Page 1 of 10 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 116

Thread: : வெயில் கவிதைகள் :

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    : வெயில் கவிதைகள் :

    ஓடு பிளந்து பாயும்
    மின்சாரத்தைப் போல
    வெயிலாயுதம் தாக்குகிறது
    சூரியபழம்
    கொறிக்கமுடியாத கொதிப்பில்
    மிதந்து கிடக்கிறது
    முழுத் தொண்டையும் வறண்டு
    இரவை மண்நாக்கால் நக்கிவிட
    பாலை மின்னுகிறது
    கண்ணாடித் துகள்களென
    வெம்மையின் பிம்பங்கள்
    கூச்சிடும் சப்தத்தில்
    கதறிக் கொண்டிருக்கின்றன
    சர்ப்பங்கள் ஊறுவதாக
    கொப்பளித்த பாதங்களைத் தேடி
    மண் அலைகிறது ; அதனை
    தன் பையில் பத்திரப்படுத்திக் கொள்கிறது
    எத்தனை சேகரித்திருப்போமென
    கணக்கேதுமற்று மணல் முன் செல்கிறது
    அதற்குத் தெரியப் போவதில்லை
    தொடர்ந்து வரும் பெரும்புழுதி
    கொப்பளப்பாதங்களின் சுவடுகளை
    காகிதங்களெனக் கிழித்து வருவதை.

    --------------------------------------

    கதிரவன் உக்கிரம்
    இளநீர் தணிப்பு
    சனிநீராடல்
    பருத்தி மேற்தோல்
    கம்பங்கூழ் குளுமை
    தர்பூசணி காப்பான்
    ஐஸ்க்ரீம் தேவதை
    வியர்வை மழை
    மின்சார பழுது
    வெக்கை ஆடை
    வெப்பக் குளியல்
    அவள் கண்ணசைவு
    விறைக்கும் சூரியன்

    ---------------------------------
    நீங்களும் தொடரலாமே!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பின்னிரவின் பெருமழையில்
    சூரியன் ஒழுகி
    துளிகளுக்குள் கரைந்திருந்தது
    வானவெளி வெறும் சூன்யத்தால்
    நிரம்பிக் கிடந்தது
    குளிர்காட்டின் முரட்டுத்தாக்குதலில்
    சிதறிக்கிடந்தன வெப்பத்துகள்கள்
    அள்ளியெடுக்க ஆவலோடு சென்றேன்
    பின்னங்கழுத்தில் குத்திவிட்டு
    புறமுதுகிட்டோடியது
    வெயில்.
    Last edited by ஆதவா; 27-04-2009 at 06:02 AM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பிம்பமாக அலைகிறது வெப்பம்
    அது துப்பிய கோபத்தில்
    கொதிக்கிறது தண்ணீர்
    அவமானக் கறைகள்
    ஆவியாக வெளியேறுகிறது
    உனக்கு சற்றும் பிடித்திருக்கவில்லை
    கோபத்தால் தண்ணீர் கலைக்கிறாய்
    நீர்முழுக்க சிதறிக் கிடக்கிறது
    சூரியன்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மிகக் கிட்ட நெருங்குகிறாய்
    உன் நாசியின் அக்கினியில்
    என் காமம் கண்களில் கொப்பளிக்கிறது
    உலர்ந்து கசிந்த உன் சொற்கள்
    என் துவாரங்களை மெல்ல திறக்கிறது
    உன் மார்பு ஏந்திய வெப்பம்
    மிதமான புல்லரிப்பில் அழுத்துகிறது
    உன் வியர்வை ருசியாக இருக்கிறது
    நம்மிருவருக்குமிடையே வெப்பம்
    ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது
    முன்பிருந்த நடுக்கம் இப்பொழுதில்லை
    நம்மிரு உடல்களும் இணைந்து
    எழுதிக் கொண்டிருக்கிறது
    ஒரு வெயில் கவிதை.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    என்னால் தொடர முடியாது ஆதவா.

    வெயில் காலம் இன்னும் வரவில்லை.

    நல்லா இருக்கு.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    ஆதவ் அண்ணா... கவிதை அத்தைனையும் அருமை...

    வெயிலையும் அமர் அண்ணா....! வெயில் காலம் இன்னும் வரவில்லையா? வெயில் இங்கே மண்டையை பிளக்குது...

    அடிக்கிற வெயிலில் மூளையே உருகிப்போயிரும்.. இதில் எங்கே கவிதை வர்றது...
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by samuthraselvam View Post

    அடிக்கிற வெயிலில் மூளையே உருகிப்போயிரும்.. இதில் எங்கே கவிதை வர்றது...

    அதான் இங்க வழிஞ்சிருக்கு...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    அதான் இங்க வழிஞ்சிருக்கு...
    ஆதவ் அண்ணா... உங்களுக்கு தான் சொல்லுறாரு....
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    என்னால் தொடர முடியாது ஆதவா.

    வெயில் காலம் இன்னும் வரவில்லை.

    நல்லா இருக்கு.
    அட பரவாயில்லைங்க. நீங்க எட்டிப் பார்த்தாலே போதும்!!!

    Quote Originally Posted by samuthraselvam View Post
    ஆதவ் அண்ணா... கவிதை அத்தைனையும் அருமை...

    வெயிலையும் அமர் அண்ணா....! வெயில் காலம் இன்னும் வரவில்லையா? வெயில் இங்கே மண்டையை பிளக்குது...

    அடிக்கிற வெயிலில் மூளையே உருகிப்போயிரும்.. இதில் எங்கே கவிதை வர்றது...
    ரொம்ப நன்றிங்க. என்னை அண்ணான்னு கூப்பிடாதீங்க சகோதரி. உங்களை விட ரொம்ப இளையவன் நான்.

    இந்த வெயிலிலும் மூளை உருகி படிச்சமைக்கு நன்றிங்க.


    Quote Originally Posted by தாமரை View Post
    அதான் இங்க வழிஞ்சிருக்கு...

    Quote Originally Posted by samuthraselvam View Post
    ஆதவ் அண்ணா... உங்களுக்கு தான் சொல்லுறாரு....
    நல்லா பாருங்க.... உங்களைத்தான் சொல்றாரு... (எஸ்கேப்)

    நன்றி தாமரை+லீலூமா முறையே அண்ணாச்சி, அக்காச்சி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by samuthraselvam View Post
    ஆதவ் அண்ணா... உங்களுக்கு தான் சொல்லுறாரு....
    Quote Originally Posted by ஆதவா View Post

    இந்த வெயிலிலும் மூளை உருகி படிச்சமைக்கு நன்றிங்க.



    நல்லா பாருங்க.... உங்களைத்தான் சொல்றாரு... (எஸ்கேப்)
    யாருக்கு இருக்குமோ அவங்களது தானே உருகி வழியும். இதுக்கெல்லாமா சண்டை போட்டுக்கறது..


    என் பங்குக்கு....


    தார்ச்சாலை முத்தங்கள் பட்டு
    நிலங்கள் போலவே
    கால்களும் வெடித்துக் கிடக்கின்றன

    மழைநீரோ குடிநீரோ
    காத்துக்கொண்டிருக்கிற
    சடங்கள் இரண்டும்

    தூரத்தெரிகிற கருநிறம் கண்டு
    அல்ப ஆசையை வளர்த்துக் கொள்கின்றன
    முகிலோ தண்ணீர் லாரியோ என்று!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    யாருக்கு இருக்குமோ அவங்களது தானே உருகி வழியும். இதுக்கெல்லாமா சண்டை போட்டுக்கறது..
    இப்ப நான் இருக்குன்னு சொல்லவா.... இல்லைன்னு சொல்லவா????

    Quote Originally Posted by தாமரை View Post
    தார்ச்சாலை முத்தங்கள் பட்டு
    நிலங்கள் போலவே
    கால்களும் வெடித்துக் கிடக்கின்றன

    மழைநீரோ குடிநீரோ
    காத்துக்கொண்டிருக்கிற
    சடங்கள் இரண்டும்

    தூரத்தெரிகிற கருநிறம் கண்டு
    அல்ப ஆசையை வளர்த்துக் கொள்கின்றன
    முகிலோ தண்ணீர் லாரியோ என்று!
    கலக்கல்...

    சடங்களா தடங்களா .??...

    ரொம்ப அருமையாக இருக்கிறது.!!!!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by தாமரை View Post
    யாருக்கு இருக்குமோ அவங்களது தானே உருகி வழியும். இதுக்கெல்லாமா சண்டை போட்டுக்கறது..

    Quote Originally Posted by ஆதவா View Post
    இப்ப நான் இருக்குன்னு சொல்லவா.... இல்லைன்னு சொல்லவா????





    சடங்களா தடங்களா .??...
    இப்போ இல்லேன்னு சொல்லலாம். இருந்திருந்தாலும் உருகி வழிஞ்சதில காலி ஆகி இருக்குமே...

    சடங்கள் தான்,,,, ஜீவனற்றுப் போனவை.. வயலும் அவனும்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 10 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •