நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலந்துக்குறேன்
நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலந்துக்குறேன்
அன்புடன் ஆதி
குளிக்க நீரில்லை துவளவில்லை உடல்
தன் நீரிலேயே குளித்தது
வியர்வை!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
வெயில் காணாதபோதும் துவளவில்லை மனம்,
வெயில் கவிதைகளில் குளிர்காய்ந்துகொள்ளும் இனி.
நாக்கு வறள
பசையாய் எஞ்சி இருக்கும்
சிறிது எச்சிலை
தொண்டை வலிக்க விழுங்கி
வெறிச்சோடி இருக்கும் வீதிகளில்
இரைக்க இரைக்க
மிதிவண்டி மிதித்தபடி
நகர்வலம் வருகிறேன்
நானே ராஜா!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
வடிந்தோடும் நீரில்
கசந்து குளுமைதேடும் விழிகளில்
விசிறியாய் மாறும் விரல்களில்
இருவாரம் கவனிக்கப்படாத தாடையில்
காலர்பட்டை தேய்க்கும் பின்னங்கழுத்தில்
இப்படி இப்படியாய்
எங்கும் தன்னைக் காட்டிக் கொள்கிறது
புறப்புழுக்கம்
கைவிடப்பட்ட குட்டையைப் போல
அடையாளமற்று கிடக்கிறது
மனப்புழுக்கம்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
சுள்ளென உறைக்கிறது..
உடம்பெல்லாம் எரிகிறது..
காணக் கூசுகிறது கண்கள்
நாவெல்லாம் வறண்டு அசைய மறுக்கிறது
வியர்த்து வழிகின்றது
கால்கள் நடுங்குகிறது
உடலெல்லாம் சக்தியற்று
துவண்டு போகிறது
யாரின் நிழலாவது தேடி ஓடி
அந்த இருட்டில் ஒளிந்து கொள்ள தோன்றுகிறது
சந்திக்க திராணியில்லை
உண்மை வெயிலே!!!
(உண்மைக்கும் வெயிலுக்குமான சிலேடையாகக் கருதவும்)
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தண தணவெனக் கொதித்து
நெஞ்சு பிளந்து
செத்த பாறையில்
உடல் முழுக்கப் புழுதியோடு
ஒற்றைக் காலில்
தவம் செய்கிறது
சின்னஞ்சிறு அரச மரம்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஆசை மட்டுமல்ல,
வெயிலும் வெட்கமறியாது.
அறிந்திருந்தால்….
மதிலுக்குள்ளும், மாடியிலும்
வழக்கமற்ற வழக்கமாய்
மேலாடை துறந்துலாத்தும் ஆடவரையும்,
தார்ச்சாலையோரத் தர்பூசணிச்சாறு வழியும்
முழங்கைதனை நாவால் வழித்திடும்
நாசூக்கு மறந்த நங்கையரையும்,
மனமுதிர்த்த மதியா வாயிலானாலும்
மரமுதிர்த்த நிழலில் நின்றிளைப்பாரும்
திரைமனங்களின் சில மறைமுகங்களையும்,
வரவேற்பறைக் காத்திருப்பின் புழுக்கத்தில் நெளிந்து
மின்விசிறிப் பொத்தான் தேடி
அனுமதியின்றி சொடுக்கும் கரங்களையும்
காணவிட்டு வேடிக்கை காட்டுமா?
கண்மணியின் இந்தக் கவிதையும் வெயில் கவிதைதானே
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16072
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
கட்சித் தொண்டர்கள் தங்கள்
குண்டர்கள் முகமூடி கழற்றி
தொண்டர்களாய் மாறி
தண்ணீர் பந்தலமைக்கும்
வெக்கையான வேனிற்காலம்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
இத்திரி மன்றத்துக்கே உரிய மாபெரும் சிறப்பு....சீஸன் மாறினால்....விளையாட்டும் மாறுமே நம் காலம்....அதைப்போலவே...வெயில் தொடங்கியதும்...திரியும் தொடங்கியதே....இது மன்றத்தின் சிறப்புகளில் ஒன்று.
திரி வளர்ந்து குளிர்ந்திட வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks