Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: மனைவி.........? காதலி........?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    மனைவி.........? காதலி........?

    எனக்குப் பிடிக்கும் என்று
    கசங்காத
    காட்டன் புடவைகளையே
    எப்பொழுதும் கட்டி வருவாய் -
    காதலித்த காலத்தில்.

    இன்றும் எனக்கு
    காட்டன் புடவைகளையே பிடிக்கிறது -
    உனக்குத் தான்
    வியர்வை படிந்த நைட்டியே
    உலகமாகி விட்டது எப்பொழுதும்...

    மனைவியாகக் கடமை செய்கிறாய் -
    டீயும், பேப்பரும் தலமாட்டில்,
    இட்டிலியும், சட்டினியும் மேசை மீது.
    காதலியாக செய்யும் கடமைகள் மட்டும்
    குளிர்சாதனப் பெட்டியின் ஆழத்திலே...

    நீ காலையில் உடுத்திப் போகும் ஆடை
    மாலையில் வந்து பார்க்கும் முன்னே
    அழகாக மடித்து அலமாரி உள்ளே போய்விடும்
    நினைவுப் பெட்டகங்களில் தொங்கும்
    நம் கல்லூரிக் காதல் நாட்களைப் போல...

    காதலியாக இருந்த பொழுது -
    ஒருநாள் மறந்தாலும் சினந்து
    காதைத் திருகுவாய்
    'இன்று ஏன் என்னை நேசிப்பதாக'
    சொல்லவில்லையென்று...

    இன்று வருடத்திற்கு
    ஒருமுறை சொல்ல முயலும் முன்னே
    நெற்றிக்கண் திறக்காத குறையாய்
    கடிந்து பேசுகிறாய்
    'பொறுப்பில்லாத மனுஷன்' என்று.

    மனைவியாக நீ இருந்தது போதும் -
    காட்டன் புடவை கட்டிய
    காதலியாக இன்று மட்டும் வா.
    உன் காதோரத்தில்
    'நான் உன்னை நேசிக்கிறேன்'
    என்பதாகக் கிசுகிசுக்க வேண்டும் -
    உன் பிறந்த நாளான இன்று மட்டுமாவாது.....
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:24 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    நீங்கள் முன்னர் மாதிரி இல்லை....

    நீதான் முன்னர் மாதிரி இல்லை....

    இப்படியே எந்த மாதிரியும் இல்லாமல் காலம் போய் விடும்.

    தங்கைக்கு மன்றத்தின் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    -அன்புடன் அண்ணா.
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:24 AM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நீங்கள் முன்னர் மாதிரி இல்லை....

    நீதான் முன்னர் மாதிரி இல்லை....
    காதல் வெற்றியில், அதாவது, திருமணத்தில் முடியும் பொழுது, இந்த புலம்பல்கள் தான் அதிகம் மிஞ்சுகிறது........
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:23 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அனுபவக்கவிதையா?!!

    நன்றாக அனுபவிக்கமுடிகிறது படிக்கும்போதே!!

    நண்பருக்கு நன்றிகள்!
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:23 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  5. #5
    இளம் புயல்
    Join Date
    18 Jun 2003
    Location
    Manama, Bahrain
    Posts
    399
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நண்பனின் கவிதை அருமை
    எனக்குத்தான் உறுத்துகின்றது
    காதலித்தவளை காதலியாகவே வைத்திருக்கவா கல்யாணம் செய்யவா என.......
    அவள் திருமணத்தின் பின்பும் காதலியாகவே வேண்டும். இன்றைய குறும்புகள் இன்றைய சினுங்கல்கள் இவையெல்லாம் நீடிக்குமா ???
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:23 AM.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    இதற்கு ஒரு பதில் கவிதை எழுத வேண்டும் என்று துடிக்கிறது........
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:22 AM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இதற்கு ஒரு பதில் கவிதை எழுத வேண்டும் என்று துடிக்கிறது........
    துடிப்பை வடியுங்கள் ப்ளீஸ்...!
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:22 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அன்று மகன் - இன்று அப்பா
    அன்று பள்ளியில் - இன்று பணியில்
    அன்று கால்சட்டை - இன்று பிரிமீயர் வேட்டி..

    உள்ளூறும் உள்ளம் அதே...
    வெளிக்காட்டும் வடிவம் மாறும்...

    போடா போக்கிரி அன்றைய காதல்..
    பொறுப்பில்லா மனுசன் இன்றைய காதல்..

    காலம் போட்ட புதுச்சட்டையை
    சாளேஸ்வரக் கண்ணால் உற்றுப்பார்க்கிறேன்..
    ஆ!
    படலத்துக்குபின்
    தெரியுதே...
    நான் காதலித்த அதே மனது!

    என் பாராட்டுகள் நண்பனுக்கு...
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:21 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    இளம் புயல்
    Join Date
    23 Jun 2003
    Posts
    107
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    மனைவியாக நீ இருந்தது போதும் -
    காட்டன் புடவை கட்டிய
    காதலியாக இன்று மட்டும் வா.
    உன் காதோரத்தில்
    'நான் உன்னை நேசிக்கிறேன்'
    என்பதாகக் கிசுகிசுக்க வேண்டும் -
    உன் பிறந்த நாளான இன்று மட்டுமாவாது.....

    பல நிமிடங்கள் எனக்குள் பெரு அமைதி. பின்னர்அமைதியை நானாகவே குலைத்து விட்டேன். இன்னும் அமைதியாக இருந்து விட்டால் எனது கண்ணில் நீர்த்திவாலைகள் தோன்றி தங்களின் கவிதையை மறைத்துவிடும் என்பதற்காய். அற்புத கவிதை.
    _________________
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:21 AM.

  10. #10
    இளையவர்
    Join Date
    24 Sep 2003
    Posts
    88
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அன்பே - அடியே!
    வா செல்லமே - வாடீ!
    நடை அழகு - நடையைப் பாரு!
    பேசப் பேசக் கேட்கனும் - போதும் நிறுத்து!
    தினம் ஒரு பூ - தினமும் ஒரே பூ!
    செல்லப் பெயர் - சொல்லவொன்னாப் பெயர்!
    சிரிச்சுப் பார்க்கனும் - இளிக்காத!
    காலமெல்லாம் காத்திருப்பேன் - எவ்வளவு நேரன்டி புறப்பட?

    இவ்வளவு மாறியிருக்கும் போது
    காட்டன் புடவை நைட்டி ஆனது என்ன ஆச்சரியம் கணவா?
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:21 AM.

  11. #11
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கவிதை.. நண்பன் அவர்களுக்கு நன்றி...
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:20 AM.

  12. #12
    இளம் புயல்
    Join Date
    23 Jun 2003
    Posts
    107
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அன்பே - அடியே!
    வா செல்லமே - வாடீ!
    நடை அழகு - நடையைப் பாரு!
    பேசப் பேசக் கேட்கனும் - போதும் நிறுத்து!
    தினம் ஒரு பூ - தினமும் ஒரே பூ!
    செல்லப் பெயர் - சொல்லவொன்னாப் பெயர்!
    சிரிச்சுப் பார்க்கனும் - இளிக்காத!
    காலமெல்லாம் காத்திருப்பேன் - எவ்வளவு நேரன்டி புறப்பட?

    இவ்வளவு மாறியிருக்கும் போது
    காட்டன் புடவை நைட்டி ஆனது என்ன ஆச்சரியம் கணவா?
    உண்மை தான். வாழ்க்கை ஒருமுறை.அதை அழகாக வாழ்ந்து பாற்பது தானே சிறப்பு. ஒரு போதுமே கணவன் மனைவி தூரவிலகிவிடக்கூடாது. கோபம் வரும் போது யாரோ ஒருவர் மெளனியாகி விடுவது எத்தனை சிறப்பு.அப்படி என்றால் அத்தனை காதல் ரசனையோடும் காலம் முழுக்க வாழலாம்.

    இருவருமே தங்களின் ரசனைகளை விருப்பு வெறுப்புக்களை அடிக்கடி பகிரவேண்டியவர்களாகவும் அதற்கு ஏற்ப சமாளிக்க பழகவேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:20 AM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •