Page 1 of 13 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 153

Thread: தமிழ் கூறும் நல் உலகிற்கு ஒரு கெட்ட செய்தி

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112

    தமிழ் கூறும் நல் உலகிற்கு ஒரு கெட்ட செய்தி

    கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் இலங்கை ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும் இத்தகவலை இதுவரை இலங்கை அரசும், பாதுகாப்புத்துறையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைக்காட்சி மூலம் இத்தகவலைத் தெரிவிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

    புலிகள் தலைவர்கள், பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் 150 பேர் 2 நாட்களுக்கு முன் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த உடல்களில் ஒன்று பிரபாகரனுடையதாக இருக்கலாம் என்றும் ராணுவம் கூறியுள்ளது.

    உடலை அடையாளம் காண்பதற்காக அது கொழும்புவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

    இதற்கிடையே இலங்கை செய்தித்துறை அமைச்சர் அணுரா யபா சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி்க்கு அளித்த பேட்டியில்,

    இந்தச் செய்தியை நாங்கள் இப்போது உறுதிப்படுத்த முடியாது. ஒரு உடல் சிக்கியுள்ளது. அந்த உடலை அடையாளம் காண வேண்டியுள்ளது. அதன் பின்னரே இதை உறுதிப்படுத்துவோம் என்றார்.

    ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி அதே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

    இரு தினங்களுக்கு விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் தலைவர் சூசை குடும்பத்தினர் ராணுவத்திடம் பிடிபட்டனர். அவர்கள் அளித்த தகவலின்படி 2 நாட்களுக்கு முன் 150 புலித் தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது என்றார்.

    source : thatstamil.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இனியாவது அங்கே தமிழனை வாழ வையுங்கள் உலகே.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0
    இலங்கை அரசின் கூற்றின்படி பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டனர் அல்லவா? இனிமேலாவது எங்கள் இனம் அங்கு இருந்தால் வாழவிடுங்கள்.
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  4. #4
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    பிரபாகரன் தேர்தலுக்கும் முன்பாகவே கொல்லப்பட்டுவிட்டார்... என்று சிலர் சொல்கிறார்கள்...
    Last edited by இன்பா; 17-05-2009 at 12:51 PM.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0
    இங்கும் ஒரு சிலர் கூறுகின்றனர்.. பிரபாகரன் இறந்து உண்மையா பொய்யா என்பதை விட அவரது உடல் நிச்சயமாக சிங்களவர்களிடம் மாட்டாது.

    அது மட்டும் இல்லை .... இறுதியாக கிடைத்த தகவல் படி 800 சதுர மீற்றருகுள் ராணுவம் கட்டுபடுத்தி உள்ளது .

    இது வரை பிரபாகரன் இறக்கவில்லை என்றால் கூட அடுத்த சில மணி நேரத்தில் அது நடத்து விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. :(

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு கிளம்பினேன், தொலைக்காட்சிகளில் செய்தி வருகிறதா என்று பதைபபதைப்போடு பார்த்தேன்.

    இரவு செய்திகளில் கலைஞர் தொ.கா யில், சுப.வீரபாண்டியன் சொன்னதாக ஒரு செய்தி சொன்னார்கள், அதில் இருந்து இந்த செய்தி பொய் என்று தெரிந்து கொண்டேன்.

    சிங்கள ராணுவம் உளவியல் ரீதியாக மக்களை பாதிக்கும் வண்ணம் இந்த செய்திகளை பரப்பியிருக்கிறது என்றார். அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று உறுதிபடுத்தியிருந்தார்.


    இதற்கிடையில் சென்னையில் காங்.தலைவர்கள், மத்திய அரசு மாநில அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கும், இலங்கை தூதரகம் இவற்றிற்கெல்லாம் பாதுகாப்பு கூட்டப்பட்டதாகவும், வர்த்தக நிறுவனங்களை பூட்ட சொல்லி சிலர் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் தெரிகிறது.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பிரபாகரனின் மகன் சார்லஸ் கொல்லப்பட்டதாக செய்தி கேட்டேன். உண்மையா நண்பர்களே? இங்கு துபாய் ரேடியோவில் சொன்னார்கள். இருந்தும் நம்பமுடியவில்லை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    என்னைப் பொறுத்தவரை பிரபாகரன், பொட்டு அம்மான், நடேசன், சூசை போன்றோர் வீரச்சாவடைவதோ பிடிபடுவதோ நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது. சார்ள்ஸ் ஆன்டனி வீரச்சாவு உண்மையானதாக இருக்கலாம்.

    ஏனெனில் வெளித்துரோகங்கள் மட்டுமல்லாது உள்ளகத் துரோகங்களும் மலிந்துவிட்ட நிலையில் களமுனையில் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைப் பொறுப்பாக்க வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்கு இருந்ததாக செய்திகள் கசிந்திருந்தன.

    எப்படி ஆனாலும் காலம்தான் உண்மையைச் சொல்லும்.

  9. #9
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    துரோகம், வஞ்சகம், போர் விதி மீறல்கள்

    அது மட்டுமல்லாது அமரன் அவர்கள் சொன்னதுப் போல உள்ளகத் துரோகங்கள்

    தலை குனிவதை தவிர வேற்றன்ன செய்ய முடியும்....
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  10. #10
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0

    பிரபாகரன் கொல்லப்பட்டார்

    வன்னி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோரை சுற்றி வளைத்தது ராணுவம். இதில் பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், அவரது உடல் மீட்கப்பட்டுவிட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

    உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படைப் பிரிவுத் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது

    thatstamil.com
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  11. #11
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    பதவிக்காக கண்டதையும் புசிப்பர்
    வாக்குகளுக்காக காலையும் பிடிப்பர்
    பணத்துக்காக பல்டியும் அடிப்பர்
    மேடையில் மட்டுமே வீரம் காட்டி
    இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பார்
    சுயநல நாய்கள்

    நீ தான் வீரன்., இப்போதாவது நல்லுலகம் செல்.,

    வீரத் தலைவனுக்கு வீர வணக்கங்கள்...

    அம்மா தாயே...
    உன் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா
    உன் சூழ்ச்சி வெற்றியடைந்ததா
    இரத்தமும் சதையையும் கண்குளிர கண்டாயிற்றா
    உன் பகை தீர்ந்ததா
    எஞ்சிய மக்களையாவது விடு

    ஆனால் உனக்கு நல்லுகம் கிடையா
    சாபமிடுகிறேன், இதயமற்றவளே......!!!!!!
    Last edited by இன்பா; 18-05-2009 at 08:56 AM.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    என் சிங்களச் சினேகிதி ஒருத்தியும் குறுச்சேதியில் தகவல் சொன்னாள்..

    புலியின் கதறல் உருமா கட்டிய கவிதை..
    உறுதிப்படுத்தும்வரை வேண்டாமே அழுகை..

Page 1 of 13 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •