Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 53

Thread: தமிழர்களின் ஹீரோ - பிரபாகரன்!!!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by அய்யா View Post
    தமிழர்கள் என்றால்...?

    ஈழத் தமிழர்களுக்கா... இந்தியத் தமிழர்களுக்கா..?
    என்னை போன்ற இந்தியத் தமிழர்களுக்கும் அவர் ஹீரோதான்..
    அன்புடன் ஆதி



  2. #14
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Aug 2008
    Posts
    353
    Post Thanks / Like
    iCash Credits
    15,171
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அய்யா View Post
    தமிழர்கள் என்றால்...?

    ஈழத் தமிழர்களுக்கா... இந்தியத் தமிழர்களுக்கா..?
    ஆதி முதல் அந்தம் வரை அவருடைய அணுகுமுறையில் மாற்றம் இல்லை. அவரைப் பற்றிய கண்ணோட்டம் மட்டும் மாறிக் கொண்டே இருந்தது.

    சிலருக்கு என்றும் ஹீரோவாய், இன்னும் சிலருக்கு ஒருகாலத்தில் ஹீரோவாய் - பின்னர் வில்லனாகவும் தோன்றினார்.

    உலக மக்கள் அனைவருக்கும் ஹீரோ (அ) ஒரு இனத்திற்கே ஹீரோ என்று ஒருவரை இதுவரை நம்மால் இனம் காண முடியாது.
    'கோபம் மனிதனது அறியாமை' - ரவிந்திரநாத் தாகூர்

  3. #15
    Awaiting பண்பட்டவர் Honeytamil's Avatar
    Join Date
    04 Feb 2009
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அய்யா View Post
    தமிழர்கள் என்றால்...?

    ஈழத் தமிழர்களுக்கா... இந்தியத் தமிழர்களுக்கா..?

    தமிழ்ர்கள் என்றால் எல்லாரும் ஒன்றுதான். பிறகென்ன இந்திய தமிழ் , இலங்கை தமிழ்???

  4. #16
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    நிதர்சனமான உண்மை பதிவு....
    தமிழர் எல்லோருக்கும் மட்டுமல்ல உலகத்திற்க்கே அவர் மாவீரன் தான்....!

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by அய்யா View Post
    தமிழர்கள் என்றால்...?

    ஈழத் தமிழர்களுக்கா... இந்தியத் தமிழர்களுக்கா..?
    ஏன் மலேசியத்தமிழன், சிங்கப்பூர் தமிழன், சவுதி தமிழன் இவர்களை எல்லாம் விட்டுவிட்டீர்களே.

    அப்படியே தமிழ்நாட்டு தமிழன், பாண்டிச்சேரி தமிழன் என்றும் பிரிக்கலாமே.

    தமிழ் பேசுகிறவர் அல்லாமல் தமிழை நேசிப்பவர்களும் தமிழர்கள் தான்.

    இங்கே வந்து பிழைத்து சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த தமிழன் தான். மலையாளி என்று கலைஞரால் தூற்றப்பட்டு, முதலமைச்சரான எம்.ஜி.ஆரும் தமிழன் தான்.

    முதலில் ஒரு மாயக்கோடு போட்டு பிரிக்கும் வேலையை விட்டொழியுங்கள். இதனால் உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

    பால்தாக்கரே என்ன தமிழரா?. அவருக்கு பிரபாகரனை மிகவும் பிடிக்கும். பிரகாஷ்ராஜ் பிறப்பால் தமிழரா அவருக்கு பிரபாகரனை ரெம்ப பிடிக்கும், தனது இறந்து போன மகன் உயிருடன் இருந்து அவனிடம் பேசுங்கால், " மகனே, உண்மையான மாவீரன் பிரபாகரன் தான்" என்று சொல்வேன் என்று பேட்டியில் கொடுப்பார்.

    அய்யா(பெரியார்) என்ற பெயர் வைத்து கொண்டு இப்படி அந்த பெயருக்கு களங்கம் விளைவிக்கலாமா?.

    பிரபாகரன் வெறும் ஹீரோ மட்டும் அல்ல, ஹீரோக்களுக்கு எல்லாம் ஹீரோ. அதாவாது ராஜாதி ராஜன். அவரை மாவீரன் ஏற்றுக்கொள்ளாதவன் அசல் தமிழனாக இருக்க மாட்டான். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த அனைத்து தமிழரிலும் மேம்பட்ட சுத்த மாவீரன்.

    குடும்பத்திற்கு ஒருவரை போருக்கு அனுப்ப சொல்லி, தன் குடும்பத்தில் இருவரை போரில் பலி கொடுத்த ஒரே தலைவன் பிரபாகரன் தான்.
    Last edited by praveen; 17-07-2009 at 12:35 PM. Reason: தட்டச்சுப்பிழை சரி செய்ய
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  6. #18
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு...
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0
    அருமையான விளக்கம் பிரவீன்...
    மிக்க நன்றி.. இதை விட சிறந்த பதிலை யாராலும் கொடுக்க முடியாது.
    நேற்று இதை பார்த்தேன் பதிலளிக்க மனமின்றி சென்று விட்டேன்.

  8. #20
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Aug 2008
    Posts
    353
    Post Thanks / Like
    iCash Credits
    15,171
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by praveen View Post
    அவரை மாவீரன் ஏற்றுக்கொள்ளாதவன் அசல் தமிழனாக இருக்க மாட்டான்.
    இது சுத்த ஹம்பக்.

    நீங்கள் ஒரு ஹீரோ, உங்களுக்கு அவர் ஹீரோ -> ஹீரோவுக்கெல்லாம் ஹீரோ ஒகே.

    அதை ஏற்றுக் கொள்ளாதவன் அசல் தமிழனாக இருக்கமாட்டான் என்று சொல்வது ரொம்ப ஓவர். புள்ளி விபரக் கணக்கு தரட்டுமா? உலகத்தில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேருக்கு அவர் ஹீரோ என்று.

    உங்கள் நம்பிக்கை, உங்கள் சந்தோசம் எதிலும் குறுக்கிடவில்லை. ஆனால் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் அசல் தமிழனில்லை என்று சொல்வது அதிகம்.

    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே (கொலை செய்வதற்கில்லை)

    கோபம் மனிதனின் அறியாமை - எனது பதில் பதிவுக்கு கோபப் படமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    பிரபாகரன் ஹீரோ தான். அது அவரவர்களுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய ஹீரோ. அவருக்காக திரி உருவாக்கலாம். புகழ் பாடலாம். ஆனால், திணிக்கப்படும் ஹீரோவாக இருக்க கூடாது.
    'கோபம் மனிதனது அறியாமை' - ரவிந்திரநாத் தாகூர்

  9. #21
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே (கொலை செய்வதற்கில்லை)
    நண்பர் விக்ரம்,

    சூழ்நிலை, காரணம், உரிமை, தேவை, கட்டாயம், நிர்பந்தம் இவையனைத்தையும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    ஹீரோவாக திணிக்கிறார்கள் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. உரிமைக்காக அடுத்தவரை மட்டும் அல்ல தன் குடும்பத்தாரை மட்டும் அல்ல தன்னையும் தியாம் செய்ய துணிந்த வீரனை, அனைவரும் ஹீரோவாகத் தான் பார்ப்பார்கள் என்று பெருமித உணர்வுடன் தமிழனாக பீற்றிக்கொளவது என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

    அதை கலங்கப்படுத்தவதாக உங்கள் பதில் அமைந்திருக்கிறது.
    Last edited by இன்பா; 11-07-2009 at 10:46 AM.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  10. #22
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by விக்ரம் View Post
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே (கொலை செய்வதற்கில்லை)
    ஆமாம் ஆமாம் எதிரி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்வான்.. பெண்களை கற்பழிபான்.. உங்களை மட்டும் இல்லை உங்கள் சொந்தகளுக்கும் ஏன் உங்கள் இனத்திற்கும் இதே கதி தான்.. அது மட்டும் இல்லை உங்கள் இனத்தை முழுமையாய் அழிக்க நிற்பான். ஆனால் நிங்கள் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்பிர்கள் ஏன் என்றால் "இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே"

    இங்கு நிங்கள் என்று கூறியது உங்களை அல்ல நண்பரே.. ஈழத்தில் தமிழர்கள் பட்டவை.
    உங்களுக்கு புரிய வேண்டும் என்பதுக்காக "நிங்கள்" என்று கூறினேன்

  11. #23
    Awaiting பண்பட்டவர் Honeytamil's Avatar
    Join Date
    04 Feb 2009
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by batman* View Post
    ஆமாம் ஆமாம் எதிரி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்வான்.. பெண்களை கற்பழிபான்.. உங்களை மட்டும் இல்லை உங்கள் சொந்தகளுக்கும் ஏன் உங்கள் இனத்திற்கும் இதே கதி தான்.. அது மட்டும் இல்லை உங்கள் இனத்தை முழுமையாய் அழிக்க நிற்பான். ஆனால் நிங்கள் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்பிர்கள் ஏன் என்றால் "இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே"

    இங்கு நிங்கள் என்று கூறியது உங்களை அல்ல நண்பரே.. ஈழத்தில் தமிழர்கள் பட்டவை.
    உங்களுக்கு புரிய வேண்டும் என்பதுக்காக "நிங்கள்" என்று கூறினேன்
    ஆமாம் பெட்மான் , அவர் எதற்காக ஆயுதம் ஏந்தினார் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள். அவர் தமிழர்களும் கோழைகள் அல்ல குட்ட குட்ட குனிந்துகொண்டிருக்கமாட்டார்கள் என்று சிங்கள தேசத்துக்கென்ன
    சர்வதேசத்துக்கே தெரியவைத்தார்.

    தமிழினத்தின் கற்பனைக்கெட்டாத கர்மவீரனாக,
    காவிய நாயகனாக,
    தமிழினத்தின் வியத்தகு வீரனாக,
    இனத்தின் விடுதலை ஆன்மாவாக,
    தமிழினத்தின் மீட்பராக
    தலைவர் பிரபாகரனும், தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியமைக்கும் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழரின் அடிமனதில் உறைந்து விட்டனர் என்பது அகிலமறிந்த உண்மை.

    இதை எவராலும் எக்காலத்திலும் மறுத்துரைக்க முடியாது.

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    விக்ரம், நீங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படம் பார்த்திருப்பீர்கள், அதில் ஜாக்சன் துரையிடம் வீரபாண்டிய கட்டபொம்மன் பேசுவது போல ஒரு உரையாடல் வரும். (இது உண்மையிலே வீரபாண்டிய கட்டபொம்மன் பேசினாரா என்று கேட்காதீர்கள்.)

    இந்த மண்ணில் பிறந்த எவரும் பேடியாக இருந்ததில்லை - வீரபாண்டிய கட்டபொம்மு
    பேடியாய் இருப்பவன் - இது ஜாக்சன் துரை

    இந்த நாட்டின் அசல் வித்தாக இருக்க மாட்டான் - இது வீ.பா.கட்டபொம்மு.


    இந்த உரையாடலை கேட்ட பின் அந்த மாதிரி திருநங்கையாக இருப்பவர் எல்லாம் இந்த நாட்டினருக்கு பிறந்தவரில்லை என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாமா?.

    ஒரு விசயத்தை சிறப்பிக்க சொல்லப்படும் வார்த்தையை அப்படியே எடுத்துக்கொள்ள கூடாது.

    ======== ====== ========== ==========

    உங்கள் கொலைக்குற்றச்சாட்டிற்கு பதில்.

    உலகிலே, பல காலம் அராசாண்ட இனம் தமிழினம். பல நாடுகளை தத்தம் எல்லை மீறீ சென்று வென்று ஆட்சி புரிந்தவன் தமிழன். இன்று உலகெமெங்கும் தமிழனுக்கு என்று எந்த ஒரு நாடும் இல்லை. தேசிய நீரோட்டம், ஒருமைப்பாடு என்பதில் உடன்பட்டு இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் தத்தம் உரிமை/பழமை இழந்து அடங்கியிருக்கிறார்கள்.

    அப்படி இருந்த ஒரு நாட்டில்(இலங்கையிலே), அடக்குமுறையை எதிர்த்து பலர் அஹிம்சாவழியில் போராடி அடக்குமுறையால் அடிபட்டனர், முழுமையான தீர்வு கிடைக்கபெறாததினால் சில இளைஞர்கள் ஆயுதவழியை, இந்தியாவில் சுபாஸ் சந்திர போஸ் ஏற்றது போல முன்னெடுத்து சென்றனர். எப்படி இங்கே ஆங்கில அதிகாரிகளை சுட்டுக்கொண்றார்களோ (வாஞ்சிநாதன் ஆஷ் துரையை கொண்றது) அது போல இலங்கை அரசு அதிகாரிகளை களையெடுத்தனர். பின்னர் இயக்கத்தை வலுப்படுத்த எண்ணி தத்தம் சகோதரர்களுக்கும் சண்டையிட்டனர். அதில் இறுதியில் வெற்றி பெற்று தனீஈழம் கண்டனர். ஒரு நாட்டை நிர்வகிப்பது போலவே நிர்வகித்தனர். அந்த நாட்டின் உயர்நிலையில் இருந்தவரை பற்றித்தான் இங்கே பேச்சு.

    ஒரு போலிஸ் அதிகாரி/ராணுவ வீரன், ஒருவரை பணி நிமித்தம் அல்லது தனது துறை சார்ந்த நடவடிக்கைக்காக கொல்வது கொலை அல்ல.

    பேடிப்பயல்கள் ராணுவமான இலங்கை அரச படையினர், இலங்கை தமிழர்களை, விடுதலைப்புலிகளை ஒழிக்கிறேன் என்று கொன்ற போதும், அப்பாவி சிங்கள மக்களை விடுதலைப்புலிகள் ஒரு போதும் கொன்றதில்லை. அவர்கள் குறிக்கோள் இலங்கை இராணுவத்தை எதிர்ப்பதே ஆகும்.

    நீங்கள் மனதில் வைத்து சொல்லும் ஒரே ஒரு கொலையை நானும் ஒத்துக்கொள்ளவில்லை தான். அதனை இப்போது பேசுவது திரி திசைமாறி விடும்.

    உலகிலே எந்த ஒரு தலைவனையும் விமர்சனம் என்ற போர்வையிலே குறை சொல்வது உண்டு. மகாத்மா காந்தியை கூட குஷ்வந்த்சிங் இல்லஸ்டிரேட்டடு வீக்லியில் அவர் மறைந்த பின்னும் கடுமையான மதிப்பு குறித்து சொன்னதுண்டு. எனவே போர்க்களத்தில் இருந்தவரை கொலையாளி குற்றவாளி என்று சொல்வதில் வியப்பில்லை.

    அவரை நீங்கள் ஹீரோ என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இலங்கை தமிழர் வாழ்க்கை பற்றி முழு நிலை பற்றி அறிந்திராதவர் என்று தான் அர்த்தம். உங்களின் ஹீரோ யார் என்று சொல்லுங்கள் நான் அவர் பற்றி மாற்றுக்கருத்து சொல்கிறேன். மாற்றுக்கருத்து சொல்லமுடியாத வீரன் இல்லை. விக்ரம் உள்பட
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •