[b]ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலத்தை பற்றி இங்கே பேசலாம்,
விவாதிக்கலாம்.
அவர் கலைத்துறை,அரசியல்,மருத்துவம், இலக்கியம்,
பொதுசேவை,இசை என எந்த துறையை சார்ந்தவராகவும் இருக்கலாம்
24/09/03
இந்த பிரபலங்களின் வரிசையின் தொடக்கமாக
திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது.
1916'ல் கோயில்கள் நகரமான மதுரையில் வீணை கலைஞர் சண்முகவடிவுக்கு பிறந்தவர்.
இவரது முதல் ரெக்கார்ட் அவரது 10 வயதிலேயே வெளிவந்தது
சதாசிவத்தை மணந்து இரு
பிரபலங்களும் ஆதர்ஸ தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்
இன்றும் நாம் தினமும் காலையில் சுப்ரபாதமாக கேட்பது இவர் குரல் தான்.
இசையுலகின் பல விருதுகள் இவரை தேடி வந்தன
உயரிய பாரத ரத்னா விருதும் பெற்ற பெருமையுடையவர்
மகாத்மா காந்தி அவர்கள் இவர் பாடிய வைஷ்னவ ஜனதோ வை மிகவும் ரசிப்பாராம்
1954'ல் பத்மபூஷன் விருது பெற்றவர்
1966'ல் ஐக்கிய நாடு சபையில் பாடியவர்
1968'ல் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது பெற்ற முதல் பெண்மனி இவரே.
1975'ல் பத்மவிபூஷன் என சொல்லிக்கொண்டே போகலாம்
இந்த இசையரசியின் புகழ் உலகில் இசை உள்ள வரைக்கும் நிலைத்து இருக்கும்
ராஜ்
[/color]
Bookmarks