Page 3 of 13 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast
Results 25 to 36 of 153

Thread: தமிழ் கூறும் நல் உலகிற்கு ஒரு கெட்ட செய்தி

                  
   
   
  1. #25
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0
    நியூஸ் சேனல்களில் எல்லாம் ஒளிபரப்புகின்றனர்.ஆனால் பழைய படங்களைத்தான் காட்டுகின்றனர்.பிரபாகரனின் மகன் சார்லஸ் உடல் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும். சார்லஸின் இறந்த உடலின் படம் வெளியிடப்பட்டுள்ளது.
    [media]http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_85113161803.jpg[/media]
    Last edited by anna; 18-05-2009 at 12:49 PM.
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  2. #26
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    மாறுபட்ட முரணான செய்திகள் தான் தொடர்கிறது...
    தமிழக செய்தி சேனல்கள் எல்லாம் மௌனமாக இருக்கிறது....24*7 இன்னும் உறுதி செய்ய வில்லை..ஆனால் டைம்ஸ் டுடே இறந்து விட்டார் என சொல்கிறது (ஆனால் உறுதிப்படுத்த டி.என்.ஏ சோதனை நடப்பதாக சொல்கிறது )
    ஜெயிப்பது நிஜம்

  3. #27
    இளையவர்
    Join Date
    07 Dec 2007
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    இன்றுதான் இந்த வடக்கத்திய விபீஷணர்களுக்கு திருப்தியாக இருக்கும்....
    விடுதலை உணர்வை இந்த சிங்கள நாய்களால் கொல்லமுடியுமா....

  4. #28
    Awaiting பண்பட்டவர் Honeytamil's Avatar
    Join Date
    04 Feb 2009
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0

    பிரபாகரன் சந்தித்த “மரணங்கள்” 15

    ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரான பிரபாகரனை கொலை செய்வதற்கு 1989 ஆம் ஆண்டே உளவு நிறுவனங்கள் திட்டம் தீட்டின. அதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்திற் குள்ளேயே ஆட்கள் தயாரிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவின் நாளேடுகளில் பிரபாகரன்,அவரது இயக்கத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ‘எந்தச் செய்தி யானாலும் ஆதாரத்துடன்தான் வெளியிடுவோம்’ என்று மார்தட்டும் ‘இந்து’ நாளேடும், இந்தப் பொய்ச் செய்தியை வெளி யிட்டது. உளவு நிறுவனங்கள் தயாரித்திருந்த திட்டம் தான் செய்தியாகப் பரப்பப்பட்டது என்பதுதான் உண்மை. ஊகங் களுக்கே இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே அது இருந்தது.

    1984 ஜூலை 24 ஆம் தேதி ‘இந்து’ நாளேடு வெளியிட்ட செய்தியை அப்படியே கீழே வெளியிடுகிறோம்.
    “சென்னை-ஜூலை 13 - ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர்’ வி. பிரபாகரன், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன் இது நடந்துள்ளது. சிறீலங்காவின் வடக்கு கிழக்கு மாகாண அரசியல் வட்டாரங்கள் இந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் உடல்,வவுனியாவி லிருந்து வட கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்ற கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு கிழக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறு அரசியல் பிரிவினர், கடந்த இரண்டு நாட்களாக இதைப் பற்றியே பேசி வருகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக, மாத்தையா அறிவித்துக் கொண்டுவிட்டார். இப்படி மாத்தையா தன்னை தலைவராக அறிவிக்கும் “வீடியோ கேசட்” மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி சூட்டில் -மாத்தையாவும் காயமடைந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

    லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் பிரதிநிதியிடம், இது பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பற்றி எதுவும் சொல்ல மறுத்ததோடு, இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.”

    -என்று செய்தி வெளியிட்டது ‘இந்து’ ஏடு.

    புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கிட்டுவும், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என்றும், பிரபாகரனுக்கு எதிரான போட்டிக் குழு,பிரபாகரனையும், அவரது ஆதரவாளர்களையும் வவுனியா காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிட்டது என்றும், அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கு மிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும், முக்கியமான பலரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இரு போட்டிக் குழுவினரும் தங்களுக்குள் இந்தத் தகவல்களை பேசிக் கொண்டபோது, வவுனியாவுக்கு அருகே உள்ள கொரியங்குளம் கிராமத்தில் இந்த உரையாடல்கள் இடைமறித்துக் கேட்கப் பட்டன என்றும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. பிரபாகரன் சடலம் வைக்கப்பட்டுள்ள அனந்த பெரியகுளம் கிராமத்தில்,கடந்த இரண்டு நாட்களாக மக்கள் அவருக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி வருவதாகவும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. இப்படி விரிவான“உண்மைகளை” வெளியிட்ட “தரம் நிறைந்த” ‘இந்து’ பார்ப்பன ஏடு, (4 பத்திகள் - 450வார்த்தைகள்) செய்தியின் கடைசியில் இவை எல்லாம் புரளிகள் என்று விடுதலைப்புலிகள் வெளியிட்ட மறுப்பை இரண்டே வரிகளில் போட்டு முடித்துவிட்டது. உயிர்த் துடிப்புடன் உலகமே வியக்கும் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய ஒரு தலைவருக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே, ‘மரணச் செய்தி’ வெளியிட்ட, இந்த ஏடுகள், அதற்காக ஒரு வருத்தம்கூட இது காலம்வரை தெரிவித்ததில்லை. இந்த செய்திக்கான பின்னணி என்ன? இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய சதித் திட்டம் தான்,இந்த செய்தியின் பின்னணி. தங்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் இயக்கத் திலேயே - மாத்தையாவைப் பிடித்து அவர் மூலம், பிரபாகரன் வாழ்வை முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

    ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து சிறீலங்காவின் அதிபர் பதவிக்கு வந்த பிரேமதாசா, வடக்கு கிழக்கில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்ததைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாசா, “இந்திய அமைதிப்படை உடனடியாக வெளியேற வேண்டும்” - என்று அறிவித்ததோடு, வெளியேறுவதற்கு காலக் கெடுவையும் நிர்ணயித்தார். 1989, ஜூலை 29 தான் அவர் நிர்ணயித்த காலக் கெடு. அந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு அமுலுக்கு வந்த நாள். 1989 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதியோடு, ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டு முடிவடைகிறது. எனவே பிரேமதாசா, இந்திய ராணுவம் வெளியேறுவதற்கான ‘கெடு’வை அந்தத் தேதியில் நிர்ணயித்தார்.

    பிரேமதாசா இதை அறிவித்த 1989 ஜூன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29 ஆம் தேதிக்குள் ஒருவர் பின் ஒருவராக ஈழத்தின் முக்கிய தமிழர் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

    1989 ஜூலை 13 ஆம் தேதி தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    அடுத்த நான்கு நாட்களில், ஜூலை 17-ல் ‘புளோட்’ இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் கொல்லப்பட்டார்.

    அடுத்த பத்து நாட்களில் ஜூலை 23-ல் ‘இந்து’ ஏட்டின் வழியாக பிரபாகரன் “கொல்லப்பட்டார்”.

    “இந்திய ராணுவத்துக்கு எதிராக பிரேமதாசா குரல் கொடுத்த ஜுன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29க்குள் இந்தக் கொலைகள் திட்டமிட்டப்படி நடந்தன. இந்த சதி வலைக்குள் சிக்காத தலைவர் பிரபாகரன் மட்டுமே!”

    -என்று எழுதுகிறார், ஆய்வாளர் சச்சி சிறீகாந்தா, தனது ‘Pirabhakaran Phenomenon’என்ற நூலில்.
    மூன்று முன்னணித் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கியவர்கள் உளவுத் துறையினரே என்று கருதுவதில் எந்த தவறும் இருக்க முடியாது.

    (It may not be wrong to infer that Indias intelligence operators had planned assiduously to eliminate the three leading figures)

    -என்றும் சச்சி சிறீகாந்தா சுட்டிக் காட்டுகிறார்.

    பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்த மாத்தையா,இந்திய உளவு நிறுவனம் வீசிய வலையில் வீழ்ந்தார். 1994 ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே’ இதழில் (மார்ச் 15) ஆர். பதக், பி. ஜெயம் ஆகியோர் இது பற்றி எழுதிய விரிவான கட்டுரை ஒன்று, இது தொடர்பான பல செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

    “1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி - சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ‘எம்.வி. அகத்’ கப்பலை - இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த,விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு,தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 - 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு,மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவியாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதரவாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம்
    -1993 டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், ‘ரா’ (RAW) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல்வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும்,‘ரா’வின் முகவராக மாத்தையா செயல்பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது”

    -என்று ‘இந்தியா டுடே’ அக்கட்டுரையில் சுட்டிக் காட்டியது.

    1991-ல் ராஜீவ் கொலை நடந்தபோது மாத்தையா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில், 2வது தலைவராகவே இருந்தும், ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரனையும், பொட்டு அம்மானை யும் சேர்ந்த இந்திய உளவுத் துறை, இரண்டாவது இடத்தில் இருந்த மாத்தையாவை, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மாத்தையா மீது, உளவுத் துறை கொண்டிருந்த நெருக்கத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.

    பிரபாகரனின் இரண்டாவது “மரணம்”
    1989 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் - பிரபாகரனை “மரணமடையச்” செய்த உளவு நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஒருமுறை‘மரணமடைய’ச் செய்தன. 2005 ஜனவரி 8 ஆம் தேதி இலங்கை அரசுக்குச் சொந்தமான சிறீலங்கா வானொலி, சுனாமி பேரழிவில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்,இறந்துவிட்டதாக அறிவித்தது.

    கொழும்பிலிருந்து வெளிவரும், ‘அய்லேன்ட்’ நாளேடு, பிரபாகரன் சடலத்தை எடுத்துச் செல்ல மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், சுனாமி நிவாரணப் பொருள்களோடு, கடத்தப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டது. சிறீலங்கா ராணுவத் துணை தளபதி அட்மிரல் தயாசந்த கிரி, இந்தச் செய்தியை வெளியிட்டதாக, அரசு வானொலி அறிவித்தது. ‘ஏ.எஃப்.பி.’என்ற சர்வதேச செய்தி நிறுவனமும் இந்த செய்தியைப் பரப்பியது. சிங்களர்களின் இணைய தளங்களில் இது பற்றி ஏராளமான கருத்துகள் குவிந்தன. உதாரணத்துக்கு ஒரு சில:

    “இறந்தவர்களை அப்படியே விட்டுவிடுவோம்; வியாதி பரவி, வியாதியாலேயே அவர்கள் அழிந்து போய் விடுவார்கள். எகிப்தில் பிளேக் நோய் ஏற்படுத்திய அழிவு போல் இப்போதும், அங்கே நடந்திருக்கிறது. மனிதர்களால் விருப்பமில்லாத - செய்து முடிக்கவியலாத ஒரு செயலை,இப்போது கடவுளே செய்து முடித்துள்ளார்.”

    “ஒரு கொடும் வில்லனை ஒழிப்பதற்கு, இத்தகைய சுனாமிகளால் தான் முடியும்”.

    “சுனாமியால், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டார்கள். புலிகள் ராணுவத்தில் சிறுவர்கள் மடிவதைப் போல், இவர்கள் கதையும் முடிந்து விட்டதாகவே கருதுவோம்.”

    “இனி, அவர்களின் தலைவர்கள் இடுப்பில் பெரிய குண்டை கட்டிக் கொண்டு, அதை வெடிக்க வைத்து சாகட்டும்”
    -இப்படி எல்லாம் சிங்களர்களின் இணையத்தளங்களில் மகிழ்ச்சிகள் பரிமாறப்பட்டன!

    மகிழ்ச்சி சிங்களர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தான்!

    இந்திய அரசின், முன்னாள் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.இராமன், இப்போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வருபவர். சென்னையில், ஆய்வு மய்யம் ஒன்றின் இயக்குனர் (Director, Institute of Topical Studies),, உளவு நிறுவனங்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பவர். பிரபாகரனின் ‘இரண்டாவது மரணம்’ பற்றி அவர் ஜன.10, 2005 இல் இணையதள கட்டுரையில் இவ்வாறு எழுதினார்.

    “விடுதலைப்புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலே மிகவும் கொடூர பயங்கரவாதி. அவருடைய மரணத்துக்குக்கூட யாரும் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை. (One need not shed any tears over his death) உண்மையிலே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கான தேவை, பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. விடுதலைப் புலிகள் பிரபாகரனைத் துரத்தி அடித்துவிட்டு, பயங்கரவாதத்தைக் கைவிட்டால், இந்தியாவும், சிறீலங்காவும்,விடுதலைப்புலிகளோடு இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. இத்தகைய நிலையை உருவாக்க சிறீலங்கா தலைவர்கள், ராஜ தந்திரத் துடன் குறுகிய அரசியலைக் கடந்து செயல்படவேண்டும்.”

    -இதுதான் பிரபாகரனின் மீது திணிக்கப்பட்ட “கற்பனை மரணத்துக்கு”இந்தியாவின் மூத்த உளவு அதிகாரியாக இருந்த பார்ப்பனர் தெரிவித்த கருத்து. பிரபாகரன் தலைமையை அழித்துவிட - ஒவ்வொரு முறையும் திட்டம் தீட்டி தோல்வி அடைந்த உளவுத் துறையினர் மீண்டும், அதே நிலையில் உறுதியுடன் செயல்பட்டு இருப்பதையே இது உணர்த்துகிறது.

    1989 ஆம் ஆண்டில், பிரபாகரனின் ‘மரணச் செய்தியை’ அறிவித்த ‘இந்து’ பார்ப்பன நாளேடு, அதற்காக வெட்கப்பட்டு இப்போது ஒதுங்கிடவில்லை. தமிழ்நாட்டில்,மீண்டும் ஒரு ‘கற்பனை மரணச்’ செய்தியை வெளியிடாமல், பல ஏடுகளும்,ஒதுங்கிக் கொண்ட நிலையில் பார்ப்பன ‘இந்து’ மட்டும், மீண்டும் பிரபாகரன்‘மரணச் செய்தியை’ வெளியிட்டு, தனது தற்கால மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது.

    ஜன. 8 ஆம் தேதி இலங்கை அரசு வானொலி, இந்தப் பொய் செய்தியைப் பரப்பிய உடனேயே அதே நாளில், விடுதலைப்புலிகள் அமைப்பு, இதற்கு மறுப்பைத் தெரிவித்து விட்டது. மிகவும் கீழ்த்தரமான முறையில் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பும் இலங்கை அரசு வானொலிக்கு, கடும் கண்டனத்தைத் தெரி வித்து, அந்த செய்தி அப்பட்டமான பொய் என்று விடுதலைப் புலிகளின் மறுப்பு அறிக்கை கூறியது. அந்த மறுப்பு வந்ததற்குப் பிறகும்கூட, ‘இந்து’, பிரபாகரன் மரணச் செய்தியை வெளியிட்ட தோடு - “பிரபாகரன் எங்கே?” என்ற தலையங்கமும் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

    “சுனாமியால் - தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களை நேரில் சந்திக்க பிரபாகரன் ஏன் வரவில்லை? இது போன்ற அசாத்திய சூழ்நிலைகளில்கூட, அவர் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படலாமா?”

    -என்றெல்லாம் கேட்ட ‘இந்து’,

    “பிரபாகரன் இறந்துவிட்டார் - என்ற செய்தியை புலிகள் திட்டவட்டமாக மறுக்கவில்லை. அவர்களின் மறுப்பு அறிக்கையில் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை”

    -என்று எழுதி, பிரபாகரன் இறந்த செய்தியை மீண்டும் உண்மையாக்கவே முயற்சித்தது. இதுதான் ‘பார்ப்பனர்களின் பத்திரிகை தர்மம்’ போலும்!

    பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக உளவுத்துறை பரப்பிய செய்தி - ‘ஏ.எஃப்.பி.’செய்தி நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசு வானொலிக்குப் போய் அங்கிருந்து‘இந்து’ ஏட்டுக்கு வந்து - சிங்கள இணையதளத்துக்குப் போய் ‘இந்து’வின் தலையங்கத்தில் வலம் வந்து, மீண்டும் உளவுத் துறை உருவாக்கிய அமைப்புகளின் வழியாக பிரச்சாரத்துக்கு வந்தது. ஆம்; பிரபாகரன்“மரணமடைந்த” அந்த “செய்தியை” உளவுத்துறையின் உருவாக்கமான கருணா மீண்டும் “உறுதி” செய்தார்.

    ‘ஜன. 14, 2005 அன்று பிரபாகரன் இறந்து விட்டார்; இறந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களும் மரணமடைந்துவிட்டனர். இறந்தவர்களில் பொட்டு அம்மான், பிறைஹரன் ஆகியோரும் அடங்குவர். பிரபாகரனின் சடலம் 12 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது. சுனாமி அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, படகுகளில் சென்று, விடுதலைப்புலிகள் தேடியபோது சடலம் கிடைத்தது. சடலம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. ஆனாலும், புலிகள் அது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

    வன்னியில் உள்ள எனது ஆதரவாளர்கள் இந்த செய்தியை எனக்குத் தெரிவித்தனர். பொட்டு அம்மானும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரும்,மரணமடைந்த செய்தி ஏற்கனவே உறுதியாகியுள்ளது. முக்கியத் தலைவர்களுக்குள்ள மரியாதையோடு, பொட்டு அம்மான், ‘மாவீரர்’துயிலுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிரபாகரன் வரக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பிரபாகரன் அனுப்பியதாக ஒரு இரங்கல் செய்தியை பால்ராஜ் படித்தார். புலிகளின் பல பதுங்கு குழிகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. புலிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வன்னி மருத்துவமனை முற்றிலும் நாசமாகிவிட்டது. மருத்துவமனையில் இருக்கும்போதுதான் பொட்டு
    அம்மான் இறந்தார். ஆனாலும், விடுதலைப்புலிகள் இந்த உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. தங்களுடைய தலைவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். நாங்கள் சவால் விடுகிறோம். பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையானால் அவர் வீடியோ மூலம் பொது மக்களிடம் தோன்றி பேசட்டும்; பேசுவாரா? (I challenged if Pirabaharan is alive, let him Video a statment about the latest situation) -

    இதுதான் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று சவால் விட்டு - ஏராளமான“உண்மைத்” தகவல்களை தனது வன்னி ஆதரவாளர்கள் மூலம் திரட்டி, கருணா வெளியிட்ட அறிக்கை Lanka Truth (சிறிலங்கா உண்மை) என்பது கருணா அறிக்கை வெளியிட்ட அந்த இணைய தளத்துக்குப் பெயர். சிறீலங்காவின் உண்மை என்பது எது என்பதை நன்றாகவே இந்த செய்தி நாட்டுக்கு உணர்த்தியிருக்கும்.

    உயிருடன் இருக்கும் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இந்த செய்தியைப் படித்து, சுனாமி சோகத்திலும் எப்படி சிரித்திருப்பார்கள் என்பதை வாசகர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். உளவுத் துறையின் “திறமை” மிக்க பிரச்சார யுக்திகளுக்கு இது ஒரு மரண அடி.

    சந்திரிகாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘தினகரா’தலைப்பு செய்தியை இப்படி வெளியிட்டது. Prabakaran, no, no, no - Dinakara States!“பிரபாகரன் இல்லை; இல்லை; இல்லை; தினகரா அறிவிக்கிறது.”

    இது சந்திரிகா குமாரதுங்காவின் நேரடி மேற்பார்வையில் வெளிவந்த ஏடு என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரலையால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பிணமாகிய சூழ்நிலையில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழும் மனநிலையில் தான் சிங்கள உயர்மட்டத் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் களும் இருந்தனர் என்பதே, இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த சந்திரிகாவே தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏட்டில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். நூற்றாண்டு கண்ட பார்ப்பன ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் என்.ராம் - பிரபாகரன் மரணத்தை செய்தியாக்கி
    -அந்தப் பொய்யை தலையங்கமாகத் தீட்டும் வெட்கக் கேடான நிலைக்கு கீழே இறங்கிச் சென்றிருக்கிறார். பரப்பப்படும்

    புரளிகளுக்கு தலையங்கம் தீட்டுவதுதான் ஒரு “தேசிய நாளேட்டுக்கு” உரிய தகுதியா? ‘இந்து’ ராம் இப்படி என்றால், உளவுத் துறையில் உயர் அதிகாரியாக செயல்பட்ட பி. இராமன், பிரபாகரன் மறைவுக்கு எவரும் கண்ணீர் கூட சிந்தக் கூடாது என்று எழுதும் நிலைக்குப் போய்விட்டார். பார்ப்பன ராமன்களும், சிங்கள பேரினவாதிகளும், பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடுவதில் ஒன்றுபட்டு கைகோர்த்தே நிற்கிறார்கள்.

    உளவுத் துறையின் முகம் மீண்டும் ஒருமுறை கிழிந்து தொங்கியது.

    சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தீட்டிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் அப்போது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கம்பீரமாக வந்து கலந்து ஆலோசனைகளை வழங்கி தன்னை “சுனாமிப் பேரலையில் சாகடித்த” பார்ப்பன - சிங்களக் கும்பலின் பொய்களை மரணக்குழிக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்!

  5. #29
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    சில தசாப்தங்களுக்கு முன்

    ஒருமுறை நக்கீரன் இதழில் பிராபகரன் மரணம் என்ற செய்தியை அவரே படிப்பது போல ஒரு புகைப்படம் அட்டைப்படமாக வெளியிட்டிருந்தனர்.

    உண்மையில் அந்த செய்தி ஒரு போட்டோ ட்ரிக்காக இருந்த போதிலும், பிரபாகரன் மரணமடையவில்லை என்று நம்ப வைப்பதற்காக இருந்ததை தமிழ் ஆர்வலர் அனைவரும் பாராட்டினர். அதற்கு பின் விடுதலை புலிகள் இயக்கத்தினர் அந்த படத்தை பாராட்டியதாக நக்கீரன் கோபால் தெரிவித்திருந்தார்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  6. #30
    புதியவர்
    Join Date
    04 Nov 2007
    Location
    San Francisco, USA
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்

  7. #31
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0
    முன்பு வந்த வதந்தி போலவே இப்போதும் ஆகிவிடவேண்டும் இறைவா.
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  8. #32
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இலங்கை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    மூத்த தளபதிகளின் உடலங்கள் எவையும் கைப்பற்றப்படவுமில்லை..

    முக்கியமாக தலைவர் , சூசை, பொட்டுஅம்மான் ஆகியோரின் தடையங்கள் எதுவும் கிட்டவில்லை என்று இராணுவப்பேசச்சாளர் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு நேரடி செவ்வி வழங்கியிருந்தார். (நான் பார்த்தது) பிரபாகரனின் உடலமாக இருக்கலாம் என்று கருதிய ஒரு உடலத்தினை மரபணுபரிசோதனைக்காக கொழும்பு கொணர்ந்திருக்கிறார்கள்...

    அதே நேரத்தில் 26 வருடங்கங்களுக்கு மேலாக இலங்கையில் நடந்துவந்த போர் இன்றய பிரபாகரனின் மரணத்துடன் முடிவுக்கு வந்துள்ளதாக மகிந்த அறிவித்துள்ளார்... உண்மை எது என்பது இறைவனுக்கே வெளிச்சம். காலம் பதில்சொல்லட்டும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #33
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0
    தலைவா நீ இறக்கவில்லை என்று நாம் நம்புகிறோம்...
    எமக்கு தமிழீழம் வேண்டாம் நீ உயிருடன் இருந்தால் மட்டும் போதும்

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    செய்திகள் தெளிவாகவும், உண்மையானதாகவும் இல்லை.
    என் இலங்கை நண்பர்கள்... பலர் நேற்று துக்கத்துடன் இருந்தனர்.

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    புதிய செய்தி...
    பிரபாகரனை நெருங்கவில்லை: இலங்கை ராணுவம் பல்டி
    தட்ஸ்தமிழ்.காம்
    கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக முதலில் செய்தி பரப்பிய இலங்கை ராணுவம் நேற்று இரவு இன்னும் பிரபாகரன் உள்ளிட்டோரை நெருங்கவில்லை என்று கூறியுள்ளது.

    இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகள் தற்போது 800 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே உள்ளனர். அங்கு பதுங்கு குழிகளையும், தற்காப்பு அரண்களையும் அமைத்து வைத்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    இதுவரை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவருடன் இருக்கும் தலைவர்களை நாங்கள் நெருங்கவில்லை. அவர்கள் அனைவரும் அங்குதான் இருப்பார்கள் என நம்புகிறோம்.

    விடுதலைப் புலிகள் தற்போது உள்ள பகுதியைச் சுற்றிலும் பெருமளவில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது என்றார்.

    ராணுவத்தின் செய்திகளை எப்போதுமே நம்ப முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இலங்கை அரசாங்கம் உடலங்களிலிருந்து அடையாளம் கண்டதாக அறிவித்திருந்த புலிகளின் தலைவர்களது பட்டியலில் தலைவரதும் தளபதி சூசை அவர்களது பெயரும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 3 of 13 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •