பதிலுக்கு பதில் தருவதாக நினைக்க வேண்டாம் நண்பரே, மனதில் தோன்றியதை சொல்கிறேன்.
அவர் அடைந்திருக்கும் முதல்வர் பதவி என்பது நியமனபதவி அல்ல, அவர் தேர்தலில் வெல்லாமல் மேல்சபை மூலம் முதல்வராக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் கொடுத்தது அது. அவர் ஆசைப்பட்டாலும் தமிழக மக்கள் அனுமதிக்காமால் அவர் அந்த பதவியில் அமர முடியுமா?. இந்த தள்ளாத வயதிலும் திட்டங்கள் தீட்டுவதிலும் அதனை செயல்படுத்துவதிலும் மற்றவர்களுக்கு முன் உதராணமாக இருக்கிறார். சமீபத்தில் இலங்கையில் அல்லற்படும் மக்களுக்கு நிவாரண பொருட்களை பேக் செய்து அனுப்பும் இடத்திற்கு நேரிலே மோட்டார் நாற்காலியில் சென்று பார்த்து அனுப்பினார். அவர் வயோதிகத்தை காரணம் காட்டி ஏதாவது செய்யாமலிருக்கிறாரா என்று சொல்லுங்கள்.
இதற்கு முன் ஒரு முதலமைச்சர் பேசக்கூட முடியாமல் இருந்தாரே, அப்போதெல்லாம் இந்த கேள்வி எழுந்ததா?. கருணாநிதி என்றால் இலங்கை தமிழருக்கு இளக்காரம் தான். இவர் முன்பு பிறந்த நாள் நிதியில் இருந்து பணம் ஒவ்வொரு ஈழ இயங்கங்களுக்கு கொடுத்த போதும் ஒரு இயக்கம் மட்டும் அண்ணன் கோவித்து கொள்வார் என்று வாங்க மறுத்தது மறந்து போய் விட்டதோ, எட்டி உதைத்த காலுக்கும் முத்தம் கொடுக்க நினைத்தவர் தான் கலைஞர்.
Bookmarks