Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 37 to 48 of 51

Thread: இன்னும் பெயர் வைக்கவில்லை....-புதிய தொடர்கதை

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    10

    அந்த புது சுவாமிஜி ஆங்கிலத்திலும் தமிழிலும் தத்துவங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தார். பலரும் அவர் பேசுவதை உன்னிப்புடன் கவனித்தாலும் வியப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    அந்த புது சுவாமிஜி வேறு யாரும் இல்லை நான் தான். என்னை அழைத்துக் கொண்டு வந்த பெரியவர் என்னை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டிருந்தார். சும்மா இல்லாமல் பல புத்தகங்களையும் என் அறைக்குள் வைத்துச் சென்றிருந்தார். நானும் புது அவதாரத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தேன்.

    நீரில் குதித்து எத்தனை நாட்களுக்கு பிறகு எனக்கு விழிப்பு வந்ததென்றே தெரியாது. ஏதோ நாட்டு வைத்தியம் செய்திருந்தார்கள் எனக்கு.

    பல நாட்களுக்கு பிறகு என்னை இரண்டு பேர் பார்க்க வந்திருந்தார்கள்.

    “வணக்கும் சுவாமிஜி நாங்க இரண்டு பேரும் தமிழ் நாட்டிலேர்ந்து வந்திருக்கோம். எங்க ஊரில் ஒரு ஆன்மீக விழிப்புணர்வு பேரவை நடத்தறோம். அதுல தமிழ் தெரிஞ்ச உங்களை மாதிரி மஹான் வந்து பேசனா நல்லா இருக்கும்னு நினைக்கறோம். நாங்களே உங்களுக்கு போற வர செலவு எல்லாம் செஞ்சி அழைச்சிகிட்டு போறோம். சம்மதமா?”

    அவர் என்னை மஹான் என்று அழைத்தது எனக்கே விநோதமாக இருந்தது, சரியென்று ஒப்புக் கொண்டேன். அவர்கள் இருவரும் என்னை அழைத்து வந்த பெரியவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட எத்தனித்தார்கள். அந்த பெரியவர் என் கையில் சிறிய விபுதி பொட்டலதை கொடுத்தார். என்னை ஆழமாக பார்த்தார்.

    “உனக்கு ஏதாவது பிரச்சனையின்னா மறுபடியும் என்னை வந்து பாரு. இங்கே எத்தனை நாள் வேணும்னாலும் நீ தங்கலாம்” என்றார்.

    எனக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. இருந்தாலும் நன்றாக இருந்தது. நானே முற்றும் துறந்தவன் எனக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது. ஏதோ லெக்சர் செய்ய அழைக்கிறார்கள். திரும்பவும் கொண்டு வந்து விடப்போகிறார்கள் அதெற்கு ஏதற்கு இந்த பெரியவர் இவ்வளவு பீடிகையுடன் பேசுகிறார் என்று நினைத்தபடியே புறப்பட்டேன்.

    தொடரும்..
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    11
    கதிரை தேடிச் சென்று பல இடங்களில் தேடிய பிறகு அவனை ஊருக்கு அழைத்து வந்தனர் மோகனும் ரதீஸனும்.
    தங்களுக்கு சம்பந்தம் இல்லாத விவகாரம், காவல் துறை செய்ய வேண்டிய வேலை என்று இருவரும் நினைத்திருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் ஏதோ ஒரு உந்துதலில் காரியத்தில் இறங்கி விட்டனர்.

    மோகனுக்கு அலுவலத்தில் விடுப்பு சொல்லி விட்டு இறங்கியிருந்தான்.

    இருவரும் களைப்பாறிய பின் மாலையில் சந்தித்தனர். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    டாக்டர் கதிரவனுக்கு எப்படி இருக்கு.

    இன்னும் மயக்கத்தில் தான் இருக்காரு மோகன். சீக்கிரம் நம்ம நாவலை அவரை படிக்க வைக்கனும்.

    உங்க திட்டம் என்ன டாக்டர்?

    நீங்க எழுதின என்னோட கதையை படிக்க வைக்கப் போறேன். ஒவ்வொரு அத்தியாயம் படிக்கும் போது அவருக்குள்ள ஏற்படற மாற்றங்களை ஊர்ந்து கவனிக்கப் போறேன். அவரு என்னை மாதிரி மனோதத்துவ மருத்துவரா மாறனும். அதுக்கப்புறம் நிஜமான என்னோட நோயாளிகளை அவருக்கு அனுப்பப் போறேன். அதுக்கப்புறம் நீங்க புது நோயாளியா அவர் கிட்டே வரீங்க.

    என்ன நான் நோயாளியாகவா எதுக்கு டாக்டர்?

    சொல்றேன். இப்ப அவரு தன்னை ஒரு பெரிய மருத்துவரா நினைச்சிகிட்டு இருப்பாரு இல்லையா?

    ஆமாம்.

    அப்ப நீங்க நோயாளியா வந்து அவருக்கு என்ன வியாதி இருக்கோ அதே வியாதி உங்களுக்கு இருக்கறதா சொல்லப் போறீங்க.

    அப்படியா? என்று வியப்பாக கேட்டான் மோகன். நம் மாதிரி எழுத்தாளர்களை விட இவரு மாதிரி மருத்தவர்களிடம் பல கதைகள் இருக்கும் போலே என்று நினைத்துக் கொண்டான்.

    ஆமாம். இப்ப கதிருக்கு வந்திருக்கிற வியாதிக்கு அவரிடமே தான் வைத்தியமும் இருக்கு. அவர் உங்களுக்கு கொடுக்கபோற ட்ரீட்மென்ட் தான் அவருக்கு நான் கொடுக்கப் போற மருந்தும் குணம் செய்யற வழியும்.
    பலே டாக்டர். நோயாளிகிட்டேயே மருந்தும் கண்டுபிடிச்சி அவருக்கே கொடுக்கப் போறீங்களா. பலே என்றான் மோகன்.
    அது மட்டுமில்ல மோகன். உங்களுடைய வியாதிக்கு குணமாகிற வழி சொல்லும் போதே அவருக்கு குணமாயிடலாம். ஏன்னா இப்ப நமக்கு தேவை அவருடைய செல்ஃப் ரியலைசேஷன் தான். அவரே உணர்ந்தா தான் அவருடைய மாய வலையிலேர்ந்து வெளியே வரமுடியும் என்றார் சற்றே களைப்புடன்.

    கேட்க நல்லா இருக்கு டாக்டர். இது மாதிரி நடந்துட்டா அற்புதமாக இருக்கும். அப்புறம் உங்க கிட்ட வந்து நான் இதை கதையா எழுதறக்கு அனுமதி கேட்பேன்.

    அவர் ஏதோ சொல்ல முயன்றபோது அவருடையை மனைவி உங்கள பார்க்க போலீஸ்காரங்க வந்திருக்காங்க என்று படபடப்புடன் சொன்னாள்.

    மறுபடியும் போலீஸா, கதிர் இங்கே இருக்கும்போது வேறு என்ன பிரச்சனையாக இருக்கும் என்று யோசித்தவாறே எழுந்தார். மோகனும் பின் தொடர்ந்தான்.

    சென்ற முறை வக்கீலாக நினைத்து நடந்த கூத்தில் மாட்டிக் கொண்ட காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் இன்னொருவருடன் வந்திருந்தார்.

    வணக்கம் சார். வாங்க. என்ன வேணும் என்றார் ரத்தீஸன்.

    வணக்கம் சார். கதிரவன் விஷயமா கொஞ்சம் பேசனும் என்றார் காவல் அதிகாரி சற்றே தயக்கத்துடன்.

    மோகன் தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாக நான் கிளம்பறேன் டாக்டர். அப்புறமாக பார்க்கலாம் என்றவாறே நடக்க முயன்றான்.

    காவல் அதிகாரியுடன் வந்திருந்தவர் நீங்களும் இருங்க மோகன் உங்க இரண்டு பேர்கிட்டேயும் தான் பேசனும் என்றார் பீடிகையுடன்.

    ரத்தீஸனும் மோகனும் குழப்பத்தில் சொல்லுங்க என்று சொல்லி நாற்காலியில் அமர்ந்தனர்.

    பிறகு அவர்கள் பேசிய விஷயம் இவர்கள் இருவரையும் வேர்க்க செய்திருந்தது.

    தொடரும்...
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    12
    அவர்கள் இருவரும் பல மணி நேரம் பேசினர். நடுவில் ரதீஸனின் மனைவி இருமுறை வந்து காபி சாப்டறீங்களா என்று கேட்க தண்ணி மட்டும் கொடுத்துட்டு உள்ளே போ என்ற காட்டமாக கூறியிருந்தார். அவருடைய மனைவியும் என்ன பிரச்சனையோ என்று குழப்பத்துடன் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.

    அவர்கள் சென்ற பிறகு இருவரும் அமைதியாக இருந்தனர்.

    என்ன சார் ஏதோ உங்களுக்கு உதவி பண்ண வந்து பெரிய பிரச்சனையில் மாட்டிக் கிட்டேன என்றான் மோகன்.

    இருங்க மோகன் பதட்டப்படாதீங்க. இது மாதிரியெல்லாம் வரும்னு யாரு ஏதிர் பார்த்தது. நம்ம இரண்டு பேருக்கும் நல்ல புத்தி சுவாதீனம் இருக்கும்போதே நாம இந்த பிரச்சனையை பார்த்து கலங்கறோமே, பாவம் கதிர் அவரு இருக்கும் நிலையில் எப்படி இதை சமாளிப்பாரு? சொல்லுங்க.

    மன்னிக்கனும் சார். நான் என்னோட வேலை பளுவில் ஏதோ பிரச்சனையில் மாட்டிக்க வேண்டாம்னு சுயநலமா பேசிட்டேன். நீங்க சொல்லறது சரிதான். கதிருக்கு உதவி பண்ணனும். ஆனா இந்த கட்சிக்காரர் அவங்க ஆளுங்க செஞ்ச கொலையை கதிரை ஏத்துக் வைக்கனும்னு சொல்றாரே. அதவும் அவங்க கொலை பண்ணது ஒரு எதிர் கட்சி எம்எல்ஏவை. இது பெரிய விவகாரம் சார். எத்தனை நாள் நாம வேலை வெட்டியில்லாம சுத்தனுமோ என்றான் பதட்டத்துடன்.

    கொஞ்சம் அமைதியா இருங்க மோகன். நாம தான் ஒரு நாள் அவகாசம் கேட்டிருக்கோமே. ஏதாவது யோசிக்கலாம் என்றவாறே ஒரு எண்ணை தொலைபேசியில் தட்டி பேசத்துவங்கினார்.

    வணக்கம் சுரேஷ். நான் ரதீஸன் பேசறேன். ஒரு சின்ன பிரச்சனை. வர முடியுமா. லேட்டாயிடுத்தே பரவாயில்லையா. மன்னிக்கனும். ரொம்ப நன்றி. வாங்க. காத்திருக்கோம் என்று சொல்லி வைத்தார்.

    ஐயோ இன்னும் எத்தனை நேரம் இங்கு இருக்க வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டு மோகன் யோசனையில் ஆழ்ந்தான். அவன் கணினி தொழில் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல அவனில் இருந்த எழுத்தாளன் இன்னும் ஆழமாக போய் பார்க்கலாமே என்று தூண்டிக் கொண்டிருந்தது. கதையில் மர்மங்களை போட்டுத் தாக்கலாம். நிஜத்தில் சந்திக்க எத்தனை துணிவு வேண்டும் என்று உணர்ந்துக் கொண்டிருந்தான்.

    சுரேஷ் – சங்க கால வழக்கறிஞர்களை போல இல்லாமல் இளைமையாக சுறுசுறுப்பாக தென்பட்டான். வெள்ளை நிற போலோ மேல் சட்டை. நீல நிற ஜீன்ஸ் ஒரு மாற்றமாக வெளுத்துப் போகாமல் இருந்தது. காபி பொடி நிறத்தில் ஒரு காலணி. இடது கையில் ஒரு காஸியோ ஜீஷாக் கடிகாரம். அடே பார்த்தவுடன் நான் எழுதும் கதைகளில் வரும் ரமேஷ் போல இருக்கிறானே என்று நினைத்துக் கொண்டான் மோகன்.

    ரத்தீஸன் சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டான். பேசுவதை பொறுமையாக கேட்கும் மனிதர்களும் இன்னும் இருக்கின்றார்களா என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டான் மோகன்.

    ஸோ நீங்க முடியாதுன்னு சொல்லிப் பார்த்திட்டீங்க ஆனா அவங்க விடறதா இல்லை. அப்படித்தானே.

    ஆம். என்றார் ரத்தீஸன்.

    ஜென்டிலா மிரட்டிட்டும் போயிருக்காங்க. இல்லையா

    ஆம்.

    இன்ஸ்பெக்டரும் துணை போறாரு அப்படித்தானே.

    ஆம்.

    சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு தெளிவாக பேசினான் சுரேஷ். பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்துவிடும் அளவிற்கு அவனுடைய பேச்சு மற்றும் பாவனைகள்.

    அவங்க மோகனை ஒரு கதை எழுத சொல்றாங்க. அதுல அந்த எம்எல்ஏ மேலே கதிருக்கு கோபம் வர மாதிரி செய்யனும். அவேரே அந்த எம்எல்ஏவை கொலை பண்ணதா ஒத்துக்கனும். அப்படித்தானே.

    ஆமாம்.

    அப்புறம் கேஸ் கோர்டுக்கு போகும். அங்கே அவரை மனநிலை சரியில்லாதவன்னு சொல்லி விடுவிச்சிடலாம் அப்படின்னு உறுதியளிக்கறாங்க இல்லையா.

    ஆமாம்.

    இப்ப நமக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்னு இந்த கேஸ் கோர்டுக்கு போயி அவங்க நினைக்கிறமாதிரி முடிவு வந்துட்டா கதிர் நிரந்தரமா கொலையாளின்ற பட்டத்தோட அப்புறம் பைத்தியக்காரன்ற பட்டத்தோடவும் வாழ வேண்டியிருக்கும். அவரை இந்த இக்கட்டான நிலையிலிருந்து காப்பாத்தனும்.
    இரண்டாவது நிஜமான குற்றாவாளி தப்பிக்காம பார்த்துக்கனும். இல்லையா.

    ரத்தீஸன் சற்றே ஆசுவாசத்துடன் இல்லை சுரேஷ். முதல் பாயிண்ட் சரி. இரண்டாவது நிஜமான குற்றாவளியை பத்தி எங்களுக்கு கவலை இல்லை. அது அரசியல் விவகாரம். அந்த சகதிக்குள்ள மாட்டிக்க நாங்க விரும்பலை. இரண்டாவது முக்கியமான விஷயம் இந்த அரசியல்வாதிங்க கிட்டேர்ந்து எங்க இரண்டு பேரை காப்பாத்தனும். ஏன்னா எனக்கும் பிராக்டீஸ் இருக்கு குடும்பம் இருக்கு. மோகனும் பிஸியான ஆள். அவருக்கும் குடும்பம் இருக்கு. எங்க குடும்பத்தினரும் தொழிலும் பாதிக்காம இருக்கனும். அவங்களுக்கு உதவனாலும் பிரச்சனை உதவாட்டாலும் பிரச்சனை.

    அப்ப அவங்களுக்கு உதவுங்க என்றான் சகஜமாக.

    என்ன என்று இருவரும் கண்களை விரித்துக் கேட்டனர்.

    தொடரும்....
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by shreyan View Post
    மோகன் சார்,

    முதலில் இந்த கதையை படித்ததும் எனக்கு தோன்றியது, நல்ல வேளை இந்த கதையை இப்போதுதான் படித்தோம். இந்த கதை வெளிவந்த போதே படிக்க ஆரம்பித்திருந்தால் இவ்வளவு நல்ல கதையின் அடுத்த பாகத்திற்காக இந்த 4 வருடங்கள் காத்திருக்கவேண்டியதிருக்குமே!

    ஆனால் அதே நேரத்தில் மனதிற்குள் தோன்றிய எண்ணம் இப்போதாவது முழுவதும் வருமா? இல்லை இதுபோல் இன்னும் ரெண்டு மூணு பகுதிகள் எழுதிவிட்டு இன்னும் சில வருடங்கள் காத்திருக்கவைத்துவிடுவாரோ?!

    எது எப்படியோ நல்ல கதை என்பதால் எத்தனை ஆண்டுகளும் காத்திருக்க தயார்.

    அது சரி சார், அந்த பெரியவர் யார்? அவர் ஏன் கதிரை ஆற்றில் தள்ளி தானும் குதித்தார்? இது உண்மையில் நடக்கிறதா? அல்லது டாக்டரின் கதையில் வருகிறதா? தெரிந்துகொள்ள ஆவலாய் காத்துக்கொண்டு இருக்கிறேன்...
    நன்றி ஸ்ரேயன். மன்றத்தில் உங்கள் வரவு நல்வரவு ஆகுக. அவசியம் இம்முறை நடக்காது என்று நம்புகிறேன். விரைவில் முழுவதும் பதிக்கப்படும். ஆதரவுக்கு நன்றி.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    13
    டாக்டர் முதல்ல நீங்க கயல்விழி கிட்டே விபரமா பேசி கதிரை எந்தெந்த ஆஸ்பத்திரிக்கெல்லாம் கூட்டிக் கிட்டு போனாங்கன்னு பட்டியல் தயார் பண்ணுங்க. அவரோட போன கம்பெனியில் எல்லாரையும் சந்திச்சு விபரங்கள் சேகரிங்க. அவங்க வீட்டு பக்கத்துவீடு எதிர்த்த வீடு இப்படி எல்லாரையும் சந்திச்சு அவரைப்பத்தின கருத்துக்களை சேகரிங்க. நான் அரசியல்வாதி பக்கத்து கதை, கொலை விபரங்கள், போலீஸ் இன்வால்மென்ட் இப்படி கோணத்துல விபரங்களை சேகரிக்கிறேன். ஆமாம் போன தடவை அவரு போலீஸ்ல மாட்டும்போது கேஸ் ஏதாவது புக் ஆச்சா?

    அவரு மேல எந்த கேஸூம் புக் ஆயிருக்காது. அதுக்கு முன்னாடியே நான் போயிட்டேன்.
    இந்த வாட்டி பொய் கேஸ் தான் போடனும் அவங்க. அப்படி ஆயிருந்தா அதை பொய் கேஸூன்னு நிருபிச்சிடலாம். வேணும்னா இன்னும் ரெண்டு மூணு பொய் கேஸூகளை அந்த போலீஸ் ஸ்டேஷன்லே போட வச்சிட்டு இப்படித்தான் பொய் கேஸூகள் உருவாக்கறாங்கன்னு உடைச்சிடலாம்.
    சுரேஷ் அவரு பைத்தியமாக இருக்காருன்னு நீதபதி நினைச்சா அவரு கொலை கேஸூலேர்ந்து தப்பிக்கவாவது வழி இருக்கு. ஒரு வேளை அவர் நல்ல மனநிலையிலதான் இருக்காருன்னு அவங்க நம்பினா அவருக்கு ஆபத்து இல்லையா. ஏன்னா இந்த அரசாங்க தரப்பு வக்கீலை நம்ப முடியாது. கோர்ட்டுக்கு போன பிறகு கொலை நிரூபணம் ஆன பிறகு கதிரை காப்பாத்தாமா விட்டுட்டா?

    இல்லை டாக்டர். இதை அவங்க வழியில் போய் பிடிக்கறதுங்கறது புலி வால பிடிச்சிகிட்டு போற மாதிரி. ரொம்ப டேஞ்சரஸ். நாம கேஸை உடைக்கறது மட்டுமில்லாம நிஜ குற்றவாளியையும் பிடிச்சுக் கொடுக்கனும். ஆனா பயப்படாதீங்க நாம எது செஞ்சாலும் நல்லா யோசிச்சுத்தான் செய்வோம். உங்க இரண்டு பேருக்கும் எந்த பாதிப்பும் வராது. அரசியல் பிரச்சனையில் நானும் மாட்டிக்க விரும்பலை.

    அப்ப அவங்களுக்கு உதவுங்கன்னு நீங்க சொன்னது?

    முதல்ல ஒரு அநாமத்து பேர்ல உங்களுக்கு ஒரு ப்ரீபெய்ட் சிம் வாங்கித் தரேன். அது மூலமா அவங்க கிட்ட பேசுங்க. கட்டாயம் அவங்க ரிக்கார்ட் செய்வாங்க. நீங்களும் ரிக்கார்ட் செய்யுங்க. அவங்க கிட்டே அவங்க எதிர்பார்த்த மாதிரியே அவங்களுக்கு ஒத்துழைப்பு தர்றதா சொல்லுங்க. மோகன் நீங்க அவங்க எதிர்பார்த்த மாதிரியே கதை எழுதுங்க. கையால வேண்டாம். கம்ப்யூட்டரில் எழுதுங்க. இமெயில்ல யாருக்கும் அனுப்ப வேண்டாம். பிரிண்ட் எடுத்துக் கொடுங்க. பிரிண்ட் வீட்டுப் பிரிண்டர்ல வேண்டாம். வெளியேர்ந்து எடுங்க. நீங்க போகாதீங்க. எழுதி முடிச்சோன்னே லாப்டாப்பில் சேஃப் ஏரேஸ் பண்ணிடுங்க. நான் சொல்றமாதிரி எழுதுங்க. ஆனா அவங்க சொன்ன மாதிரி எழுதின மாதிரி இருக்கனும். நான் உங்க இரண்டு பேரையும் சந்திக்கப் போறது இங்கே இல்லை. ஒகே?

    அவன் பேசியதை எல்லாம் கண் இமைக்காமல் இருவரும் கேட்டனர். ஒரு மனோதத்துவ நிபுணர். ஒரு கணிணி நிபுணர். இருவரும் சட்டத்திற்கு முன் நெடுஞ்சான்கிடையாக விழுந்திருந்தார்கள். ஆனாலும் இருவரின் ஆர்வத்திற்கு குறைவில்லை. அப்பாவி கதிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் இருவரும் ஒற்றுமையாக இருந்தார்கள். கதையாசிரியருக்கு பல கருக்கள் கிடைத்துக் கொண்டே வந்தன. கதை தொழிற்சாலை 24 மணி நேரம் இயங்கிக் கொண்டே இருந்தது.

    தொடரும்....
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    14
    கதிர் ஏதோ தொகுதி பிரச்சனையா அவருக்கு மனு கொடுக்க வந்திருக்காரு. சட்ட மன்ற உறுப்பினர் சரியா பேசலை. அடுத்த வாட்டி உனக்கு ஓட்டு போடமாட்டேன்னு கதிர் சொல்லியிருக்காரு. உன்னால ஆனதை பாத்துக்கோன்னு எம்எல்ஏ சொல்லிட்டாரு. அப்பலேர்ந்து அவரை பழி வாங்க வாய்ப்பு தேடி அலைஞ்சிருக்காரு. அவரு காலையில வாக்கிங் போகும்போது அரிவாள் எடுத்து வெட்டிட்டாரு. அந்த நேரத்துல அவரு படிச்சிக்கிட்டு இருந்த புத்தகம் ஒரு அரசியல்வாதியை பழி வாங்கற புத்தகம் மாதிரி இருக்கனும். சரியா என்றார் அந்த அரசியல்வாதியின் கையாள்.

    என்ன சார் சொல்றீங்க. இப்ப நான் கதை எழுதி தரனும்னு சொல்றீங்க. கொலை நடந்த சமயம் அவர் ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு சொல்றீங்க. நானே இணையத்தில் வெளியிடாத புத்தகத்தை அவரு படிச்சாருன்னும் எப்படி சார் நிரூப்பிக்க போறீங்க.

    மோகன். நீங்க இப்ப அவருக்கு எழுதி தர வேண்டிய கதை அவரு கோர்டுல கொலை செஞ்சேன்னு ஒத்துக் வேண்டிய கதை. எங்க வக்கீல் சொல்ல போறது அவர் கொலை செஞ்ச நேரத்துல வேறு ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு. அது தேடனா கிடைச்சிடும். எல்லா மர்ம நாவல்லை கொலை கொள்ளை தானே என்றார் என்னமோ அவர் அரசியலில் எல்லாம் சுத்த சைவம் மாதிரி.

    ரத்தீஸன் இடைமறித்தார். சார் கதிர் கொலை பண்ணும்போது அவர் அந்த புத்தகத்தின் பிடியில் இருந்தார்னு சொல்றிங்க. சரி. ஆனா அந்த தொகுதி பிரச்சனையில் அவரு எம்எல்ஏ கிட்ட சண்டை போட்டது கதிர் என்கிற மனுஷனா இருக்கும் போது. இது இடிக்கிறதே. அவரு சண்டையும் கதையில வர ஒரு பாத்திரமா செய்யனும். கொலையும் அந்த பாத்திரமாகவே செய்யனும். ஒன்னும் முழு சுவாதீனத்திலும் இன்னொன்னு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் செஞ்சதா பேசினா கேஸ் உடைஞ்சிடும்.

    என்ன சொல்ல வரீங்க டாக்டர் என்றார் அரசியல்வாதி.

    சார் கதிரால உங்களுக்கு பிரயோசனம் இல்லை. நீங்க வேற வழியை பாருங்க.

    அதை விடுங்க டாக்டர். நீங்க சொல்ல வந்த விஷயத்தை முதல்ல சொல்லுங்க.

    சார். கதிர் சாதாரணமா இருக்கும் போது எம்எல்ஏ கிட்டே சண்டை போட்டு அதே கோபத்துல அவரை கொன்னுட்டாரு. இப்படி போச்சின்னா உங்க ஆளு கொலைலேர்ந்து தப்பிச்சிடுவாரு. கதிரு மாட்டிப்பாரு.

    மாட்டிகிட்டு போகட்டுமே. அவரு ஒரு பைத்தியம். அவரால யாருக்கு பிரயோசனம். அவங்க குடும்பத்துக்கு வேணா ஒரு பெரிய தொகை கொடுக்கறோம்.

    அது முடியாது சார். அவர் என்னோட பேஷண்ட். அவருக்கு குணப்படத்த முடியாத வியாதி ஒன்னும் இல்லை. அவரு சீக்கிரம் குணமாகி பழைய படி ஆராய்ச்சியில் இறங்குவாரு. இது உறுதி. ஒருத்தரோட வாழ்கையை அழிக்க நான் ஒப்புக்க மாட்டேன்.

    சரி விடுங்க. பைத்தியம் சொல்லி கேஸூலேர்ந்து காப்பாத்திட்டா?

    அதுக்கு நீங்க சொல்ற வழி சரியாகாது. அவரு புத்தகம் படிச்சதால இன்ஃபூளுயன்ஸ் ஆகி எம்எல்ஏவை கொலை பண்ணதா இருந்தா மட்டுமே அவரை விடுவிக்கலாம்.

    சரி அப்படியே பண்ணிடுங்க. அவருக்கு முன் விரோதம் இருந்த மாதிரி சொன்னது வேண்டாம். அவரு ஏதோ ஒரு புத்தகத்தை படிச்சிருக்காரு. அதுல இருந்த எம்எல்ஏவோட பெயரும் இப்ப கொலையான ஆளோடே பெயரும் ஒரே மாதிரி இருக்கட்டும். அவரு மனநிலை சரியில்லாம கொலை பண்ணதா இருக்கட்டும். கொஞ்ச நாள் ஆஸ்பத்திரியில் இருந்துட்டு நானே அவரை ரீலீஸ் பண்ணித் தரேன் என்றார் முடிவாக.

    இப்போது மோகன் – அதுல ஒரு பிரச்சனை சார் என்றான்.

    என்ன சார் இப்போ பிரச்சனை என்றார் அ.வா. கடுப்புடன்.

    கோர்ட்ல நாம சொல்ல போற கதையில் வர புத்தகம் ஏற்கனே பிரசிரிச்ச புத்தகமா இருக்கனும். அதை படிச்சி தான் அவரு கொலை பண்ணியிருக்காருன்னா அதை இனிமே எழுதின புக்கா எப்படி காண்பிக்கிறது. அப்படியே நான் அந்த கதையும் எழுதினா பேக் டேட்டடா இணையத்துல வெளியிடனும். இப்ப இருக்கற தொழில்நுட்பத்துல என்னிக்கி அப்லோட் பண்ணினேன்னு சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்க. அதுமட்டமல்ல கதிரு அன்னிக்கு இணையத்திலேர்ந்து எடுத்தாரு அப்படிங்கறதுக்கும் ஆதாரம் உருவாக்க வேண்டியிருக்கும். அதெல்லாம் பிரச்சனை. நீங்க முதல்ல அது மாதிரி ஏற்கனவே பப்ளீஷ் ஆன ஒரு புக்கை தேடுங்க, நான் கோர்ட் ஸீன் எழுத ஆரம்பிக்கறேன். நாங்க வரோம்.

    ஒரு நிமிஷம் என்று அவர்கள் சொன்னதை காதில் கேட்காத மாதிரி நகர்ந்தார்கள் இருவரும்.

    தொடரும்...
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    15
    உங்கள் பெயர்.

    கதிரவன். கதிர்ன்னு கூப்பிடுவாங்க.

    என்ன படிச்சிருக்கீங்க.

    எம்எஸ்சி மைக்ரேயாலஜி.

    எங்க வேலை பாக்கறீங்க.

    இப்போ வேலையில்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன்.

    உங்களுக்கு எம்எல்ஏ .......... தெரியுமா?

    ஒரு தடவை பாத்திருக்கேன்.

    அவரை நீங்க போன மாசம் 20ம் தேதி அரிவாளால வெட்டினீங்களா

    ஆமாம்.

    எதுக்காக வெட்டினீங்க.

    இந்த மாதிரி அரசியல்வாதியால ஒரு பிரயோசனமும் இல்லை. சொந்த தொகுதிக்கு கூட ஒரு நல்ல காரியம் செய்யலை. இவங்களையெல்லாம் நடு ரோட்ல வெட்டனும்.

    உங்களுக்கு மனநிலை சரியில்லையா

    ஏன் சார் என்னை பாத்தா மனநிலையில்லை சரியில்லாத மாதிரியா இருக்கு.

    நீங்க ஏன் உங்க ஆபீஸ் பொருட்களை போட்டு உடைச்சீங்க.

    சம்பள உயர்வு கேட்டிருந்தேன். கொடுக்கலை. அதனால கோபிசிகிட்டு உடைச்சிட்டேன்.

    உங்க மனநிலை சரியில்லாதற்காக நீங்க ஏதாவது மருத்துவம் பாத்தீங்களா.

    சார் எனக்கு மனநிலை சரியாதான் இருக்கு. நான் எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை. வேணும் என் குடும்பத்தாரை கேட்டுப் பாருங்க. என் காதலி கயல்விழியை கேட்டுப்பாருங்க.

    சரி. சரி. இந்த கொலைக்கு உங்களுக்கு மரண தண்டனை கிடைக்கலாம் இல்லையா.

    ஆமாம் சார்.

    அப்ப குற்றத்தை ஒப்புக்கறீங்களா.

    இத்தனை நேரம் அதைத்தானே சார் செஞ்சிகிட்டு இருக்கேன்.

    நீதிபதி நடுவில் குறுக்கிட்டு நீங்க அநாவசியமா ஏன் நேரத்தை வீண் பண்றீங்க. அவரே குற்றத்தை ஒத்துகிட்டாரு. நீங்க போலீஸ் தரப்பு விபரங்களை போஸ்ட் மார்டம் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம் FIR எல்லாம் விபரமா கொடுங்க. யாரும் கண்டஸ்ட் பண்ணாத கேஸூக்கு ஏன் நேரத்தை வீணடிக்கிறோம் என்றார்.

    இல்லை. அவருக்கு மனநிலை சரியில்லை என்று சொல்லி அரசாங்க வக்கீல் இழுத்தார்.

    என்ன சொல்றீங்க. அவருக்கு மனநிலை சரியில்லைன்னு சொல்லி எக்ஸம்ஷன் கேட்க போறீங்களா. அவருக்கு மனநிலை சரியில்லைன்னு ஏதாவது எவிடன்ஸ் இருக்கா? அதை செய்யுங்க. கேஸை தள்ளி வைக்கிறேன்.

    தொடரும்...
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  8. #44
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வெகுநாட்களுக்குப் பின்னர் மன்ற வருகை புரிந்து தொடர்கதையை புது உத்வேகத்துடன் தொடர்வதற்கு மிக்க நன்றி தங்களுக்கு. கதையை முழுவதும் வாசிக்க இன்னும் நேரம் எனக்குத் தோதாக அமையவில்லை. விரைவில் வாசித்துக் கருத்திடுவேன். ஊக்கமுடன் தொடர்வதற்குப் பாராட்டுகள்.

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by கீதம் View Post
    வெகுநாட்களுக்குப் பின்னர் மன்ற வருகை புரிந்து தொடர்கதையை புது உத்வேகத்துடன் தொடர்வதற்கு மிக்க நன்றி தங்களுக்கு. கதையை முழுவதும் வாசிக்க இன்னும் நேரம் எனக்குத் தோதாக அமையவில்லை. விரைவில் வாசித்துக் கருத்திடுவேன். ஊக்கமுடன் தொடர்வதற்குப் பாராட்டுகள்.
    மிக்க நன்றி கீதம்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  10. #46
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    16
    என்ன மோகன் நாவல் எப்படி வந்துகிட்டு இருக்கு?

    ஹாஹா என்ன நாவல் டாக்டர். இதுவா?

    ஆமாம். இதுவும் நீங்க எழுதற கதை தானே. என்ன பெயர் வைச்சிருக்கீங்க.
    ஒரே ஒரு வாசகன். எடிட்டர்ஸ் பல பேர். இதுக்கு என்ன பெயர் வைக்கறது. இன்னும் பெயர் வைக்கவில்லை அப்படின்னு வேணா பெயர் வைக்கலாம்.

    ஹா ஹா. இன்னும் பெயர் வைக்கவில்லை. இதுவே புதுமையான டைட்டில் தான். கொடுங்க படிக்கலாம்.

    ஒரு நிமிடம் அந்த நீதி மன்ற காட்சியை படித்து பார்த்தார். ம்ம். இப்படியே போனா கதையில வர கதிரும் நிஜ கதிரும் இணைஞ்சிருவாங்க. அவரு மன நிலை திடமானவன்னு நீதிபதி நம்பினாருன்னா கொலையும் அவரு தான் செஞ்சாருன்னு ஆயிடுமே. அப்புறம் அந்த அரசியல்வாதி வேற படிச்சி இதை அப்ரூவ் செய்யனுமே என்றார் குழப்பத்துடன்.

    அப்போது தான் உள்ளே நுழைந்த சுரேஷ் என்னை மிஸ் பண்றீங்களா என்று கேட்டான் ஆர்வத்துடன். மோகன் டாக்டரிடமிருந்த தன்னுடைய கதை தாட்களை எடுத்து அவனிடம் நீட்டினான்.

    தானும் அதை ஆமோதித்தவாறே, டாக்டர் சொல்றது சரிதான். அப்புறம் இவரை மனநிலை சரியில்லாதவன்னு நிரூபிக்க நான் உள்ளே நுழைய வேண்டி வரும்.

    சரி அப்படியா இந்த அடுத்த அத்தியாத்தை பாருங்க என்று மேலும் சில காகிதங்களை நீட்டினான். ஒரு பிரதியானதால் இருவரும் சேர்ந்து படிக்கத் துவங்கினர்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    17

    நீதிபதி வந்து அமர்ந்தவுடன் அரசாங்க தரப்பு வக்கீலை பார்த்து நீங்க அவரை மனநிலை சரியில்லாதவர் அப்படின்னு சொன்னீங்க போன ஸிட்டிங்கல. அங்கேர்ந்து கண்டின்யூ பண்ணுங்க என்றார்.

    அரசாங்க தரப்பு வக்கீல் தொடர்ந்து பேசினார்.

    கதிர் நீங்க நல்ல மன நிலையில் தான் இருக்கீங்கன்னு நீங்களும் இந்த நீதி மன்றமும் ஒப்புக்கிட்டா நீங்க பண்ண கொலைக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்கும். இல்லையா

    ஆமாம்.

    எனக்கு வேலை சுலபமாயிடும். இத்தோட என் வாதத்தையும் நான் முடிச்சிக்கலாம். ஆனா நீங்க மன நிலை திடமில்லாதவர்னு எனக்கு தெரியும். உங்களுக்கு உதவி செய்யத் தான் நான் இருக்கேன். ஒன்றும் அறியாமல் நீங்க செய்த கொலைக்கு உங்களுக்கு தண்டனை வாங்கித் தரதுல எனக்கு விருப்பம் இல்லை. அதனால நான் கேட்கற கேள்விகளுக்கு நீங்க சரியா பதில் சொல்லுங்க. அதுக்கப்புறமும் நீங்க உங்க நிலையில் திடமா இருந்தீங்கன்னா நாமை வழக்கை முடிச்சிடலாம். சரியா

    சரி சார். கேளுங்க.

    உங்க பெயர் நிஜமாகவே கதிரா அல்லது நீங்க சமீபத்துல படிச்ச கதையில் வந்த கதாபாத்திரமா.

    நீங்க என்ன கேள்வி கேட்கறீங்க என்று நீதிபதி கேட்டார்.

    லார்ட்ஷிப் குற்றம் சாட்டப்பட்டுள்ள கதிர் மனநிலை சரியில்லாதவர். அவர் சமீபத்தில் இந்த நான்கு வைத்தியர்களிடம் தன் பிரச்சனைக்காக வைத்தியம் பார்த்துள்ளார். இவர் தான் படிக்கும் கதைகளில் வரும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவதால் பல தவறுகள் அவர் அறியாமலேயே நடந்துள்ளன. அதனால் இவருடைய மன நிலையை கருதி இவரை விடுதலை செய்து இவருக்கு முறையான மருத்துவம் கிடைக்க வழி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவரு சென்று வந்த மருத்துவமனைகளும் அவர் உட்கொண்ட மருந்து விபரங்களும் இதோ.
    இப்படி கொலை செய்யறவங்க எல்லாருமே மனநிலை சரியில்லாதவங்கன்னு வாதாடினா கோர்ட் எதுக்கு நீதி மன்றம் எதுக்கு என்று கேட்டார் நீதிபதி காட்டமாக. வேறு ஏதாவது ஆதாரம் இருக்கா?

    இவர் சமீபத்தில் சென்று வந்த மனோதத்துவ நிபுணர் ரதீஸனை சாட்சியாக அழைக்கிறேன் என்றார் அ.சா.த வழக்கறிஞர்.

    டாக்டர் ரதீஸன்.

    ஆமாம்.

    இவருடைய நிலைமையை விளக்க முடியுமா.

    முடியும் சார் என்று சொல்லி குறைந்த வார்த்தைகளில் கதிரின் நிலையை விளக்கினார்.

    அதுக்கு ஆதாரம் இருக்கா.

    இருக்கு சார். அவரு வக்கீலா நினைச்சு போலீஸ்ல போனது. அந்த விபரங்கள் இதோ. அவரு என் கிட்ட வந்த செஸஷன்ஸ் விபரம். ஆடியோ பதிவுகள் என்று அனைத்து விபரங்களை தந்தார்.

    நன்றி டாக்டர். லார்ட்ஷிப் உங்கள் பார்வைக்கு என்று அனைத்து விபரங்களையும் நீதிபதியிடம் சேர்த்தார். அவர பொறுமையாக எல்லாவற்றையும் சோதித்துவிட்டு, சரி தீர்ப்பு வர திங்கட்கிழமை என்று ஒத்திவைத்தார்.

    குற்றவாளி கொலை செய்தது காவல்துறை சரியான ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. கதிரவனுக்காக வாதாட வழக்கறிஞர்கள் இல்லாவிட்டாலும் அரசாங்க தரப்பே சிரத்தையாக அவரை பற்றி விபரங்களை சேகரித்ததற்கு எனது பாராட்டுக்கள். கொலையாளி மாட்டிவிட்டான் என்று வழக்கை மூடித்தள்ளாமல் மனித நேயத்துடன் இதை அணுகியிருக்கிறார்கள். கதிரவன் தான் படிக்கும் கதாபாத்திரமாக மாறிவிடுகிறான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது. ஆகையால் அவருக்கு தக்க சிகிச்சை அளிக்க உத்தரவு இடுகிறேன். ஆனால் இதுபோன்ற ஆபத்தான வியாதியுள்ளவரை சுகந்திரமாக நடமாடவிட்டதற்காக அவருடைய குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கிறேன். மேலும் உயிர் இழந்த குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க வேண்டிய கட்டாயத்திலும் அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் எச்சரிக்கிறேன். கதிரவனை பாதுகாப்பாக மருத்துவமனையில் சேர்த்து மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு ஈடுகிறேன் என்று தீர்ப்பை படித்து முடித்து கையெழுத்திட்டார்.

    தொடரும்...
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  12. #48
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    18

    ஐயோ இந்த போக்கில் பார்த்தா கொலையிலேர்ந்து கதிர் தப்பிச்சாலும் மனநோய் மருத்துவமனைக்கு நிரந்தர விருந்தாளி ஆகிடுவாரு போலிருக்கே என்று வருந்தினார் ரதீஸன்.

    வேற வழியில்லையா என்று கேட்டான் மோகன். இருந்தா சொல்லுங்க எனக்கு நிஜ குற்றவாளி தப்பிக்கறதுல ஆர்வம் இல்லை. அதே சமயம் கதிரவன் நிரந்தர நோயாளியாக மாறுவதற்கும் விடக்கூடாது என்றான் உறுதியாக.

    அடுத்த நாள் அந்த காபி கபே டேயில் ஒரு ஓரமான இடத்தில் மூவரும் அமர்ந்தனர்.

    சொல்லுங்க டாக்டர்.

    கதிர் எந்த ஆஸ்பத்திரிக்கெல்லாம் போனாரோ அவரு என்கிட்ட வந்தது உட்பட அந்த பட்டியல் தயார்.

    பலே. ரொம்ப ஃபாஸ்ட்.

    சரி டாக்டர். ஒன்னு சொல்லுங்க மோகன் எழுதி தர கதைப்படி அவரு தானே சட்ட மன்ற உறுப்பினரை கொலை செய்ததா ஏத்துக்கறாரு. அவருக்கு மனநிலை கோளாருன்னு நிரூபிச்சு ஆஸ்பத்திரியில் சேர்க்க சொல்லி ஜட்ஜ் உத்தவிடராரு. ஒரிஜனல் கொலையாளி தப்பிச்சிடரான். இவரும் மரண தண்டனையிலேர்ந்து தப்பிச்சிடராரு. இது தானே அவங்க திட்டம்.

    ஆமாம்.

    உங்க பேஷண்ட எவ்வளவு புத்திசாலி. நான் பாக்கனுமே.

    பார்க்கலாம் சுரேஷ் நான் ஏற்பாடு பண்றேன். எவ்வளவுன்னா?

    அவரு கதையில் வர மாதிரியே மாறிடராரா.

    ஆமாம் என்றான் மோகன் நீண்ட நேர அமைதிக்கு பின்பு.

    இல்லை என்றார் ரதீஸன்.

    என்ன என்று ஆச்சர்யமாக கேட்டான் மோகன். அவனிடம் சொன்னது அப்படித்தானே. இதென்ன புதுக் கதை. நீங்க என்கிட்ட சொல்லாம விட்டது ஏதாவது இருக்கா டாக்டர் என்று நம்பிக்கை இழந்தவாறே.

    இல்லை மோகன். உங்க கிட்ட சுரேஷ்கிட்ட சொன்னதெல்லாம் உண்மை. ஆனால் அதில் ஒரு அநாலிஸிஸ் இருக்கு. நல்லா ஆழ்ந்து பார்த்தோம்னா கதிர் ஒரு ஜீனியஸ். அவரு எக்கச்சக்கமா புத்தகங்களை படிச்சிருக்காரு. அதில் படிச்ச விஷயங்களை ஆழமா உள்வாங்கியிருக்காரு. அப்படி இல்லைன்னா நீ ஒரு வக்கீல் அப்படின்னு புக் சொன்னதை வைச்சிகிட்டு அவரு கறுப்பு அங்கி வேணா போட்டுத் திரியலாம். ஆனா சட்ட நுணுக்கங்கள் எப்படி தெரியும் அவருக்கு. நீங்க போலீஸ்ன்னு நான் சொல்றேன். அட்லீஸ்ட் எப் ஐ ஆர்ன்னா என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்க வேண்டாமா.

    அப்படின்னா?

    அப்படின்னா கதையோட இம்பாக்ட்-தாக்கம் அவரு மேலே போட்ட சட்டை மாதிரி. அவரோட அறிவு அந்த கதாபாத்திரமா அவரை மாற வைக்குது. நாளைக்கு அவரை ஒரு மீனவனா சித்தரிச்சா அவரு மீனவனா மாறலாம். ஆனால் கடல்ல தூக்கிப்போட்டா நீச்சல் தெரியாததால அவரு செத்துடுவாரு.

    ஓஹோ. அப்படின்னா ஹி கேன் ரீட் பிட்வீன் த லைன்ஸ். கதையை படிச்சாலும் அதன் உள் அர்த்தம் மூலமா அவருடைய உள் மனதில் தாக்கம் ஏற்படுத்த முடியும் அப்படித்தானே.

    அமேஸிங்க சுரேஷ். எக்ஸாக்டலி. நீங்க ஒரு புத்திசாலி. ஆமாம். அப்படி செய்ய முடியும்.

    மோகன் முடியை பிய்த்துக் கொள்ளாத குறையாக என்ன சார் பேசிக்கிறீங்க இரண்டு பேரும் என்றான்.

    நீங்க எஸ்பிபி மூச்சுவிடமா பாடின பாட்டை கேட்டிருக்கீங்களா என்றான் சுரஷ்.

    ஆமாம் என்றான் மோகன் குழப்பத்துடன்.

    அது பாலாவோட திறமையா இல்லை வைரமுத்துவோட வரிகளா. எதை எழுதினா மூச்சுவிடமா பாட முடியும்?

    எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
    இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
    முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
    விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள் அல்லவா

    என்று ஜோராக பாடினான்.

    மோகன் உங்களுக்கு ஒரு சவால். நீங்க எழுத வேண்டிய கதை சமுதாய அக்கறை கொண்ட வேலையில்லாத ஒரு இளைஞன் ஒரு எம்எல்ஏவை கோபத்தினால் கொலை செய்துவிட்டான் – அப்படிங்கற கதை. ஆனா அதுல ஊடுருவியிருக்க வேண்டிய செய்தி அந்த இளைஞனை வேறு ஒரு கும்பல பயன்படுத்தி மாட்டி விடப்பாக்கறாங்கன்ற செய்தி. படிச்சா கதிர் மாத்திரம் தான் புரிஞ்சிக்கனும். இது விசு படத்துல வர மாதிரி என் பொண்டாட்டி என் கண்ணுக்கு மாத்திரம் அழகா இருக்கனும் மத்தவன் கண்ணுக்கு அழகா இருகக்ககூடாது. புரிஞ்சுதா?

    ஆக நான் எழுதிய இரண்டும் கோர்ட் ஸீன்லேயும் அவனுக்கு வைத்தியத்தை புகுத்தனும்னு சொல்றீங்க இல்லையா என்றான் வாத்தியார் கேள்வி கேட்டு எனக்கு பதில் தெரிந்துவிட்டது என்று உற்சாகம் அடையும் மாணவன் போல.

    பிரஸைஸ்லி என்றான் சுரேஷ்.

    அப்படி எழுத முடியுமா மோகன் என்று அப்பாவியாக கேட்டார் ரதீஸன்.

    ஒரு பெரிய விஷயத்தை சகஜமாக சொல்லி விட்டான் சுரேஷ். பிரம்மிப்பாக இருந்தது. சவாலாகவும் இருந்தது. யெஸ் முடியும் என்றான் மோகன் நிறைவாக.
    மற்றவை நீதி மன்றத்தில் என்றான் செய்தி வாசிப்பாளரை போல. பிறகு வெளியில் ஐந்து ரூபாயில் குடித்திருக்க வேண்டிய காப்பிக்கு 210 ரூபாய் தண்டம் அழுதுவிட்டு சென்றார்கள்.

    தொடரும்....
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •