல் நடக்கற கதையாக இருந்தது. அதுல என் பேரையை பார்த்தோன்னே எனக்கு புரிஞ்சுது. என்னையே நானாக மாத்தி ஏதோ நடக்கதுன்னு நினைச்சேன். அதனால தான் அவரை மறுபடியும் பேச சொன்னேன்.

    நீங்க மனநிலை சரியில்லாதவர்னு எங்களுக்கு தெரியும். அதை சொல்லித்தான் நான் உங்களுக்கு விடுதலை வாங்கிதரதா இருக்கேன். ஆனா கொலை நீங்க தான் செஞ்சீங்க என்றார் வக்கீல் மிகவும் தளர்ந்து போய்.

    சார் நான் மன நிலை தெளிவாக இருந்து அந்த கொலை செஞ்சிரந்தேன்னா நான் அந்த சாதிக்காரன்னு சொல்லி கொன்னு இருக்க மாட்டேன். அப்படி ஏதோ கதையின் பாதிப்புல இருந்தேன்னா இப்ப இந்த கதையை எழுதி கொடுத்தது யாரு? என்று கேட்டான் சற்றே வலிமையுடன்.

    நீதிபதி குறுக்கிட்டு என்ன நடக்குது இங்கே. பொய் கேஸா. சாட்சியை மேனிபுலேட் பண்றீங்களா. ஹை ஃப்ரோபைல் கேஸூன்னு சொன்ன உடனே சந்தேகம் வந்தது. எப்படிப்பா இவ்வளவு சுலபமா முடியும்னு. கதிரவன் நீங்க மனநிலை சரியில்லை அப்படிங்கறதுக்கு என்ன ஆதாரம்.

    சுமார் 20 நிமிடம் கழித்து நீதிபதி, நீங்க கொலை செய்யலை. யாரோ உங்களை இந்த கொலையில் மாட்டிவிட பார்த்திருக்காங்க. யாரு என்றார் யோசனையுடன்.
    வக்கீல் தடுமாற்றமாக இருந்தார்.

    சார் அதுக்கும் என்கிட்டே பதில் இருக்கு என்றான் கதிரவன்.

    வக்கீல் கடுப்புடன் ஏம்பா மனநிலை சரியில்லாதவன்னு சொல்லிட்டே அப்புறம் என்ன வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு கொலையாளி யாருன்னு போலீஸ் பாத்துக்கும் என்றார்.

    சார் கவலை படாதீங்க. கொலையாளி யாருன்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த பொய் சாட்சி யாருன்னு சொல்றேன். இவரு 13ம் வாடு செயலாளர். போன மாசம் இவங்க கட்சி தலைவர் வந்தப்ப ஆளுயர மாலையோட தெருத் தெருவா போஸ்ட்ர் ஒட்டிக்கிடாரு. இவரு ஆளுங்கட்சி. செத்தது எதிர் கட்சி எம்எல்ஏ. சாட்சி சொல்ல வேற வந்திருக்காரு. இந்த நிலைமையில இருக்கு கதை என்றான் கதிரவன் முற்றும் தெளிந்தவனாக.

    அப்புறம் கோர்டு ரொம்ப நேரம் நடந்தது. அதெல்லாம் நமக்கு தேவையா. நம்ம ஆளு வெளியே வந்தாச்சு. நீதிபதி காவல்துறைக்கு நிஜ குற்றவாளியை தேடுங்கப்பான்னு உத்தரவு போட்டுட்டாரு. எல்லாம் சுபமே என்று சொல்லி முடித்தான் மோகன்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    21

    பிரில்லியண்ட் என்றார் ரதீஸன்.

    அது சரி இந்த ஸ்கிரிஃப்டை அரசியல்வாதி எப்படி அனுமதிச்சாரு. அவருக்கு சந்தேகம் வரலையா என்று கேட்டாள் கயல்விழி அதுவரையில் மௌனமாக கொண்டாடிக்கொண்டு இருந்தவள்.

    மோகன் உடனே, வந்தது. அவன் ஏன் கொலை செஞ்சது நான் தான் ஒத்துகலைன்னு கேட்டாரு. நான் சொன்னேன் சார் முதல்லே கொலையை ஒப்புகிட்டா கோர்டுக்கு சந்தேகம் வராதான்னு சொல்லி சமாளிச்சேன்.

    அப்புறம்..

    ஒரே சாதிக்காரங்கன்னு நீங்க எழுதின வரில அவங்களுக்கு சந்தேகம் வரலையா.

    ஹாஹா. அது தான் நாம் செஞ்ச அதிர்ஷ்டம். ஆனா அடுத்த வரியை பிடிச்சிட்டாங்க. ஏன் “அப்புறம் நீ என்னை பயன்படுத்திகிட்டு தப்பிக்க பாக்கறே. என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு நான் காதுல ஒன்னும் பூ சுச்தி வைச்சிக்கலைன்னு கத்தினாரு” இந்த வரி தேவையான்னு கேட்டாரு. அதுக்கு நான், சார் அவன் மனநிலையில்லை சரியில்லைன்னு இங்கே எஸ்டாப்ளீஷ் பண்ணாதான் பின்னாடி அவரை விடுவிக்கலாம் அப்படின்னு சொல்லி சமாளிச்சேன்.

    மத்தக் கதை...

    மத்தக் கதை எங்கே. இந்த இடத்துல கதிரவன் குணமாயிட்டாரு. மத்த கதையை எழுதினது அவருடைய ஞாபக சக்தியும் புத்திசாலித்தனும் தான். நான் கூட இப்படி ஆளுங்கட்சியை போட்டு துவைப்பாருன்னு எதிர்பார்க்கலை. எதுக்கும் நீங்க எல்லாரும் கொஞ்ச ஜாக்கிரதையாகவே இருங்க என்று முடித்தான்.

    இருங்க இருங்க அந்த கதை பேப்பர்ஸ் மறுபடியும் கதிரவன் கைக்கு எப்படி போச்சு என்றார் ரதீஸன் இன்னும் புதிரிலிருந்து விடுபடாதவராக.

    டாக்டர் சட்ட நுணக்கங்கள் தெரிஞ்ச ஒரு வக்கீல் நான் இங்கே இருக்கேன் மறந்துட்டீங்களா. சட்டமும் தெரியும் நீதிமன்றத்தோடு சந்து பொந்துக்களும் தெரியுமே என்றான் நகைச்சுவையுடன்.

    அது சரி கயல்விழிக்கு என்ன ரோல் இதில் என்றான் மோகனும் அவனுக்கும் சில புதிர்கள் இருந்தன போலும்.

    அட மோகன் சார், நானும் டாக்டரும் கயலுக்கு எல்லாம் சொல்லி அனுப்பி வைச்சோம். ஒரு வேளை கதிரவனுக்கு நல்ல நினைவு திரும்பிட்டா அவரால அவங்களையும் அவரோட அப்பா அம்மாவையும் தான் சட்டுன்னு தெரிஞ்சிக்க முடியும்.

    அது சரி ஆனால் எனக்கு இன்னொரு டவுட் டாக்டர் என்றாள் கயல்விழி கண்களை அகலப்படுத்திக் கொண்டே.

    சொல்லும்மா.

    மோகன் சார் எழுதின ஸ்கிரிஃப்டை கதிரவன் தான் ஜெயில்லே படிச்சிட்டாரே. அப்பவே ஏன் அவருக்கு தெளிவு ஏற்படலை.

    முதல்ல கதிரவன் எந்த கதை படிச்சாலும் அதோட முக்கிய பாத்திரமாக மாறராரு. அதனால அவருக்கு மத்த பாத்திரங்களோட தாக்கம் இல்லை. இரண்டாவது அவரு ஒரு கதாபாத்திரமாக முழுசா மாறனும்னா அந்த சூழ்நிலையும் அதுக்கு தக்கமாதிரி இருந்தா சுலபமா இருக்கும். இப்ப ஒருத்தும் இல்லாத இடத்துல அவரு மாறினா அந்த மாற்றம் அவராலேயே உணர முடியாது. மூணாவது இது என்னோட கணிப்பு தான் ஏன்னா நான் கோர்ட்டுக்கு வரலையே – சரவணன் சாட்சி சொல்லும் போது அவரோட பேச்சால அவருக்கு மனமாற்றம் டிரிகர் ஆயிருக்கு. படிக்கும் போது அவரு கதிர் கதாபாத்திரத்தோட அதிகமா நூல்பிடிச்சு போனதால அப்ப அந்த மாற்றம் ஏற்படலை. அதுக்கும் மேலே இன்னும் சில நாட்கள்ல நாங்க முன்னாடி யோசிச்சு வைச்ச வைத்தியத்தை செஞ்சிருந்தாலே அவரு குணமாகியிருப்பாரு. ஏன்னா இயற்கையாகவே அவர் ஒரு ஜீனியஸ். ஆனா இப்படியெல்லாம் நடந்து போச்சு என்று சொல்லி முடித்தார்.

    அது என்ன வைத்தியம் டாக்டர் என்று ஆர்வமாக கேட்டாள் கயல்விழி.

    அது வேண்டாம்மா. அது இன்னொரு பெரிய கதையாயிடும்.

    எது எப்படியோ எனக்கு வண்டி நிறைய கதைகள் கிடைச்சிடுத்து என்றான் மோகன். எனக்குதான் இந்த வழக்கால ஒரு வழக்கும் வரலை என்றான் சுரேஷ் பொய்யாக கோபித்துக் கொண்டே.

    கவலைப்படாதீங்க சுரேஷ் உங்களை பத்தி கதை எழுதிய பிரபலமாக்கிடறேன் என்றான் மோகன்.

    கதிரவன் மீண்டும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தான்.

    சுரேஷ் புன்னகையுடன் மறுபடியும் ஒரு கேஸ் வந்தா என்கிட்டே வாங்க. கோட்டுக்கு போகாமலேயே சால்வ் பண்ணிடலாம் என்றான்.
    ஆமாம்பா என் பேஷண்ட் எனக்கு ஃபீஸே கொடுக்க வேண்டாம். வக்கீலுக்கு மாத்திரம் கொடுத்தா போதும் என்றார் ரதீஸன் மன நிறைவுடன்.

    முற்றும்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •