Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 63

Thread: ஒரு ஐயங்கார் வீட்டு கல்யாணம்- பாகம் 10

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    ஒரு ஐயங்கார் வீட்டு கல்யாணம்- பாகம் 10

    ஒரு ஐயங்கார் வீட்டு கல்யாணம்

    என்னுடைய பால்ய நண்பன் ஒருவன் வந்து தனக்கு திருமணம் என்று பத்திரிக்கை வைத்தான், பத்திரிக்கையை பார்த்தவுடன் என்னுடைய கண்களில் பல்பு எரிந்தது, காரணம் திருமணம் நடக்கும் இடம். ஸ்ரீரங்கம் என்று போட்டு இருந்தது, இடத்தை வைத்து நீங்கள் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்னுடைய நண்பனின் ஜாதியை, ஆம் ஐயங்கார் தான். நான் அவனை பார்த்து கண்டிப்பாக வரேன்டா என்றேன். காரணம் இரண்டு. ஒன்று இதுவரை நான் அங்கு சென்றது இல்லை, இரண்டாவது ஸ்ரீரங்கத்து ரங்காக்களின் ஜாகைகளை பார்க்கலாமே. ஆமாம் சுஜாதாவின் இளமை பருவம் கழிந்த இடம் அது தான். அப்புறம் நம்ம ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் எனக்கு சாமிகளிலே சின்ன வயதில் இருந்து இவர் மீது ஒரு ஈர்ப்பு, என்னைப்போலவே எப்பொழுதும் சோம்பேறித்தனமாக படுத்துக் கொண்டு இருப்பதினாலா? அல்லது அவர் சிந்தனை செய்தவாரே உறங்கிக் கொண்டு இருக்கும் ஸ்டைலினாலா? அதுவும் கடலின் நடுவில் படுத்து இருப்பார், காற்றும் நன்றாக வரும் என்பதாலா? தெரியவில்லை. மற்ற சாமிகளை பார்த்தால் கையில் வேல் கம்பு, அல்லது சூலம், அல்லது சங்கு சக்கரம், அல்லது கிளி, தாமரை, உலகம்னு எதையாவது கையில் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பார்கள். அதில் பழனி முருகன் மட்டும் பரவாயில்லை சிங்கில் பீசில் கொஞ்சம் ஃப்ரியாக இருப்பார். அதனால் மற்ற சாமிகளை கம்பேர் செய்யும் பொழுது இந்த ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் கொஞ்சம் நிறைவான போஸ் தான் கொடுத்து இருப்பார், இவரை பார்க்கும் பொழுது சாமி என்ற ஒரு பிரமை வருவதற்கு முன்பு, நாம் படுப்பது போல படுத்து இருக்காரே என்று சிந்தனை தான் மேலோங்கும் எனக்கு.

    என் நண்பன் அடுத்த நாள் வந்து “டேய் எங்க குரூப்புல ஒருத்தர் வரவில்லை, நீ எங்ககூட ரயிலில் வரியா” என்றான். நானும் சரி என்று சொல்லி விட்டேன். காரணம் இதுவரை நான் ரயிலில் சென்ற தொலை தூரப்பயணமே செங்கல்பட்டில் இருந்து மாம்பலம் தான். நான் இதுவரை எந்த ஊருக்கு சென்றாலும் பஸ்ஸில் தான் போவேன். ரயிலில் செல்வது பிடிக்கும் என்றாலும், யாரு போய் டிக்கெட்டுக்கு நின்று அலைவது என்ற ஒரு சோம்பேறித்தனம், அதனால் நான் சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன். நாங்கள் ஊருக்கு புறப்படவேண்டிய நாள் அன்று காலையில் இருந்து மாலை வரை அவன் என்னுடைய வீட்டில் தான் இருந்தான், அவனும், அவனுடைய ஒரு அண்ணன் பொண்ணும், ஒரு அக்கா பொண்ணும். இரண்டு சின்ன குட்டிகளும் செம வாலுங்க. அந்த வாலுங்களை பற்றி அப்புறம் சொல்றேன். இவனுடைய வீட்டு என்னுடைய வீட்டுக்கு இரண்டு பிளாட் தள்ளி இருக்கிறது, காலையில் இருந்து அவன் என்னுடன் தான் பேசிக் கொண்டு இருந்தான் அதுவும் ஜாலியாக சிரித்துக் கொண்டு. எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது என்னடா “உனக்கு தானே கல்யாணம் நீ இப்படி ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறாய், எதுவும் வீட்டில் வேலை இல்லையா? ஒரு வித டென்சனே இல்லாமல் இருக்கிறாயே? என்று மனதில் பட்டதை கேட்டேன். அவன் எதுவுமே சொல்லாமல் என்ன இப்ப கல்யாணம் தானே நடக்க போவுது.
    என்று அன்று மாலை 5 மணிக்கு தான் என்னுடைய வீட்டை விட்டு சென்றான். இரவு 10 மணிக்கு ரயில் அதுவும் எக்மோரில் இருந்து, நான் இரவு எட்டு மணிக்கு அவன் வீட்டுக்கு சென்றேன். தடியாக ஒரு ஐயர் உக்கார்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தார், இவன் புது வேஷ்டியை கட்ட தெரியாமல் நெஞ்சுவரை கட்டிக் கொண்டு மலையாளப்பட போஸ்டர் போல உக்கார்ந்துக் கொண்டு இருந்தான். எதோ மந்திரங்கள் எல்லாம் சொன்னான், பல விதமாக ஆசிர்வாதங்கள் வாங்கினான், அவன் வீட்டில் இருந்தது மொத்தமே 6 பேர் தான் 4 பெரியவர்கள், 2 குழந்தைகள் எனக்கு இதுவே பெரிய ஆச்சர்யம், இதுவரை நடந்த எங்க வீடு கல்யாணத்திலும் சரி, எனக்கு தெரிந்தவர்கள் வீட்டு கல்யாணத்திலும் சரி. குறைந்தது 200 பேராவது இரண்டு நாளுக்கு முன்பே வந்து விடுவார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை மிக மிக யதார்தமாக நடந்த கல்யாணம் இது, எந்த டென்சனும் இல்லாமல் இருந்தார்கள். அப்புறம் எனக்கு அதிசயமாக இருந்தது அந்த ஆசீர்வாதங்கள் அதுவும் மாப்பிள்ளை யானை காது மாதிரி கையை வைத்துக் கொண்டு பல முறை கீழே தண்டால் எடுப்பதை போல விழுந்து எழுந்தான். என்னை பொறுத்தவரை சகமனிதனின் காலில் விழுவதே தவறு, அம்மா அப்பாவை தவிர (என்னுடைய பிற்காலத்தையும் கருதி, மனைவியையும் சேர்த்துக் கொள்ளலாம்). என் நண்பன் பெயர் பாலாஜீ அவன் அந்த ஐயர் காலில் மட்டும் 20 தடவை விழுந்தான், நான் பார்த்தது வரை, அதுவும் இரவு கிளம்புவதற்கு முன், கால் டாக்ஸி வந்தது, இவர்கள் மூட்டை முடிச்சை பார்த்து
    டிரைவர் அலறிவிட்டான். 50 பெரிய பெரிய பைகள். டிரைவர் 50 ரூபாய் அதிகம் கேட்க, பாலாஜீ அரை மணி நேரம் சண்டை போட்டான், அப்புறம் 35 ரூபாய் கொடுத்தான். வண்டி கிளம்பியது, என்னுடைய மடியில் பாலாஜீயின் அக்கா பெண் ஐஸ்வர்யா (9) உக்கார்ந்துக் கொண்டாள். அவளை பற்றி சொல்லியாக வேண்டும், டாக்ஸி எக்மோரை அடைவதற்குள் சொல்லி முடித்துவிடுகிறேன்.

    பெங்களூரில் படிக்கும் அவளும் அவளுடைய அண்ணனும் (13) என் நண்பன் பாலாஜியின் வீட்டுக்கு கல்யாணத்தை முன்னிட்டு ஒரு வாரம் முன்பே வந்து இருந்தார்கள். நாங்கள் ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள் காலை எங்கள் வீட்டுக்கு பாலாஜி இந்த வாண்டுகளுடன் வந்து என்னிடம் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தான். இவர்களை என் பொறுப்பில் விட்டு விட்டு இவன் வெளியே கடைக்கு போனான். அந்த ஐஸ்ஸூ பெயருக்கு ஏற்றார் போல நல்ல அழகு (ஆமா இந்த ஐஸ்வர்யா, மதுமிதா பெயர் கொண்ட 95% பெண்கள் மட்டும் எப்படி எல்லாரும் அழகாக இருக்கிறார்கள்). என்னை பார்த்தாள்

    “உன் பெயர் என்ன டா செல்லம்” நான்.

    “ஐஸ்வர்யா அங்கிள்” என்றாள் கொஞ்சும் குரலில்.

    ஆஆஆஆஆஆஆ அங்கிள் அங்கிள் அந்த வார்த்தை என்னமோ செய்தது, வயசு ஆயிடுச்சா எனக்கு! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட cartoon channel பார்த்தனே என்னை போய் இவ அங்கிள்னு கூப்பிடுறாளே, இவ தான் என்னை இரண்டாவது முறையாக கூப்பிட்டது, (முதல் முறை கூப்பிட்டது யார் தெரியுமா நம்ம சிவா அண்ணாவின் பொண்ணு, அங்கிள் என்றால் தயங்கியபடி, நல்ல வேளையாக சிவா அண்ணா காப்பாற்றி விட்டார், நீ அண்ணானே கூப்பிடுமா என்றார் புண்ணியவான்). இப்படி நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுது

    “உங்கிட்ட ஐ பாட் இருக்கா” என்றான் அந்த பையன் பெயர் அனிருத். நான் எடுத்து கொடுத்தேன். அவன் பெரிசாக சிரித்து

    “இது ஒரிஜனல் செட் இல்லை டூபாகூர் செட்” என்றான்.

    “தெரியும்” என்று நான் சொல்வதை கூட கேட்காமல் என்னுடைய அறையில் என்னுடைய பொருள்களை நோண்ட சென்று விட்டான் அனு.

    “why did you buy these kind of duplicate products uncle" என்றாள் ஐஸ்ஸூ, அவள் இப்படி ஆங்கிலத்தில் ஆரம்பிப்பாள் என்று நான் நினைக்கவில்லை.

    “actually this i pod என்னுடைய friend பரிசா கொடுத்தான்” ஆச்சர்யத்தில் தங்ழிஷில் உளறினேன். நான் 5 வது படிக்கும் பொழுது என்னுடைய ஆங்கில ஆசிரியரை பார்த்து ஒரு பயம் வரும், அது இப்ப வந்து.

    “let it be uncle, we should not encourge these kind of products, and the peoples who are selling these things uncle" என்றாள் புருவத்தை தேய்த்தபடி.

    “ok darling, i swear on you that i wont do this mistake again" என்றேன். பரவாயில்லை பயம் ஒர் அளவு விலகிவிட்டது.

    அவள் அழகாக சிரித்துக் கொண்டு “i already started liking u uncle"

    ”உங்கிட்ட வீடியோ கேம்ஸ் சீடி இருக்கா” என்றான் கைகளை பின்னாடி கட்டிக் கொண்டு.

    “இல்லடா நான் என்ன சின்ன பையனா அதெல்லாம் விளையாட”

    “அப்ப இது என்ன” என்று தன்னுடைய கைகளை பின்னாடியில் இருந்து எடுத்தான். கை நிறைய சீடிகள், வீடியோ சீடிகள். கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன், ஐஸ்ஸூ வேற என்னை நாயை பார்ப்பது போல பார்த்தாள். எப்படி சமாளிப்பது

    “வெரி குட் டா, எப்படி கண்டுபிடிச்ச எங்க இருந்தது, இதை தான் நான் ஒரு வருஷமா தேடினு இருந்தேன் டா, எங்க அம்மாவும் அப்பாவும் எடுத்து ஒளிச்சி வச்சிட்டாங்க, கழுகு கண்ணு டா உனக்கு” சமாளித்தேன். அனுவுக்கு ஒரே பெருமிதம் அவனை புகழ்ந்து விட்டேன் திரும்பவும் எதையோ நோண்ட சென்று விட்டான், என்னுடைய அறையில்.

    “uncle can i get some water" என்றாள் ஐஸ்ஸூ.

    “தரேன், ஆனா அங்கிள்னு கூப்பிடாதே, அண்ணானு கூப்பிடு” என்றேன். தண்ணீயை கொடுத்தேன், குடித்து வாயை துடைத்துக் கொண்டு.

    “ஏன், கூப்பிட்டா என்ன” என்றாள்.

    “ஒண்ணும் இல்ல, நீ கூப்பிடும் போது, நான் பென்ஷன் வாங்கினு கட்டிலில் படுத்துக் கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுது” என்றேன்.

    “ஓஹோ, சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு பதில் சரியா சொன்னால் நான் உங்களை நீங்கள் சொல்ற மாதிரி கூப்பிடுகிறேன்” என்றாள்.

    மனதுக்குள் கீழிந்தது போ என்று நினைத்துக் கொண்டேன் “சரி ரெடி என்றேன்”. அவள் யோசித்து விட்டு “சரி நீங்க எந்த topic ல் கிளவர்”

    “புரியவில்லையே”

    “சயின்ஸா, ஜீகே வா, கரண்டு ஈவண்ட்ஸா, பாலிட்டிக்ஸா என்று அவள் அடிக்கிக் கொண்டு போக” நான் அவசரமாக குறுக்கிட்டு

    “சினிமா” என்றேன், அவள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள் பின்பு மூக்கை ஸ்டைலாக ஒரு முறை தடவிக் கொண்டு,

    “ஓகே here is your question, அரவிந்த்சாமியின் opposite என்ன?” என்றாள். நான் சிரித்துக் கொண்டு

    “அடுப்புல வெந்தசாமி” என்றேன். அவள்

    “ம்ஹூம், நான் உங்களை இனிமேல் அங்கிள்னு தான் கூப்பிடுவேன், அதுக்கு answer அரவிந்த் didnt see me” என்றாள். எனக்கு என்ன பதில் சொல்வதுனு தெரியவில்லை,

    “ஐஸ்ஸூ குட்டி இன்னொரு சான்ஸ் கொடுடா” என்றேன்.

    “சரி what will a cow give after an earthquake" என்றாள்.

    “பால்”

    “இல்லை”

    “தயிர்”

    “இல்லை”

    “கன்னுகுட்டி”

    “ஆஆ அப்படினா”

    “ஒண்ணும் இல்லை நீயே சொல்லு, எனக்கு தெரியலை”

    “MILK SHAKE" என்று சிரித்தாள். “உங்களை இனிமேல் நான் அங்கிள்னு தான் கூப்பிடுவேன் ஆஹா ஆஹா”.

    உள்ளே இருந்து வந்த அனு “அங்கிள் உங்ககிட்ட ஹோம் தியெட்டர் இருக்கா?” என்றான்.

    “என்கிட்ட ஹோமே இல்லை”

    “வாங்க வேண்டியது தானே அங்கிள்”

    “என்னடா டீ சாப்பிடற மாதிரி சொல்ற, என்னை அங்கிள்னு கூப்பிடாதே”

    “ சரி டா தக்ஸ்னா” என்றான் யோசிக்காமல், ஐஸ்ஸூ அதுக்கு சிரித்தாளே ஒரு சிரிப்பு, ஐய்யோ ஆண்டவன் படைத்ததிலே மிக அழகான படைப்பு பெண் குழந்தைகள் தான்.

    டிராப்பிக் அதிகமாக இருந்ததால் டாக்ஸி பொறுமையாக egmore வந்து சேர்ந்தது, எல்லா பைகளையும் இறக்கி வைத்து விட்டு பாலாஜீ சொன்னான்

    “மச்சி ஒரு குட் நியூஸ், ஒரு மாமா வரமாட்டேன்னு சொன்னாரு இல்ல”

    “ஆமா”

    “அவரு டிக்கெட்டை தானே உனக்கு தரதா சொன்னேன்”

    “ஆமா”

    “அவரு திடீர்னு வந்துட்டாரு”

    “அடப்பாவி, அப்போ எனக்கு”

    “புஸ்ஸுக்கு” என்று கையை கக்கத்தில் வைத்தபடி சிரித்துக் கொண்டே சொன்னான்.

    “மவனே மாப்பிள்ளைனு கூட பார்க்க மாட்டேன், செருப்ப கைட்டி வாயிலே அடிச்சிடுவேன்”

    “நீ ஷூ தானே போட்டுனு இருக்க”

    “நீ செருப்பு போட்டுனு இருக்கீயே”

    “நான் தர மாட்டனே”

    “டேய் என்ன டா விளையாடினு இருக்க, இப்போ டிக்கெட் இருக்கா இல்லையா சொல்லித் தொலடா தயிர் சாதம், உன்னை நம்பி வந்தேன் பாரு என்னை செருப்பாலே அடிச்சிக்கனும்”

    “இப்ப தருவேனே” என்று செருப்பை கழற்றினான்.

    நான் எப்படி ஸ்ரீரங்கம் போனேன்?, ஐஸ்ஸூவிடம் ஜெயித்தேனா?, பயங்கர பசியில் இருக்கும் பொழுது டீ ஸ்பூனில் சாதம் பரிமாறியவனை பார்த்து முறைத்தேனா? எல்லாம் விரைவில்.

    (தொடரும்..............)
    Last edited by ரங்கராஜன்; 29-06-2009 at 02:19 PM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    வழக்கமான நகைச்சுவை கலந்த உரையாடல்களுடன் தக்ஸின் ஸ்ரீரங்கத்துப் பயணம்... ஜமாய்ங்க.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    அனுபவத்தை நகைச்சுவையாக சொன்ன விதம் அருமை அண்ணா.. ஐஸ்வர்யா, ரொம்ப நல்ல பொண்ணு. உண்மைய எவ்வளவு அழகா அங்கிள்ன்னு சொல்லுறா. குட் கேர்ள்..
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எப்படிங்க மூர்த்தி உங்களால முடியுது.

    அச்சரம் பிசகாம படம் பிடிச்சிருக்கீங்க.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    தக்ஸ்.. உங்க பதிவு படிக்கும் போதெல்லாம் மனம் மகிழ்கிறது..

    நடந்ததை நேரில் நின்று பார்த்தால் நிச்சயம் வயிறு குலுங்க சிரித்திருப்பேன்.. அது போலவே இப்பதிவு படித்ததும்.. அதுலயும்
    என்னை பொறுத்தவரை சகமனிதனின் காலில் விழுவதே தவறு, அம்மா அப்பாவை தவிர (என்னுடைய பிற்காலத்தையும் கருதி, மனைவியையும் சேர்த்துக் கொள்ளலாம்).
    இவ்வரி படித்ததும் சிரிப்பு குபீரென்று வந்துவிட்டது..

    உங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நல்லாவே இருக்குங்க தக்ஸ்.. அந்த எதிர்கால மனைவிக்கு இப்பவே இவ்வளவு பயமா??!!

    அப்புறம்.. ஶ்ரீரங்கம் எனது பள்ளி காலத்தில் சென்ற நினைவு.. தங்களின் மூலம் அவ்வூரை மேலும் அறிய விழைகிறேன்..

    தொடருங்கள்.. ஐஸ் குட்டியும் அனிரூத்தும்(அனிரூத் என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் இப்படித் தான் அறிவாளிகளாக இருப்பார்களோ??!! கவனிக்க தாமரை அண்ணா.. ) உங்களை என்ன பாடு படுத்தினார்கள் அங்கிள் தக்ஸ்...!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    பாகம் 2

    நான் கடுப்பாகி என்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட ஆரம்பித்தேன், என் நண்பன் குறுக்கிட்டு

    “சரியான மிளகாய் பொடிக்கு பிறந்தவன் டா நீ, எப்ப பார்த்தாலும் ஏன் கோபப்படுகிறாய்” என்றான் சிரித்துக் கொண்டு. நான் மெளனமாக அவனை முறைத்தேன், அவனே தொடர்ந்தான்.

    “ஏண்டா அந்த மாமாவின் டிக்கெட் தான் இல்லைனு சொன்னேன், டிக்கெட்டே இல்லைனு சொன்னேனா?”

    “விளையாடாத டா, டிக்கெட் இருக்கா இல்லையா சொல்லு, இல்லைனா நான் போய் பஸ்ஸை பிடிக்கிறேன்”

    “இருக்கு டா, ஆனா........”

    “என்னடா ஆனா, எஞ்சின் டிரைவர் கூட வரணுமா?”

    “இல்லடா அது எங்க தாத்தா டிக்கெட்டு அவரு வரலை, அவர் டிக்கெட்டை கேன்சல் செய்யலை, நாம ஒண்ணு பண்ணலாம் லோக்கல் டிக்கெட் ஒண்ணு எடுத்துக்கலாம். நீ வந்து அந்த தாத்தா டிக்கெட்டில் படுத்துக்கோ, ஆனா.....”

    “என்னடா ஆனா”

    “ஒண்ணும் இல்லை அந்த தாத்தாவின் வயசு 87 டா, டிக்கெட் செக்கிங் வந்தா மாட்டிக்குவ டா” என்று சிரித்தான். எனக்கு தலையே சுத்தவது போல இருந்தது, நான் இதற்கு முன் ரயிலில் போகாததால் அதை பற்றிய முறைகள் தெரியவில்லை. பாலாஜீயை பார்த்தேன்.

    அவன் “மச்சான் கவலை விடு மொத்தம் 56 டிக்கெட்டு, தனி தனியா செக் செய்ய மாட்டான் டா, சரி வா காபி சாப்பிடலாம்” என்றான். எனக்கு உள்ளுக்குள் பயமாக தான் இருந்தது.

    அதுக்குள் அனு என்னிடம் வந்து “அங்கிள் உங்க செல்போன்ல GPRS இருக்கா”.

    “ஆடம் பாம் தான் இருக்கு, என்னை அங்கிள்னு கூப்பிடக்கூடாதுனு சொல்லி இருக்கேன் இல்ல”

    “சாரி டா மறந்துட்டேன், சரி உன் செல்போனை கொடு” என்றான், பக்கத்தில் இருந்த ஒரு மடிசார் மாமி என்னை பார்த்து சிரித்து விட்டது.

    “மகனே இன்னைக்கு ராத்திரி உன்னை ரயில் இருந்து தள்ளி விடல, நான் அங்கிள் இல்லடா, ச்ச............... தக்ஷ்னா இல்ல டா”

    “சரி டா” என்று கூறிவிட்டு அனு கிளம்பி விட்டான். ரயிலுக்கு வந்த சொந்தகாரர்களை மூன்று வகையாக பிரிக்கலாம், ஒன்று நம்மை மாதிரி சாதாரண ஆட்கள் அதாவது சகஜமாக பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு. இரண்டாவது உலக ஜோக் அடிச்சாலும் புருவத்தை தூக்கிக் ஒரு முறை முறைத்துவிட்டு செல்வது, அதாவது எல்லா விதத்திலும் ஹய் கிளாஸ், படிப்பு, பணம், வாழ்க்கை முறை எல்லாவற்றிலும். மூன்றாவது பேச ஆரம்பித்தால் நிறுத்துவது கிடையாது, உள்ளூர் அரசியலில் இருந்து ஓபாமா வரை, காய்கறியில் இருந்து ராக்கெட் வரை சம்பந்தம் இல்லாமல் பேசுவது, இதிலே இன்னொரு வகை சித்த ஸ்வாதீனம் இல்லாமல் இருப்பது, பாவம் இந்த ஜாதியில் (மன்னிக்கவும்) 50 க்கு ஐந்து பேர் அப்படி கண்டிப்பாக இருக்கிறார்கள், ஏன்? எதாவது ஜீன் கோளாரா?, இல்லை எதாவது சாபத்தின் மிச்சமா? ஸ்ரீரங்கத்தில் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள், நான் இருந்த இரண்டு நாளில் நிறைய பார்த்தேன். ரயில் வந்தது, என்னை முதலில் ரயிலில் ஏறி சீட்டுகளை பார்க்க சொன்னான், என்னிடம் ஒரு காகிதத்தை கொடுத்து சீட்டை பார்க்க சொன்னான், அந்த காதிதத்தை பார்த்தேன் சீட்டு நம்பர்கள் எழுதி இருந்தது.

    “1, 7, 21, 12, 65, 31, 71, 59........................” இப்படி இருந்தது நம்பர்கள் அந்த சீட்டில். எனக்கு கடுப்பாகி விட்டது, பின்னாடி இருந்த பாலாஜீயிடம்

    “எந்த கேனையன் டா டிக்கெட் புக் பண்ணது” என்றேன்.

    “ஏம்பா நான் தான்” என்றார் பாலாஜீயின் அப்பா என்னுடைய பின்னாடியில் இருந்து. நான் திடுக்கிட்டவனாக திரும்பி பார்த்தேன், பாலாஜீ ரயிலுக்கு வெளியே நின்றுக் கொண்டு இருந்தான்.

    “ஒண்ணும் இல்லை, சீட்டு எல்லாம் தள்ளி தள்ளி இருக்கேனு கேட்டேன்” என்று குழைந்தேன்.

    “எல்லாருக்கும் ஜன்னல் சீட்டு புக் செய்து இருக்கேன், எப்படி?” என்று சிரித்துக் கொண்டார் பெருமையுடன். நான் பதிலுக்கு சூப்பர் என்று என்னுடைய மூன்று விரலை காட்டி விட்டு பாலாஜீயிடம் கேட்டு ஒரு சீட்டில் போய் அமர்ந்தேன், அது upper birth சீட்டு, என்னுடைய உடலை குறுக்கி, பாம்பு புற்றுக்குள் போவது போல போய் படுத்தேன், மின்விசிறி காலுக்கு நேராக இருந்தது, முகம் வேர்த்தது, மறுபடியும் அந்த சைடு திரும்பி படுத்தேன் கால் இடித்தது. என்னுடைய பையில் இருந்து சுஜாதாவின் கடவுள் புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினேன்.

    “அங்கிள் அங்கிள்” என்று ஐஸ்ஸூவின் குரல் கேட்டது, படுக்கையில் இருந்து திரும்பி பார்த்தேன்.

    “you didnt tell me good night” என்றாள் முகத்தை சுருக்கிக் கொண்டு.

    “சாரி டா கண்ணா மறந்துட்டேன், குட் நைட் டீ செல்லம்” என்று அவள் கன்னத்துகிட்ட கையை கொண்டு சென்றேன், எட்டவில்லை எனக்கு. அவள் உடனே சீட்டின் மீது ஏறி என்னுடைய விரல்களுக்கு நடுவில் அவள் கன்னத்தை வைத்தாள் நான் ஆசையாக அவளின் கன்னத்தை கிள்ளி என்னுடைய உதடுக்கு கொண்டு வருவதற்குள், படுக்கையில் என் கை தடுக்கி அந்த கன்னம் அப்படியே காற்றில் கலந்து போனது. வேறு வழியில்லாமல் வெறும் விரல்களை மட்டும் என்னுடைய உதட்டில் வைத்து முத்தம் கொடுத்தேன்.

    “பாய் அங்கிள்”

    “no uncle, say anna" என்றேன்.

    “ok answer this question, if a shirt takes one hour to dry, then how much time will 10 shirts take? answer it in one second” என்று அவசரப்படுத்தினால். நான் உடனே

    “ten hours” என்றேன், அவள் சிரித்துக் கொண்டு, “you are always uncle for me குட் நைட் அங்கிள்" என்று சொல்லிவிட்டு, அழகாக இலையில் இருந்து பனி உருண்டு போவது போல, குலுங்கிக் கொண்டு போகும் ரயிலில் இவள் சென்றாள்.

    மனம் ஒருவிதமான சந்தோஷமாக இருந்தது, புத்தகம் படிக்கும் விருப்பம் போய்விட்டது, ஒரு நாவலை படித்த பிரமையை அந்த குட்டி தேவதை கொடுத்து விட்டு சென்று விட்டாள். அவளிடம் தோற்கும் பொழுது சந்தோஷமாக தான் இருக்கிறது. 14 வயதில் இருந்து துணியை தோய்ப்பவனுக்கு துணி காயும் நேரம் தெரியாமலா இருக்கும்?. தெரியும், என்னுடைய அறிவை அந்த குட்டி தேவதையிடம் காட்டி அவளின் சந்தோஷ இறகுகளை உடைக்க நான் தயாராக இல்லை, என்னுடைய முட்டாள் தனத்தில் இருந்து அவள் முகத்தில் ஆயிரம் ஆயிரம் பூக்கள் பூக்கிறது, அதை பார்க்க கண்கள் கோடி வேண்டும். இவர்கள் அப்பா அம்மாக்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள், அவர்கள் குழந்தைகளின் குறும்புகளை 24 மணி நேரமும் கூடவே இருந்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் தானே. எனக்கு எப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கும், என்னுடைய காதல், என்னுடைய பாசம், என்னுடைய வருங்காலம் எல்லாம் தொலைந்து சில மாதங்கள் ஆகிறது, ஜனவரியில் கல்யாணம் ஆனது. 1, 2, 3, 4 மாதம் ஆகிறது. அவளுக்கு எதாவது நல்ல செய்தி நடந்து இருக்குமா?, பிறக்கப்போகும் குழந்தையை பார்க்க என்னை அழைப்பாளா? ச்ச எப்படி அழைப்பாள்? அழைக்கமாட்டாள்?. நான் பஸ்ஸில் போகும் பொழுது என்றாவது ஒரு நாள், காரில் இருந்து அவள் தன்னுடைய குழந்தையுடன் இறங்குவாள். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். மனது என்ன என்னமோ நினைக்க ஆரம்பித்தது.

    என்னுடைய பாக்கெட்டில் i pod ஐ எடுத்து இயக்கினேன்,

    நானாக நானில்லை தாயே ........ வேண்டாம் அடுத்து.

    முதல் முதலில் பார்த்தேன்............ வேண்டாம் அடுத்து.

    மேகம் கருக்குது மழை வர பாக்குது, வீசி அடிக்கிது காத்து.................., முகத்தில் வியர்த்து கொட்டுகிறது, இருக்கிற எரிச்சலில் இந்த பாட்டா, ஐய்யோ வேண்டவே வேண்டாம் அடுத்து.

    மின்னலே நீ வந்ததேனடீ................. என்னை அறியாமல் கண்கள் சொருக ஆரம்பித்தது.

    என் கண்ணிலே ஒரு காயம் என்ன டீ

    என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்ன டீ, (கண்கள் முழுமையாக என்னை தூக்கத்திற்கு இழுத்து சென்றது)

    சில நாழிகை நீ வந்து போனது, என் மாளிகை அது வெந்து போனது,

    ஓ மின்னலே .............................


    கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே .............. (முழு தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்), ஆனால் மனதில் ஒரு ஓரத்தில் ச்ச நாம் தூங்கி எழும் பொழுது 4 வருஷம் பின்னாடி போய் இருந்தால் எப்படி இருக்கும், என்று நினைத்தேன்.

    கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே, இன்று சிதறிப்போன சீல்லில் எல்லாம் உனது பிம்பமே

    கண்ணீரில் தீ வளர்த்து காத்து இருக்கிறேன், உன் காலடி தடத்தில் நான் பூத்து இருக்கிறேன்.................(இது தான் நான் தூங்கும் முன்பு கடைசியாக அந்த பாடலில் கேட்ட வார்த்தை. அசதியில் அப்படியே உறங்கி போனேன், கொஞ்ச நேரத்தில் காதில் எதோ அலறல் பாட்டு சத்தம் கேட்டது,

    “12 வயசில் மனசில் பட்டாம்பூச்சி பறக்குமே
    லவ்வில்ல அதன் பேர் லவ்வில்ல

    கண்ணை பார்த்து பேசசொல்ல கழுத்துக்கு கீழ் பார்க்குமே
    லவ்வில்ல அதன் பேர் லவ்வில்ல

    இதுக்கு ஏன் உசுற புடுங்கனும், எதலையும் புரிஞ்சி நடக்கனும்
    காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா, இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா ஆஆஆஆஆ

    ஆள்வார்பேட்டை ஆண்டவா வெடியை போட்டு தாண்டவா.....”


    ஐந்து நிமிடத்திற்கு முன் இருந்த மனநிலையை ஒரு நொடியில் இந்த பாடல் மாற்றிவிட்டது, என்னை அறியாமல் நான் தூக்கத்தில் சிரித்தேன். யாரோ என்னுடைய தோளை தொட்டு எழுப்புவது போல இருந்தது, கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து திரும்பி பார்த்தேன்.

    “டிக்கெட் டிக்கெட்” என்று TTR என்னை பார்த்தபடி நின்றுக் கொண்டு இருந்தார், அப்பொழுது தான் நான் ரயிலில் இருக்கிறேன் என்ற நினைவு வந்தது, பாக்கெட்டை தடவினேன், கொஞ்ச கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்தேன், டிக்கெட் வாங்கினா தானே பாக்கெட்டில் இருக்கும். என் காதில் வேற

    “ஐய்யய்யோ இதுக்கா அழுவுற
    லைப்புல ஏண்டா நழுவுற.......”


    ச்ச என்று என்னுடைய காதில் இருந்து head set எடுத்து கீழே வைத்தேன். அவர் என்னை தீவிரமாக பார்க்க ஆரம்பித்தார், அவர் பின்னாடி வேற இரண்டு குண்டு போலீஸ்காரர்கள் அந்த இடத்தையே அடைத்தது போல நின்றுக் கொண்டு இருந்தார்கள், ஓடவும் முடியாது.

    (தொடரும்........)
    Last edited by ரங்கராஜன்; 05-05-2009 at 03:27 PM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தேவதைகள் எப்போதும் அழகான நாட்களைப் பரிசளிப்பார்கள். குட்டித் தேவதைகள் அதில் மிக வல்லவர்கள்.

    உங்கள் நினைவுகளுடன் உறவாட வைக்கும் அளவுக்கு நெருக்கம் காட்டுகிறது எழுத்து. தொடருங்கப்பு.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    சூப்பர் அண்ணா.... மறுபடியும் காதிலியின் நினைவா?
    TTR வந்தார். அப்புறம்? மாட்டுனீங்களா மாட்டுனீங்களா மாட்டுனீங்களா?
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    சூப்பரப்பு...
    உணர்ச்சிப்பூர்வமா அழகாய் எழுதுறீங்க. அதுவும் ஐஸூடன் உங்க உரையாடல்கள் கலக்கல்..

    திடீர்னு ஏன் எதையெதையே நினைச்சுக்கிட்டு..

    சீக்கிரம் தொடருங்க.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    தக்ஸ் உண்மையிலேயெ இது மாதிரி லயித்து எழுதுவதற்க்கு சில பேரால்தான் முடியும். அருமை... என்றுமே குட்டி தேவதைகளோடான நிமிடங்கள் ரசனைகுறியவை அதிலும் ஐசு,அனு போன்ற அறிவானவர்களிடம் மாட்டிக்கொண்டால் அதோ கதிதான்.... உங்கள் காதலின் வலியை உணர முடிகிறது....

    தொடருங்கள்... காத்திருக்கிறோம்...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    பாகம்- 3

    நான் பேந்த பேந்த விழித்ததை பார்த்து, டி.டி.ஆருக்கு சந்தேகம் வந்து விட்டது, அவர் போலீஸ்காரர்களை திரும்பி பார்த்தார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கீழே படுக்கையில் இருந்த ஒரு மாமா (எங்க கல்யாண குரூப்) பார்த்துக் கொண்டு இருந்தார். நான் உடனே

    “சார் அந்த கல்யாண குரூப்புடன் தான் வந்து இருக்கேன் சார்”

    “சரி டிக்கெட் எடுங்க”

    “அது மாப்பிள்ளைக் கிட்ட இருக்கு”

    “மாப்பிள்ள எங்கு இருக்கார், டிக்கெட் எடுத்துனு வரச்சொல்லுங்க”. நான் அவசர அவசரமாக போன் செய்தேன், எடுத்தான்,

    “டேய் கடங்காரா, சீக்கிரம் வா டா டி.டி.ஆர் வந்து இருக்கார் டா”

    “ஒரு நிமிஷம் இருடா”

    “நான் இருப்பேண்டா, டி.டி.ஆர் இருக்க மாட்டார் டா, (என் வாயில் கையை வைத்து மறைத்துக் கொண்டு) டேய் போலீஸ் வேற வந்து இருக்காங்க டா”

    “சரி வரேன் வையீ போனை” என்று கூறிவிட்டு சற்று நேரத்தில் வந்தான்.

    “சார் இவன் நம்ம செட்டு தான், வாங்க எல்லா டிக்கெட்டும் என்கிட்ட தான் இருக்கு” என்றான்.

    “ஏன் மாமா நீங்களாவது சொல்லக்கூடாதா?” என்றான் பாலாஜீ கீழ் பர்த்தில் படுத்து இருந்த மாமா வை பார்த்து.

    “எனக்கு இவாள தெரியாதே” என்றார், உடனே அவன்

    “நம்ம கூடவே தானே வந்துட்டு இருக்கான், பார்த்தேலேன்னோ” கடுகடுத்தான்.

    “நம்ம கூடவே பலப்பேர் வரா, எல்லாரையும் ஞாபகம் வச்சிக்க முடியுமா என்ன?” என்றார், அவருக்கு பதில் சொல்ல சென்ற பாலாஜீயை நான் தடுத்து

    “விடுடா மாமா என்ன பார்த்து இருக்க மாட்டார்” என்று கூறிவிட்டு, அவரை பார்த்து மகனே இரு உன்னை வச்சிக்கிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டேன், எல்லாரும் சென்று விட்டனர். நானும் பாலாஜீயுடன் அவன் இடத்துக்கு சென்றேன் ஐஸ்ஸூவை பார்ப்பதற்கு,
    அந்த தேவதை இறக்கைகளை மடித்தபடி தன் அம்மாவை கட்டி பிடித்தபடி தூங்கிக் கொண்டு இருந்தாள், எனக்கு மட்டும் கவிதை எழுத தெரிந்து இருந்தது, அதே இடத்தில் 100 கவிதைகள் எழுதி இருப்பேன் அந்த அழகை பார்த்து. அவள் ஒரு கையை தன்னுடைய வாயிலும்
    மற்றோரு கையால் தன்னுடைய அம்மாவின் கழுத்தையும் இறுக்க கட்டிக் கொண்டு, ஒரு காலை தன் அம்மா மீது போட்ட படி, அவள் நெற்றியில் கொஞ்சம் முடி படர்ந்து, புழுக்கத்தில் வாய்க்கும் மூக்கும் நடுவில் வியர்த்து இருந்தது. நம்முடைய மனதுக்கு அழகு என்று பட்டுவிட்டால்
    எல்லாமே அழகாக தான் தெரிகிறது, அவள் கன்னத்தை கிள்ள வேண்டும் போல தான் இருந்தது, மாறிப்போய் இருட்டில் அவங்க அம்மா கன்னத்தை கிள்ளிவிட்டாள் பிரச்சனையாகி விடும் என்று கிள்ளாமல் விட்டு விட்டேன். அனிரூத் மேல் பர்த்தில் வவ்வாலு போல கை, கால்களை, அந்தரத்தில் தொங்க விட்ட நிலையில் உறங்கிக் கொண்டு இருந்தான். மறுபடியும் என்னுடைய இடத்துக்கு வந்தேன், எல்லா லைட்டையும் நிறுத்தி இருந்தார்கள் இருட்டாக இருந்தது, ஆனாலும் கொஞ்சம் கண் தெரிந்தது, மேலே ஏறி நான் படுக்க வேண்டும், கீழே படுத்துக்கு கொண்டு இருந்த அந்த டகால்டி மாமாவின் கால் லை பார்த்து சரியாக ஒரு மிதி
    மிதித்தேன்.

    “ஆஆஆஆஆ”

    “சாரி மாமா, தெரியாம பட்டுடுத்து”

    “ஏண்டா கண்ணு இருக்கா இல்லையா நோக்கு .......(கடைசியாக எதோ ஒரு வார்த்தையை அவர் பாஷையில் திட்டினார், புரியவில்லை)”

    “லைட் இல்ல மாமா”

    “காலை மெறிச்சிட்டீயே”

    மனதுக்குள் “சாரி மாமா மூஞ்சுனு நினைத்து காலை மெறிச்சிட்டேன்” என்று சொல்லிக் கொண்டு என்னுடைய புற்றில் போய் படுத்தேன். எப்பொழுது தூங்கினேன் என்று நினைவு இல்லை இரவு நல்ல தூக்கம். காலையில் என்னுடைய காது ஓரமாக யாரோ வந்து

    “பாம்பே வந்துடுத்து இறங்குங்கோ இறங்குங்கோ” என்ற ஒரு ஆணின் குரல் கேட்டது, ஒரு நிமிடம் யோசித்து, ஐய்யோ நான் திருச்சி தானே போகணும், என்று நினைத்துக் கொண்டு திடுக்கிட்டு எழுந்த வேகத்தில் டிரைனின் கூரையில் இடித்துக் கொண்டேன்,

    கீழே இருந்த அனிரூத் பலமாக சிரித்துக் கொண்டு “ஏமாந்த ஃப்பூல் ஏப்ரல் ஃப்பூல்” என்று கைத்தட்டி சிரித்தான், எனக்கு தூங்கும் பொழுது எழுப்பினாலே பிடிக்காது, அதுவும் இதுவரை என்னை இப்படி அடிக் கொடுத்து யாரும் எழுப்பியது இல்லை, காலையிலே என்னை
    கிளப்பி விட்டான்,

    “டேய் சாத்தானே, கீழே இறங்கி வந்தேன், உன் மூஞ்சை அப்படியே தரையில் வைத்து தேய்த்து விடுவேன்” என்றேன். அவன் சிரித்துக் கொண்டே

    “நீ வருவதற்குள் நான் திருச்சிக்கே போய்டுவேன் மச்சான்” என்றான்.

    “என்ன மச்சானா, மகனே இரு வரேன்........” என்று எழ முற்பட்டேன், அவன் கூறியது சரி தான் என்னால் உடனடியாக எழுந்துக் கொள்ள முடியவில்லை, சுற்றளவு அதிகமாகிவிட்டதுனு அப்போ தான் உணர்ந்தேன், எதோ கஷ்டப்பட்டு இறங்கினேன், அவன் அதற்குள் சிட்டாக பறந்து விட்டான். திருச்சி வந்தது, போர்ட்டர்கள் மொய்க்க ஆரம்பித்தார்கள், பெட்டி படுக்கைகளை தூக்க ஆரம்பித்தார்கள், வெளியே கொண்டு வந்து வைத்தார்கள், இரண்டு வேன் வந்து இருந்தது, நான் முதலில் போய் உக்கார்ந்தேன், எல்லாரும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தார்கள். இரண்டு பேருக்கு இடம் இல்லை, அது அனிரூத்தும், ஐஸ்ஸூவும். ஐஸ்ஸு காலையில் எழுப்பி விட்ட கடுப்பில் முகம் சிறுத்து இருந்தது, அதுவும் வேனில் இடம் வேற இல்லை, இன்னும் சுருங்கிவிட்டது.

    “ஐஸ்ஸூம்மா வா என் மேல உக்கார்ந்துக் கொள்” என்றேன், அவள் ஆசையாக வந்தாள், அதுக்குள் அந்த சாத்தான் வந்து “நான் தான் அங்கிள் கூட உக்காருவேன், நீ அம்மா கூட உக்கார்ந்துக் கொள்” என்று அவளை தள்ளிவிட்டு என்மீது வந்து லாரி புளியமரத்தில் சாய்வது போல
    சாய்ந்தான். எனக்கா கடுப்பு, பூனையை மடியில் கட்டினாலே தப்பு, ஆனால் நான் வானரப்படையையே மடியில் உக்கார வைத்து இருந்தேன், அவன் பார்ப்பதை எல்லாம் விவரித்துக் கொண்டு இருந்தான்

    “லாஸ்டு டைம் நான் இங்க வந்த போது காவேரியில் குளித்தேன், நீ குளிச்சி இருக்கீயா”

    “இல்ல டா”

    “அம்மா இந்த அங்கிள் குளிச்சதே இல்லையாம் ஹா ஹா ஹா” என்று சத்தமாக சிரித்தான். அவனை அப்படியே ஓடுற வண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்டனும் போல இருந்தது, அவன் விழும் பொழுது கண்டிப்பாக என்னையும் இழுத்துக் கொண்டு தான் விழுவான், அந்த பயத்தால் அவனை தள்ளாமல் விட்டு விட்டேன்

    “சரி நீ ஆனந்த தாண்டவம் படம் பார்த்தீயா” என்றான்.

    “ம்ம்”

    “எப்படி இருந்தது”

    “தியெட்டர்ல ஒரே பிணக்குவியலாக இருந்தது, படம் பார்ப்பவர்கள் எல்லாரும் அவங்க பெல்ட்டை அவுத்து ஆன் தி ஸ்பாட்டிலே தூக்கு மாட்டீக்கிறாங்க”

    “பேய் படமா”

    “கிட்ட தட்ட”

    “ரொம்ப பயமாக இருக்குமா?”

    “இல்லை, பாவமாக இருக்கும்”

    “யாரை பார்த்து”

    “ஆடியன்ஸை பார்த்து”

    “அப்ப நல்லாயில்லையா படம், நான் இன்னும் பார்க்கவில்லை, அப்பா அழைச்சிண்டு போக மாட்றா”

    “தமன்னாவுக்காக ஒரு முறை பார்க்கலாம்” என்றேன், அவன் திடீர்னு திரும்பி தன் அப்பாவை நோக்கி

    “அப்பா ஆனந்த தாண்டவம் படம் தமன்னாவுக்காக ஒருமுறை பார்க்கலாம்மாப்பா அங்கிள் சொல்றாரு” என்று நான் வாயை பொத்துவதற்குள் கடகடவென சொல்லி விட்டான், எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். சொல்லி விட்டு என்னை நோக்கி

    “சரி அயன் பார்த்திட்டீயா” என்றான். வம்பே வேண்டாம் என்று நான் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு “இல்லை” என்றேன்,

    “அதுல தான் தமன்னா சூப்பர் ஆக்டிங் டா மச்சான்” என்றான் என்னுடைய காது கிட்ட வந்து.

    “டேய் நான் உன்னைவிட 10 வயசுக்கு மேல பெரியவன் டா, கொஞ்சமாவது மரியாதை கொடுடா”

    “எப்படி பார்த்தாலும் நீ நம்ப பையன் டா மச்சான்” என்று சிரித்தான். ஆண்டவா இந்த மாதிரி சில்லரை பசங்க கிட்ட எல்லாம் என்னை மாட்டி விடறய்யே என்று மனதுக்குள் புழுங்கினேன், சத்திரம் வந்துவிட்டது எல்லாரும் இறங்கினார்கள்.

    மேலே இருக்கும் அறைக்கு சென்றேன், குளித்து விட்டு சுஜாதா ஐயாவின் வீட்டை பார்க்க வேண்டும் அதுதான் என்னுடைய லட்சியமாக இருந்தது, சீக்கிரமாக என்னுடைய பையை ஒரு அறையில் வைத்து விட்டு குளிக்க சென்றேன், அறையில் குளியல் அறை இல்லை, வெளியே வந்தேன் எதிரில் பொது குளியல் அறை இருந்தது, நல்ல பெரிய அறையாக இருந்தது, கும்பல் கும்பலாக குளிப்பார்களோ?, எதுக்கு இவ்வளவு பெரிய குளியல் அறை என்று யோசித்தவாரே உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டு தலையில் தண்ணீரை எடுத்து ஊற்றினேன், கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது

    “யாரு உள்ளே” என்று ஒரு வயதானவர் குரல்.

    “நீங்க யாரு”

    “நான் வாட்ச்மேன், நீங்க”

    “நான் ஓனர்”

    “யாரு”

    “கல்யாண வீட்டு மனுஷா”

    “அது சரி, பாத்திரம் கழுவுற இடத்தில சாத்திண்டு என்ன பண்றேள்”

    “என்னது பாத்திரம் கழுவுற இடமா”

    “ஆமாம் வேளையாள் வந்து இருக்கா சீக்கிரம் கதவை திறங்கோ”

    நாசமா போச்சு என்று நினைத்துக் கொண்டு, போட்ட சோப்பை அப்படியே துண்டில் துடைத்துக் கொண்டு, வெளியே எட்டி பார்த்தேன்.

    “என்ன குளிக்கிறேளா? இங்கையா” என்று கத்தினார்.

    “மாமா கத்தாதீங்கோ, அந்த பொம்மணாட்டிகளை சத்த தூரம் போக சொல்லுங்கோ” என்றேன், அவர் எதோ சொன்னார், அவங்க தலையில் அடித்துக் கொண்டு போனார்கள். வெளியே வந்தேன். நான் யார் கண்ணில் படக்கூடாதுனு நினைத்து இருந்தேனோ, அந்த வேண்டுதளில் இடிவிழுந்தது போல கதவுக்கு வெளியே அனிரூத் நின்றுக் கொண்டு இருந்தான், அதுவும் கையில் என்னுடைய மொபைலுடன், கண் இமைக்கு நேரத்தில் இரண்டு படம் வேறு எடுத்து விட்டான். துரத்திக் கொண்டும் ஓட முடியாது, அதற்குள் அவன் கத்திக் கொண்டு கீழே ஓடினான்.

    “அம்மா இந்த அங்கிள்...................”

    “டேய் டேய் அம்மாகிட்ட காட்டிடாதடா, அப்பாகிட்ட வேண்டுமானாலும் காட்டிக்கோ” என்று நான் மனதுக்குள் சொன்னது அவன் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

    (தொடரும்)
    Last edited by ரங்கராஜன்; 08-05-2009 at 04:13 PM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஹஹ்ஹா. வாண்டுக் கூட்டமும் வண்டுக் கூட்டமும் ஒன்று. நீங்க நடந்தா ஊர்வலம் படுத்தாப் பொதுக்கூட்டம் ரேஞ்சில இருந்திருக்கீங்க. அனிருத் என்கிற ஒற்றை வாண்டு வண்டுக்கூட்டமா இருந்திருக்கு. கலகலப்பை சற்றும் குறைக்காமல் அப்படியே தருகிறீர்கள் தக்ஸ். ஆமா நான் இருக்கும் நேரத்தில் பாகங்களைப் போடுகிறீர்களே. சொல்லி வைச்சா செய்கிறோம்.

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •